Friday, 20 October 2017

ISIS : பின்னணியும் முன்னணியும்

ISIS : பின்னணியும் முன்னணியும்

சமீப காலங்களாக பத்திரிக்கைகளில் அடிபடும் பெயர் இந்த ISIS.

2016 டிசம்பர் 19 ல் ஜெர்மனியில் ஒரு சந்தையில் வாகன தாக்குதலில் வாகனம் ஓட்டியவராக கைது செய்யப்பட்டவர் ஒரு இசுலாமியர். குற்றவாளியாக இல்லாததால் பின்னர் விடுவிக்கப்பட்டார். காண்க:

2016 ஜூலை 14 ல் பிரான்சில் நைஸ் (Nice) நகரில் வாகனம் ஒரு விழாக்கூட்டத்தில் புகுந்ததில் 80 பேர் பலி; வாகன ஓட்டி ஒரு இசுலாமியர். அவர் கொல்லப்பட்டார் ஆனால் அவர் மதவாதி இல்லை என பின்னர் தெரியவந்தது. காண்க:

என்னதான் நடக்கிறது ? உண்மையில் அவர்கள் யார் ?? அவர்களின் பின்னணி என்ன ???

இது ஒரு உண்மைக்கான தேடல் முயற்சிதான். எந்தவித உள்நோக்கத்தோடும் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்தை திணிக்க விரும்பாத மெய்ப்பொருள் காணும் முயற்சி.

மூன்று தலைப்புகளில் தேடலாம்:
I. யார் ISIS ?
II. பொய்ப் பிரச்சாரங்களும், பின்னணியும்
III. யார் பயங்கரவாதிகள்?

I. யார் ISIS ?
1. ISIS ம் - இன்றைய உடனடி சர்வதேச சூழல்களும்.

இன்றைய நிலையில் ISIS என்ற அமைப்பு சிரியாவோடு தொடர்பு படுத்தப்படுகிறது.

ரஷ்ய ஆதரவு உடைய சிரியாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசாத் ஆட்சியை கவிழ்த்து சிரியாவில் கிடைக்கும் பெட்ரோல் வளத்தைகொள்ளையடிக்க அமெரிக்கா ISIS ஐ பயன்படுத்தி பெட்ரோலை கடத்தி அருகில் உள்ள நாடான அமெரிக்க ஆதரவு துருக்கிக்கு கொண்டு செல்கிறது. இதற்காக ISIS என்ற அமைப்புக்கு அமெரிக்க இராணுவம் பாதுகாப்பு தருகிறது.

அமெரிக்க ஆதரவு துருக்கி வீரர்களுடன் ISIS எனப்படும் குழுவினர் இணைந்திருக்கும் காணொளி:
இது பற்றிய ஒரு கட்டுரை காண:

அமெரிக்க ஆதரவு துருக்கி சிரியா நாட்டு ISIS எனப்படும் அமைப்புகளிடமிருந்து எண்ணையை பாதி விலைக்கு வாங்குவது தொடர்பாக ஒரு கட்டுரை:

ISIS ஏன் உருவாக்கப்பட்டது ? உடனடி காரணங்கள்:

1. அராபிய நாடுகளில் பிரித்தாளும் சூழ்ச்சியை இன்றைய சூழ்நிலைக்கேற்ப அரங்கேற்ற,

2. வளர்ந்து வரும் ஈரானின் அரசியல், பொருளாதார சக்தியை ஒடுக்க.

இத்தகைய சதி வலைப்பின்னலை அமெரிக்கா செய்வது இன்று நேற்றல்ல

1. 1970 களில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு CIA எகிப்தில் Muslim Brotherhood என்ற அமைப்பை உருவாக்கி ஆப்கானிஸ்தானில் நுழைந்த சோவியத் யூனியனுக்கு (இன்றைய ரஷ்யா) எதிராகவும், அரேபிய நாடுகளில் பொதுவுடைமை பரவாமல் தடுக்கவும் உருவாக்கியது.

2. இந்தோனேசியாவில் அன்றைய சுகர்னோ ஆட்சிக்கு எதிராக Sarekat Islam என்ற அமைப்பை உருவாக்கியது.

3. பாகிஸ்தானில் பூட்டோவுக்கு எதிராக Jamaat-e-Islami என்ற அமைப்பையும் உருவாக்கியது.

4. ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்த சோவியத்துக்கு எதிராக Al Qaeda

5. இங்கிலாந்தின் வெளியுறவுத்துறைச் செயலாளர் ராபின் குக் (Robin Cook) அமைச்சரவையில் சொன்னார்: அல் குவைதா மேற்கத்திய புலனாய்வுத்துறையின் உருவாக்கம்.

6. ISIS - Islamic State of Iran and Syria என்பதுதான் இதன் விளக்கம்.

இந்த அமைப்பு ஈராக் நாட்டில் அல் குவைதா என்றே அழைக்கப்படுகிறது. 2010 க்கு பிறகு ISIS ன் கவனம் சிரியாவுக்கு மாற்றப்படுகிறது. அதனால் தான் இன்று சிரியாவில் இன்று நடக்கும் உள்நாட்டு போர். இப்போரை 3 வகையான போர் ஆக பார்க்கலாம்.

(1) சிரியா அரசுக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையே
(2) ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே
(3) அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே
[தற்போதைய சிரியா அதிபர் (Bashar Al Assad) ரஷ்ய ஆதரவாளர்]

7. அமெரிக்காவின் அராபிய மத்திய கிழக்கு நாடுகளுடனான அரசியல் கொள்கை இரண்டு விசயங்களை
மையமாகக் கொண்டது.

(1) எண்ணெய் வளம். (ஈராக் ஆக்கிரமிப்பு மூலம் நிறைவேறியது)
(2) இஸ்ரேல் நாடு. (இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தரும் லெபனானின் ஹிஸ்புல்லா (Hezbollah) மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் (Hamas) இயக்கங்களுக்கு ஆதரவு தரும் ஈரான் மற்றும் சிரியா நாடுகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்க இஸ்ரேல் விரும்புகிறது. அமெரிக்கா அரசை ஆட்டிப்படைப்பது அங்கு இருக்கும் வலிமையான இஸ்ரேலிய யூத குழுக்களே என்பது பலரும் அறிந்த உண்மை)

எனவே சிரியா அரசைக் கவிழ்க்கவும், ஈரானை பயமுறுத்தவும் ISIS பயன்படுத்தப்படுகிறது.

8. ISIS அமெரிக்காவுக்கு தேவை : எதற்கு?

(1) அமெரிக்க திட்டத்திற்கு ஒத்து வராத அராபிய நாடுகள் மீது போர் தொடுக்க,
(2) அமெரிக்காவின் உலகளாவிய அத்துமீறிய ராணுவ தாக்குதல்களை நியாயப்படுத்த,
(3) அமெரிக்க நாட்டிற்குள்ளேயே அதிகபட்ச கண்காணிப்புகளை உருவாக்கி எதிர்ப்புகளை சமாளிக்க

2001ல் ஜார்ஜ் புஷ் ஈராக் மீது தொடுத்த போரால் அமெரிக்க மக்களுக்கு வரி என்ற பெயரில்
6.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரிச்சுமை.

ஆனால், சம்பாதித்தவர்கள் ராணுவ தளவாட உற்பத்தி செய்யும் பல அமெரிக்க எம்.பி.க்கள்.
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் போருக்கு பிந்தைய சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் 70
அமெரிக்க நிறுவனங்கள் 24 பில்லியன் டாலருக்கு வருமானம் பார்த்தன.

உலகளாவிய "தீவிரவாத" நடவடிக்கைகளுக்கும்
அமெரிக்காவின் திட்டமிட்ட போர்களுக்கும்
நெருங்கிய தொடர்பு இருப்பதைக்காணலாம்.

அல் குவைதா என்றால் அரபு மொழியில் தகவல் தொகுப்பகம் (Database) என்றே பொருள். சோவியத்துக்கு எதிரான அமெரிக்க CIA வால் பயிற்றுவிக்கப்பட்ட, சவூதி அரேபியாவின் பொருளாதார துணையோடு செயல்படும் அனைத்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பகம் என்றே அர்த்தம் பெறும். மேலும் விபரம் அறிய காண்க:

ISIS என அழைக்கப்படும் இன்றைய குழந்தைக்கு
அப்பன் அல் குவைதா
பெரியப்பன் தலிபான்
தாத்தன் முஜாகிதின்

2. ISIS யார் இவர்கள்? இவர்களின் பின்னணி என்ன?

1979 ல் அன்றைய (கம்யூனிச) பொதுவுடைமை நாடு சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் நுழைந்தபோது அரபு நாடுகளிலும் பொதுவுடைமை தத்துவம் பரவிவிடும் என்று பயந்த அமெரிக்கா,

ஆப்கானிஸ்தான் ஆட்களுக்கு ஆயுதம் கொடுத்து சோவியத் ராணுவத்தை எதிர்க்கும் தீவிரவாதிகளை உருவாக்கியது.

முஜாகிதீன் என்றால் போராளி என்று அர்த்தம்.

இவர்களை வழிநடத்தியது சவூதி அரேபிய நாட்டை சேர்ந்த
அமெரிக்க கைக்கூலி ஒசாமா பின் லேடன்

சோவியத்தை எதிர்த்த 
அன்றைய முஜாகிதீன் போராளிகள்
அமெரிக்காவின் செல்லப்பிள்ளைகள்.

அன்றைய அமெரிக்க அதிபர் ரீகனோடு

ஆப்கன் தீவிரவாதிகளை உருவாக்கிய அமெரிக்கா
இந்த திட்டத்திற்கு வைத்த பெயர்
சூறாவளி ஆபரேஷன் (Operation Cyclone)

(சதாம் ஹுசைனுக்கு எதிராக ஈராக்கை எதிர்த்த அமெரிக்க புஷ் அந்தப் போருக்கு வைத்த பெயர் Operation Desert Storm என்பது நமக்கு நினைவு இருக்கும்)

அதே முஜாகிதீன் போராளிகள் சோவியத் யூனியன் தோல்வியடைந்து ஆப்கானிஸ்தானை விட்டு கிளம்பியதும் கையில் மிச்சம் இருந்த ஆயுதங்களோடு முஜாகிதீன்கள் தலிபான்கள் ஆனார்கள்.

அமெரிக்கா அன்று முஜாஹிதீனை உருவாக்கியது
இன்று அதன் வடிவம் ISIS

II. கோயபல்ஸ் வழி தொடரும் தொலைக்காட்சி பொய் பிரச்சாரம்

தொலைக்காட்சிகள் மக்களுக்குத் தரும் செய்திகள் திரித்துத் தரப்படும் செய்திகளாகவே இருப்பதை கீழுள்ள படம் தெளிவாக்கும்.

“The truth is, there is no Islamic army or terrorist group called Al Qaida. And any informed intelligence officer knows this. But there is a propaganda campaign to make the public believe in the presence of an identified entity representing the ‘devil’ only in order to drive the ‘TV watcher’ to accept a unified international leadership for a war against terrorism. The country behind this propaganda is the US and the lobbyists for the US war on terrorism are only interested in making money.”
காண்க: 

உண்மையில் அராபிய நாடுகளில் நடப்பதென்ன?

2008 வருடத்திற்கு முந்தைய 25 வருடங்களில் மொத்தம் நடைபெற்ற 1840 தற்கொலைத் தாக்குதல்களில் 86 சதவிகிதம் அமெரிக்கா ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பிற்கு பின்னரே நடந்திருக்கிறது.
2001-2008 ல் மட்டும் ஈராக்கில் 920, ஆப்கானிஸ்தானில் 260.

ஆனால் ஊடகங்களில் சொல்லப்படுவதென்ன ??

# பிரான்சில் நைஸ் (Nice) நகரத்தில் விழாக்கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் மீது லாரி ஏற்றி 80 பேரை கொன்ற அந்த லாரி ஓட்டுநர் ஒரு பிரெஞ்சு டுனீசிய ஆள். அவருக்கும் இசுலாமிய அமைப்புக்கும் எப்படியாவது தொடர்புகளை கண்டுபிடிக்க பிரெஞ்சு போலீஸ் முயன்றும் முடியவில்லை. ஆனால் பிரெஞ்சு அதிபர் ஹாலண்டே (Francois Hollande) இதற்கு ராணுவ பதில் தரப்படும் என்கிறார்.

# நைஸ் நகரில் 2016 ஜூலை 14ல் 84 பேர் படுகொலையை ஏற்படுத்திய நபர் (Bouhlel) 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு குடியுரிமை பெற்ற நபர். ஏற்கனவே உள்ளூர் காவல் அதிகாரிகளுக்கு நன்கு அறிமுகம் ஆனவராய் இருக்கிறார்.
# வாகனம் வேகமாக ஓட்டிக்கொண்டே காவலர்களை துப்பாக்கியால் சுட்டதாக சொல்கிறது காவல் துறை. எப்படி சாத்தியம்?
# பிறப்பால் இசுலாமியர் ஆனாலும் மத நம்பிக்கைகளை பின்பற்றாதவராகவே அவருக்கு அருகில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.
# அன்றைய தினம் வந்திருந்த அதிகமான மக்களுக்கு ஏற்ற வகையில் காவலர் பாதுகாப்பு இல்லை. அத்தகைய பெரிய மக்கள் கூட்ட சூழலில் சிறிய வாகனங்கள் கூட அருகில் செல்லவே முடியாமல் இருக்கும். ஆனால் எப்படி அவ்வளவு பெரிய லாரி எந்தவித தடையும் இல்லாமல் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது.
# அந்த லாரி நுழைவதற்கு சற்று முன்பு தடைகள் அகற்றப்பட்டிருக்கின்றன, எதற்கு?
மேலும் விபரங்களுக்கு காண்க:

2015 டிசம்பர் 15ல் பாரிஸ் நகரில் ஏற்படுத்தப்பட்ட வன்முறையிலும் பெல்ஜிய உளவு துறையினர் முன்னமே தகவல் கொடுத்தும் தீவிரவாதியை "தப்பிக்க" விட்டது பிரெஞ்சு அரசு. காண்க:

இவை எல்லாவற்றையும்விடமறைக்கப்படும் உண்மை:
ISIS தலைவனே ஒரு இசுலாமியன் அல்ல, யூதன்.

ISIS இயக்கத்தின் தலைவனாக சொல்லப்படுபவன் பெயர் Abu Bakr al-Baghdad.
"Caliph" அ தலைவன் என்று சொல்லப்படும் இவன் இசுரேலிய உளவுப்படையான மொசாட் (Mossat) இயக்கத்தினைச் சேர்ந்த இசுரேலிய உளவாளி. இதை ஒரு பிரெஞ்சு பத்திரிகை வெளியிட்டது.

 
Abu Bakr al-Baghdad என்பவனின் உண்மையான பெயர் Shimon Elliot. இவன் ஏற்கனவே அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் இஸ்ரேலிய படைகளில் பணியாற்றியவன். மேலும் விபரங்களுக்கு காண்க:

மேலும், மேற்கத்திய சாதாரண கிறித்தவ மக்கள் மத்தியில் இசுலாமியர் மீதான வெறுப்பை உருவாக்க, வளர்க்க தொடர்ந்து இசுலாமியர் கொலைவெறியர்கள் என்ற பொய் பிம்பத்தை தொடர்ந்து பரப்பிக்கொண்டு வருகிறார்கள். இசுலாமியர் கிறித்தவத்தை வெறுப்பவர்கள், கிறித்தவர்களை கொல்பவர்கள், ஏன் குழந்தைகளைக்கூட கொல்பவர்கள், உயிரோடு எரிக்கவும் தயங்காதவர்கள் என.

ISIS இயக்கம் அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA வால் உருவாக்கப்பட்டு பிரிட்டிஷ் நாட்டால் நியமிக்கப்பட்ட சவூதி அரேபிய வாலாபி (Wahhabi) என்ற அமைப்பின் நிதி ஆதாரத்தோடு பழைமை வாத இசுலாமியத்தை பரப்புகின்ற பெயரில் செயல்படுகின்ற அமெரிக்க கார்பொரேட் நிறுவனங்களின் ரகசிய அமைப்பு.

தற்சமயம் ISIS இயக்கம் துருக்கியின் தற்போதைய அதிபர் எர்டோகன் (Erdogan) என்பவரால் நேட்டோ (NATO) அமைப்பிற்காக செயல்படுகிறது. எர்டோகன் ஓர் இசுலாமிய பழமைவாதியாக இருந்த போதிலும் இசுரேலிய அரசோடு மிக நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்.

ISIS இயக்கத்தை எதிர்ப்பது போல காட்டிக்கொண்டாலும் அந்த இயக்கத்தை உருவாக்கி வளர்த்து ஆளாக்குபவர்கள் அமெரிக்க, இங்கிலாந்து, இசுரேலிய, சவுதி அரேபிய, துருக்கி நாட்டு உளவுத்துறை மற்றும் ஆட்சியாளர்கள்.

ISIS இயக்கத்திற்கு பல பெயர்கள் உண்டு. அவைகளில் சில:

(1) ISIS - Islamic State of Iraq and Syria
(2) ISIL - Islamic State of Iraq and the Levant
(3) Daesh
(4) Al Qaeda in Iraq

மேலும் விபரங்களுக்கு காண்க:
 
ISIS செயல்படுவதாக மேற்கத்திய ஊடகங்கள் சொல்லும் நாடுகள் எல்லாம் பெட்ரோல் வளம் உள்ள நாடுகளாக இருப்பதை நாம் கவனிக்க தவறக்கூடாது.

கடாபி ஆட்சியில் அமைதிப்பூங்காவாக இருந்த லிபியா இப்போது இவர்களின் ISIS களால் தொடர் வன்முறைக்களமாக மாறியிருக்கிறது.

இதே நிலைதான் சதாம் ஹுசைன் இல்லாத ஈராக்கிலும் தற்போதைய சிரியாவிலும்.

ஆப்பிரிக்க மாலி நாட்டிற்குள்ளும் நுழைந்த பிரெஞ்சு இராணுவம் இரண்டு இராணுவ போர்களை (Operation Serval, Operation Barkhane) உருவாக்கியும் இன்னும் அமைதியை நாட்டில் கொண்டுவரவில்லை, பிரெஞ்சு இராணுவமும் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதாய் இல்லை.
மேலும் விபரங்களுக்கு காண்க:

அமெரிக்காவுக்கு அடிமை ஆகாத நாடுகள் அணு ஆயுத வன்முறை நாடுகளாக அறிவிக்கப்படும் கேவலம்:
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்:

வேறொரு நாட்டிற்குள் ஈரான் நுழைந்தது என்றால் அது 1738 வருடம்தான். ஆனால்
அமெரிக்கா 1776 ல் பெற்ற சுதந்திரத்திற்கு பிறகு 53 முறை பிற நாடுகள் மீது ஆக்கிரமிப்பு நடத்திய நாடு.
ஈரான் அணு போராயுத உற்பத்தி வேலையை 2003 ம் ஆண்டிலேயே நிறுத்தி விட்டதாக அமெரிக்க உளவு அமைப்புகளே 2012 ல் அறிக்கைகள் வெளியிட்ட பின்னரும் இந்த ஒரு அடக்குமுறை ஈரான் மீது.
மேலும் விபரம் அறிய காண்க:

அதே போல வட கொரியா நாட்டின் மீதும் மேற்கத்திய ஊடகங்கள் எதிர்மறை பிரச்சாரம்:

ஆனால் உண்மையில்:

ஊடகம் தரும் செய்திகளில்
உலகளவில் ஆங்காங்கே இசுலாமியரின் வன்முறை என்று நோக்காது,
அவை ஊடகங்களில் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரங்கள் என்று மட்டும் கூட நோக்காது,
பரந்துபட்ட அமெரிக்க கார்பொரேட் நிறுவனங்களின் உலகளாவிய கொள்ளை களின் மீது மக்களின் கவனம் திருப்பப்படாமல் இருக்கவே, 
திட்டமிட்டு உருவாக்கப்படும் செயற்கையான கவனச்சிதறல்களாக
நாம் நோக்கத் தவறக் கூடாது.

ஏன்னா அமெரிக்க கார்பொரேட் நிறுவனங்களுக்கு எப்போதும்
ஒரு பொது எதிரி
இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.

1990 வரை பொது எதிரி பொதுவுடைமை இருந்தது;
பிறகு இப்போது இசுலாம்,
இதன் பின்னர் சீனா அல்லது தேசிய இனங்களின் எழுச்சி
என எப்போதும் அது உருவாக்கும்.

சரி நம் கவனத்தை திசை திருப்பி என்னதான் நடக்கிறது
III.
நம் கவனச்சிதறலுக்குப் பின்னால் - (1) 

9/11 இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்குப் பின்னால் சதி

(1) விமானம் மோதிய பிறகு கட்டடத்தில் இருந்த நூற்றுக்கணக்கான காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், கட்டட பராமரிப்பாளர்கள் கட்டடத்தில் பல்வேறு வெடி சத்தங்கள் கேட்டதை உறுதிப்படுத்துகின்றனர். விமானம் மோதுவதற்கு முன்னதாக கட்டட அடித்தளத்தில் வெடிச்சத்தம் கேட்டதாக அங்கே பணியில் இருந்த பராமரிப்பு பணியாளர் தெரிவிக்கிறார்.

(2) கட்டடம் இடிந்து விழுந்து கிடந்த சமயத்தில் வந்திருந்த சர்வதேச விஞ்ஞானிகள் அங்கே வெடி பொருட்களின் பாகங்களையும், இரும்பை உடனடியாக உருக்கி வெட்டும் வெடி பொருள் பாகங்களையும் கண்டெடுத்தனர்.

(3) 2500 கட்டிட நுட்பவியலாளர்களும், கட்டிட பொறியாளர்களும் இணைந்து தீவிர புலனாய்வு தேவை என்பதில் முனைப்பு காட்டினர். காரணம் இரண்டு கட்டிடங்களும் விமானம் மோதினாலும் பாதிப்பு அடையாது என்று சான்றிதழ் பெற்றிருந்த கட்டிடங்கள்.

(4) கட்டிடம் விமானங்கள் மோதி சிதறுவதை படம் பிடிக்க ஏற்கனவே அங்கே இஸ்ரேலிய புகைப்படக்காரர்கள் வந்திருகின்றனர். எப்படி அவர்கள் அதனை முன்பே அறிந்திருந்தனர்? காண்க:

(5) அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஈராக்கின் எண்ணெய் வயல்களை ஆக்கிரமிக்க 2001 செப்டெம்பர் 11 க்கு முன்னமே போட்ட திட்டங்கள். காண்க:

(6) இரட்டை கோபுரங்கள் இடிப்புக்கு பின்னணி அமெரிக்காவே. காணொளி ஆதாரம்: 

(7) முக்கியமாக ஈராக் அதிபர் சதாம் ஹுசேன் பெட்ரோல் விற்பனையை அமெரிக்க டாலருக்கு பதில் ஐரோப்பிய ஈரோவில் செய்யப்போவதாக அறிவித்தார். இதன் பின்னரே அமெரிக்கா அசாதரணமான முடிவுகளை எடுக்க ஆரம்பித்தது.

அமெரிக்க மற்றும் உலக மக்கள் மத்தியில்
ஈராக் மீது போர் தொடுக்க ஒரு காரணம் உருவாக்கவே 
தன் கட்டடம், மக்களை அமெரிக்கா பலி கொடுத்தது.

சவூதி அரேபியாவும் இரட்டை கோபுரங்களும்

இரட்டைக்கோபுர தாக்குதலின் மீதான பாராளுமன்றக் குழுவினரின் அறிக்கை 2004 ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. சமர்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில் 28 பக்கங்கள் காணாமல் போனது. மறைக்க ஏற்பாடு செய்தவர் ஜார்ஜ் புஷ். மறைக்கப்பட்ட பக்கங்களில் சவூதி அரேபியா தொடர்பான விசயங்கள் இருந்தது என சந்தேகிக்கப் பட்டது.

இந்த 28 பக்க அறிக்கை தவிர "File 17" என்ற பெயரில் விமான கடத்தல் காரர்களோடு தொடர்புடைய 18 சவூதி முக்கிய அரசு உயர் அதிகாரிகள் பெயர்கள் இருப்பதாய் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இறுதியில் அறிக்கை வெளியிடப்பட்டு உடனடியாக முடிக்கப்பட்டது. அதில் வெளியான பெயர்கள் Omar Al Bayoumi மற்றும் Saleh Al Hussayen என்ற இருவருமே சவூதிக்காரர்கள், அமெரிக்க விமானக்கடத்தல் காரர்களோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று நிரூபிக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா இரண்டு நாடுகளும் இணைந்தே அந்த இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்டன என்பது நிரூபணமானது.

மேலும் ஜார்ஜ் புஷ் குடும்பமும்
சவூதி அரேபிய அரசர் குடும்பமும்
Carlyle என்ற அமெரிக்க இராணுவ ஆயுத நிறுவனத்தின் பங்குதாரர்கள்
என்ற உண்மைகளும் வெளிவந்தன.
மேலும் விபரங்களுக்கு காண்க:  மற்றும்  காண்க:

நம் கவனச்சிதறலுக்குப் பின்னால் - (2)

அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் இங்கிலாந்து இலண்டனில் இருந்து ஆப்பிரிக்காவில் உள்ள தீவிரவாத இயக்கங்களை அழிப்பதாக சொல்லிக்கொண்டு மாபெரும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

2013 மார்ச் 8 ம் நாள் இங்கிலாந்து லண்டனில் லிங்கன்சைர் (Lincolnshire) என்ற இடத்தில் உள்ள ராயல் விமான படைத்தளத்தில் (RAF) இருந்து கொண்டு Predator என்று பெயரிடப்பட்ட ஆளில்லா விமானம் (Drone) மூலம் ஏமன், சோமாலியா மற்றும் சூடானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்ததாக சொல்கிறது.

இறந்தவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் அப்பாவிகள் உள்பட. இத்தகைய கொலைகள் சர்வதேச வரம்புகள் மீறியவை என எதிர்ப்புகள் வந்தாலும், எதிர்ப்புகள் அடக்கப்படுகின்றன.

ஆக அமெரிக்காவில் இருந்துகொண்டு இங்கிலாந்து செயற்கைக்கோள் மூலம் விமானத்தை வழிநடத்தி பயங்கரவாதிகள் என்ற பெயரில் எவரையும் கொல்லலாம்; இதுதான் அமெரிக்க வல்லாதிக்க நீதி.
மேலும் விபரங்களுக்கு காண்க:

இதன் தொடர்ச்சியாக...

பிரிட்டன் பத்திரிக்கையாளர் ஜான் பில்ஜர் (John Pilger) சொல்வது போல, அமெரிக்க ஒரு மாபெரும் ஆக்கிரமிப்பு திட்டத்தோடு ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா, சூடான், அல்ஜீரியா, நைஜர் உள்ளிட்ட 35 நாடுகளுக்குள் தனது படையை இறங்கியிருக்கிறது. ஈராக், ஆப்கானிஸ்தான், ஏமன் நாட்டில் நடந்த ஆக்கிரமிப்பு போலவே நடக்க இருக்கிறது. இது ISIS எதிர்ப்பு என்ற பெயரை பயன்படுத்தி ஆப்பிரிக்காவில் காலூன்ற பேராவலோடு களமிறங்கி இருக்கிறது. சீனாவுக்கு போட்டியாக பலத்த வன்முறை போர்களுக்கு மத்தியில் நடக்க இருக்கிறது.

அமெரிக்க ஆப்பிரிக்க கட்டுப்பாட்டகம் (AFRICOM-US African Command) லிபியா நாட்டை மையமாகக் கொண்டு முழு ஆப்பிரிக்காவையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது. இப்போது தெரிகிறதா ஏன் கடாபி கொல்லப்பட்டார் என்று? இந்த அமெரிக்க போர் ஆக்கிரமிப்பு, பெட்ரோல், எரிவாயு, தங்கம், இரும்பு, யுரேனியம் போன்ற ஆப்பிரிக்க இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கவே.

சீனாவுக்கு பெட்ரோல் மூன்றில் ஒரு பங்கு ஆப்பிரிக்காவிலிருந்து செல்கிறது. கடந்த 10 ஆண்டுகளின் தொடக்கத்தில் 5 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்த ஆப்பிரிக்கா இறுதியில் 93 பில்லியன் டாலர் அளவுக்கு சீனாவுக்கான ஏற்றுமதியில் வளர்ந்திருக்கிறது. சீனாவும் ஆப்பிரிக்காவுக்கு வழங்கிய கடன் தொகையை கடந்த 3 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. சீனாவின் Sinopec என்ற பெட்ரோல் நிறுவனம் ஆப்பிரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் வள நாடான அங்கோலாவில் பெரிய அளவில் பெட்ரோல் கொள்ளை நடத்த இருக்கிறது.

அமெரிக்காவோ ஆப்பிரிக்காவில் 14 நாடுகளில் நடக்கும் தூண்டிவிடப்பட்ட உள்நாட்டு போர், 36 நாடுகளில் அமெரிக்காவின் உலக வங்கி (World Bank), மற்றும் சர்வதேச நிதியம் (IMF) காரணமாக கடன் மூலம் நாட்டை அடிமைப்படுத்தும் திட்டம் இவற்றால் கொடூர வலைப்பின்னலால் ஆப்பிரிக்காவை சூறையாட தொடங்கியிருக்கிறது. மேலும் விபரங்களுக்கு காண்க:

ஆப்பிரிக்க கண்டமே அழிவின் விளிம்பில், காரணம் அவர்களின் இயற்கை வளங்கள் நீதி, சமத்துவம் என்று பேசும் மேற்கத்திய நாடுகளால் கொள்ளை அடிக்கப்படுகின்றன.

ஆப்பிரிக்க அகதிகள் அல்லது ஆசிய அகதிகள் ஐரோப்பாவிற்குள்ளும்,
மெக்சிகோ அகதிகள் அமெரிக்காவிற்குள்ளும் நுழையக்கூடாது
என சொல்லும் இந்த மேற்கத்திய நாடுகள்
ஆப்பிரிக்க நாடுகளுக்குள் அனுமதி இல்லமாலேயே நுழைந்து ஆக்கிரமிக்கின்றன.

உள்நாட்டு கலவரங்களை இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் உருவாக்குகின்றன, இராணுவ உதவி என்ற பெயரில் நாட்டை ஆக்கிரமிக்கின்றன, கொள்ளை அடிக்கின்றன. ஆப்பிரிக்கர்களின் உழைப்பு கொள்ளை போகின்றது.

பிரெஞ்சு ராணுவம் மட்டுமே கீழே இத்தனை ஆப்பிரிக்க நாடுகளை ஆக்கிரமிக்கிறது. ஆனால் அதன் நாட்டில் ஒரே ஒரு ஊரில் இசுலாமிய தீவிரவாதம் நுழைந்து விட்டதாய் சொல்லி உலகத்தை ஏமாற்ற நினைக்கிறது. அந்த தீவிரவாதத்தையும் தடுக்கவே என்ற பொய்க்காரணம் காட்டி தனது
உலகளாவிய இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துகிறது பிரான்ஸ்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சொகுசு வாழ்க்கை
ஆப்பிரிக்க மக்களின் இரத்தத்தால் உருவாகிறது
என்பதை அறிந்தும் அறியாமலே இருக்கிறது
அவர்களின் ஆடம்பர வாழ்க்கை.

ஆப்பிரிக்கா மேற்கத்திய நாடுகளிடமிருந்து ஒவ்வோர் ஆண்டும் 50 பில்லியன் டாலர் உதவி என்ற பெயரில் பெறுகிறது. ஆனால் பல்வேறு வளக்கொள்ளை, வரிகள், பணமதிப்புக்குறைப்பு, கடனுக்கு வட்டி போன்றவை பெயரில் மேற்கத்திய நாடுகள் கொள்ளையடிப்பது 1. 4 டிரில்லியன் டாலர்கள்.

ஆப்பிரிக்கருக்கான உதவியை விட மேற்கத்தியர்களின் கொள்ளை 233 மடங்கு அதிகம்.
மேலும் விபரங்களுக்கு காண்க:

நம் கவனச்சிதறலுக்குப் பின்னால் - (3)

எது உலகளாவிய பயங்கரவாதம்
உலக மக்கள் தொகையில்
3 . 5 சதவிகிதம் உள்ள அமெரிக்கா 35 % சொத்துக்களையும்
6 சதவிகிதம் உள்ள மேற்கு ஐரோப்பா 31 % சொத்துக்களையும்
அபகரித்துள்ளன.

இந்தக் கொள்ளையை தக்கவைக்க இராணுவத்தை பயன்படுத்துகின்றன

1. யார் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது ?

2. யார் அணு ஆயுத சோதனைகள் நடத்துவது?

3. யார் அணு ஆயுதங்களை அதிகம் வைத்திருப்பது?

4. யார் காடுகளை அழிப்பது ?

5. பிரேசிலின் அமேசான் காடுகள் அழிவுக்கு காரணம் யார்?

6. இந்தோனேசிய காட்டு வள கொள்ளைக்கு யார் காரணம்?

7. மூன்றாம் உலக, ஏழை நாடுகளின் காட்டு வளங்கள் எங்கே செல்கிறது?

திருடனே, இந்தா ஓட்றான் திருடன், பிடி அவனை, என்பது போலத்தான்
இன்றைய சர்வதேச கார்பொரேட் நிறுவனங்கள் பொது மக்களை
பொய்யான பயங்கரவாதங்களை சொல்லி ஏமாற்றி கொள்ளை அடிக்கின்றன.

யார் உண்மையான பயங்கரவாதிகள்?

                                                                                தொடர்ந்து தேடுவோம்...

No comments:

Post a Comment