Wednesday, 25 October 2017

அப்போது தமிழர் ; இப்போது யூதர் :-

அப்போது தமிழர் ; இப்போது யூதர் :-

யூதர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு இரண்டுபேர்களுமே வஞ்சிக்கப்பட்ட ஒர் இனம்.யூதர்களை இலுமினாட்டிகள் என எல்லோரும் முகநூலில் எழுதி வருகிறார்கள்.எழுதுபவர்கள் ஒன்றை தெரிந்து கொண்டு எழுதுங்கள்.

முன்னோரு காலத்தில் தமிழ்மொழியை உபயோகப்படுத்தி கொண்டு உலகம் எங்கும் இதே குழு வியாபாரம் என்ற பெயரில் பல கொடுமைகளை செய்தது.அப்போது பல பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அவர்களை இதே போல வெறுத்தனர்.இப்போது எப்படி #இலுமினாட்டி என்ற வார்த்தையோ அப்போது #சாத்தன் ( வியாபரம் செய்த தமிழ் மொழி பேசியவன்)  என்ற வார்த்தை பயண்படுத்தப்பட்டது.

அந்த தீயவர்களை குறித்த அந்த வார்த்தை தான் உலகம் எங்கும் தற்போது பரவி கிடக்கிறது.

- English Language: Satan
- Afrikaans Language : Satan
- Albanian Language : Satani
- Arabic Language : "Shaytan"
- Armenian Language :satani
- Azerbaijani Language : Åžeytan
- Basque Language : Satan
- Belarusian Language :sejtankij
- Bulgaria Language :Сатаната
- Catalan Language : Satanà s
- Chinese (Simplified) Language :shawshaw
- Croatian Language : Sotona
- Czech Language : Satan
- Danish Language : Satan
- Dutch Language : Satan
- Estonian Language : Saatan
- Filipino Language : Satanas
- Finnish Language : Saatana
- French Language : Satan
- Galician Language : Satanás
- German Language : Satan
- Haitian Creole Language : Satan
- Hebrew Language: şeytan
- Hindi Language :saiththaan
- Hungarian Language : Sátán
- Icelandic Language : Satan
- Indonesian Language : Setan
- Italian Language : Satana
- Latvian Language : S�tans - Lithuanian Language : Šėtonas
- Malay Language : Setan
- Maltese Language : Satana
- Norwegian Language : Satan
- Polish Language : Szatan
- Portugese Language : Satanás
- Romanian Language : Satana
- Russian Language :Szatan
- Slovak Language : Satan
- Slovenian Language : Satan
- Spanish Language : Satanás
- Swahili Language : Shetani
- Swedish Language : Satan
- Turkish Language : Åžeytan
- Vietnamese Language : Satan
- Welsh Language : Satan

அதனால் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த மொழியை பேசிய அனைவரையுமே இப்படி நினைத்து இருந்தால் நமது நிலைமை என்ன என்பதை யோசித்து பாருங்கள்.

ஒரு குறிப்பிட்ட கலப்பு ஏற்படாத ஒரு குடும்ப வாரிசு இனம் இந்த உலகத்தை ஆளுகிறது.அவர்கள் செய்யும் அத்தனை தீமைகளையும் வேறு ஒரு இனத்தின் மீது போட்டு அதை கடந்து செல்வதால் தான் இத்தனை நூற்றாண்டு கழித்தும் அவர்களை அடையாளப் காணமுடியவில்லை.

ஒரு  விடயத்தை நினைவில் வைப்போம்.அவர்கள் உருவாக்கிய இந்த ஊடகம் மூலம் அவர்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு அவர்கள் முட்டாள்கள் இல்லை.எதிரி பலசாலி என்பதை நினைவில் நிறுத்துவோம்.நமது பலத்தை ஆராய்வோம் அதற்கான நேரம் இது...

கஞ்சா விற்று பணம் சம்பாரித்த #ஜாவா_வாசுதேவன

படம் :- 1
பல ஆண்டுகளுக்கு முன் கோவையில் ப்ருப்பாண்ட் ரோடு மேல்பாலத்தின் கீழ்பகுதி குதிரை வண்டி லாயத்தில் கஞ்சா விற்று பணம் சம்பாரித்த #ஜாவா_வாசுதேவன். இவருடைய #கஞ்சா தொழிலுக்கு பாதுகாப்பாக ரிச்சர்ட் என்ற ரவுடியும் உண்டு.

படம் :- 2 ஏற்கனவே சொந்த மனைவியை கொலை செய்திருந்த ஜாவா வாசு தேவன். இம்முறை #ரவுடி_ரிச்சர்ட்டுடன் போட்டி போட்டுக் கொண்டு ஒரு பெண்னை காதலித்து வைத்து கொண்டான். பின்னர் அப்பெண்னையும் ரிச்சர்ட்டுடன் நடந்த மோதலில் அப்பெண் கானா பினமாகி போனது. ( இன்றுவரை வழக்கு நிலுவையிலே உள்ளது)

படம் :- 3 தன் பணத்தை வைத்து தன் மீதுள்ள வழக்குகளை சரிகட்ட சாமியார்களின் கூடாரத்திற்குள் நுழைந்தார் ஜாவா வாசுதேவன்.
போலிச் சாமியார் பட்டறையில் பலமாக பட்டை தீட்டப்பட்ட பின் ஜாவா வாசுதேவன், 
#சத்குரு_ஜக்கிவாசுதேவ் வாக மாறி அரசியல்வதிகளை தேடி புறப்பட்டார்.

படம் :- 4
அரசியல் களத்தில் தேட ஆரம்பித்த போது தமிழ்நாட்டில் எந்த கட்சியும் துனை போகாத போது, தழிகத்தில் விலை போகாத பாஜக கட்சி முன் வந்தது. அதன் பிரபலங்களை வைத்து #ஈஷா_பவுண்டேசன் என்ற பெயரில் தொண்டாமுத்துர் காட்டுப்பகுதியில் பல ஏக்கர் நிலங்கள் கையப்படுத்தி இன்று அந்த பகுதியில் செல்ல வன விலங்குகளே அச்சப்படும் அளவுக்கு உள் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

படம்:- 5
நக்கீரன் புகழ் #நித்தியானந்த_ஸ்வாமிகள் எப்பிடி கிருஷ்ண அவதாரம் என்று கூறிக் கொண்டாரோ,  அது போல் இந்த வாசு தேவன் என்ற வாசுதேவ் #தன்_உருவத்தையே_சிவனாக்கி பிரமாண்டமான சிலை செய்தார்.
கஞ்சா விற்று முன்னேறி வாசுதேவன்,  தன் திறமையாலும், தந்திரத்தாலும் தானே சத்குரு வாசுதேவ் என்ற கடவுளாகி கொண்டார்.

படம் :- 6
இவ்வளவு சிறப்புமிக்க ஈஷா பவுண்டேஷனை தன் ஊர் சுத்தும் பணியை ஓரம் தள்ளிவிட்டு மோடி திறந்து வைக்க வருகிறார்.
உள்ளுர் சித்தர் சத்குருவை உலக புத்தர்  காண வருகை தரும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாகவே வாசுதேவ்வும், #மோடியும் பல ரகசிய பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர்.

படம் :- 7
கோவை வடவள்ளியை சேர்ந்த #காமராஜர் என்பவர் தன் இரு மகள்களை வாசுதேவ்விடம் இருந்து மீட்டுதரும்படி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் சத்குரு வாசு ஏற்கனவே அப் பெண்கள் இருவருக்கும் மொட்டையடித்து சாமியார் வேடத்தை போட்டு வைத்துள்ளார். இந்த ஆசிரமத்தில் மொட்டையடித்து பவுண்டேசனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம்பெண்கள் ஏராளம்.

( குறிப்பு :- ஊர் பெண்களை மொட்டையடித்தவர் தன் பெண்னை எப்பிடி வைத்திருக்கிறார் என்பதை படத்தில் கவணிக்கவும்)

படம் :- 8
நித்தியானந்தாவின் சிரிப்பின் அர்த்தம். ஏற்கனவே பிரேமானந்தாவுக்கு இப்பிடித்தான் அரசியல்வாதிகள் வந்து ஆசிரமம் திறந்தானுங்க, கடைசியா அவனுகளே ஜெயிலுக்குள்ள வச்சி மூடிடாங்க.

என்னோட ஆசிரமத்தையும் அரசியல்வாதிகள் திறந்து வச்சானுக. #நான்_ரஞ்சிதாவை_திறந்ததுக்கு வீடியோ எடுத்து நாரடிச்சிடானுக.
அடுத்து உன்னை என்ன பன்ன போறானுகளோ என்ற வகையில் சிரிப்பை நித்தி வெளிப்படுத்துகிறார்.

மேலும் சில தகவல் இந்த லிங்கில்
http://www.vinavu.com/2012/08/06/sathguru-jaggi-vasudev/

போலி டாக்டர்களால் உடலுக்கு கேடு
போலி சாமியாரால் ஆண்மிகத்திற்கு கேடு
போலி அரசியல்வாதிகளால் நாட்டிற்கே கேடு.

உணர்ந்து கொள்ளுங்கள் #மக்கா..…………

Sunday, 22 October 2017

திராவிடம் 'என்ற பெரும் சூழ்ச்சி !

'திராவிடம் 'என்ற பெரும் சூழ்ச்சி !
திராவிடம் 'என்றால் வடமொழியில் 'தமிழ் 'என்று பொருள் .உலக சரித்திரத்தில் தமிழின் ,தமிழர்களின் பங்கை மறைக்க பலவிதமான கற்பனை பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன .அதில் முக்கியமானது 'திராவிடம்' என்ற ஒரு சொல் .மற்ற சொற்கள் -கிரந்தம் ,தேவநாகரி ,பாலி ,பிராமி என்பவையாகும் .                                                                                                                                             'திராவிடம்' என்ற ஒரு சொல்லைக்கொண்டு 'தமிழ் 'என்ற சொல் எங்கும் வராமல் பார்த்துக்கொண்டார்கள் .உலக மொழிகளை  பட்டியலிடும்போது ,சிறிய மொழிகளின் பெயர்களெல்லாம் மொழிக் குடும்பங்களின் பெயராக வரும் (.உ -ம் )துப்பியன் ,டை -கடை என்றெல்லாம் மொழிக் குடும்பங்கள் உள்ளன .ஆனால் 'தமிழ் மொழி குடும்பம் 'என்று இல்லை .அது இல்லாமல் இருப்பதற்காக கண்டுபிடிக்க பட்ட கற்பனை சொல் தான் 'திராவிடம் 'என்ற சொல்.
                                                           மிகச்சிறிய மொழிகளெல்லாம் பெரிது படுத்தப்பட்டு ,`மிக பெரிய மொழியான தமிழை சிறுமைப்படுத்த பயன் படும் மகா சொல் 'திராவிடம்' .எடுத்துக்காட்டாக,விக்கிப்பீடியாவில் தமிழை பற்றிய பகுதி இப்படி சொல்கிறது .'Tamil (English: /ˈtæmɪl/; தமிழ் Tamiḻ [t̪ɐmɨɻ],  pronunciation (help·info)) is a Dravidian language .....' இது போல் கன்னட   மொழியை பற்றி வாசியுங்கள் .தமிழில் இருந்து தோன்றியது கன்னடம் .ஆனால் 'தமிழ்' என்று ஒரு சொல் கூட வராமல் ஒரு முழு பக்கம் கன்னடத்தை பற்றி வாசிக்கலாம் .கன்னடம் ஒரு திராவிட மொழி என்று ஆரம்பிக்கிறது அந்த கட்டுரை !
                                                 அது போல் ,முருகன் 100% சுத்த தமிழ் கடவுள் .முருகனை திராவிட கடவுள் என்கிறது சித்தா .காம் என்ற மலையாள வலைத்தளம்! சித்த மருத்துவத்தை 'திராவிட கலை 'என்கிறது அது !.ஆக தமிழின் பங்கை மறைக்க கண்டுபிடிக்கப்பட்ட பெருங் கருவி இந்த சொல் .'திராவிடம்' என்று வருமிடமெல்லாம் 'தமிழ் 'என்று போட்டு பாருங்கள் ,நான் சொல்வது நன்கு புரியும் . ஓவ்வொரு முறை 'திராவிடம் 'என்ற சொல் பயன் படும் போது 'தமிழ் 'என்ற சொல் அமுக்கப்படுகிறது !
                                                   இந்த 'திராவிடம் 'என்ற சொல் எப்படி தோன்றியது என்பது எல்லாம்முக்கியமல்ல .எதற்காக உருவாக்கப்பட்டது என்பது தான் முக்கியம் .                                                                                   தமிழையே ஒரு திராவிட மொழியென்று அலட்சியமாக சொல்ல அந்த சொல் பயனாகிறது.அதாவது நேற்று தோன்றிய ஒரு  மொழியும் ,கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடியின் மொழியும், ஒரே அடைப்புக்குள் 'திராவிட மொழி 'என்று சொல்லும் வசதியை இந்த ஒரு சொல் தருகிறது .
                                      தமிழர்கள் யாவரும் இந்த சூழ்ச்சியை உணர்ந்து ,'திராவிடம் 'என்ற சொல்லை தவிர்த்து ,பதிலாக 'தமிழ்'என்ற சொல்லை பயன் படுத்துவது நல்லது .தமிழ் மொழிக் குடும்பம் ,தமிழர் நாகரிகம்,தமிழ் ....என்றே சொல்லவேண்டும் என்று சபதமேற்போம்
                                    .'அச்சம் என்பது மடமையடா !அஞ்சாமை தமிழனின் உடமையடா !'என்று பாடுவோம் !இவ்வாறு நாம் கூறுவதால் நாம் எந்த வகையிலும் கன்னடர்களுக்கோ ,தெலுங்கர்களுக்கோ ,மலையாளிகளுக்கோ பாதிப்பு ஏற்படுத்துவதில்லை .அவர்கள் யாரும் தம்மை திராவிடர் என்று வாய் தவறிக் கூட சொல்வதில்லை .கர்நாடகாவிலோ ,கேரளாவிலோ ,ஆந்திராவிலோ திராவிட கழகங்கள் இல்லை .அவர்கள் அவர்கள் தாம் ;நாம் நாம் தான் !
                ' திராவிடர்' என்ற சொல் ஒழிந்தால் அவர்களுக்கும் நல்லது தான் .ஏனென்றால் ,அவர்களுடைய தனி மொழி அடையாளங்கள் வலுப்பெறும் .அவர்களுடைய கலாச்சாரம் வலுப்பெறும் .சமுதாயத்தில்அவரவர் பங்கு  அங்கீகரிக்க படும் .தமிழ் சமுதாய வளர்ச்சிக்கும் இது நல்லதாகும் .'இந்தி எதிர்ப்பு ' போன்ற பொது பிரச்சனைகளில் அனைவரும்  ஒன்று பட்டு போராடலாம் .தடையில்லை .

"செங்காந்தள் மலர்" "கண்வலிக்கிழங்கு"

"செங்காந்தள் மலர்"  "கண்வலிக்கிழங்கு"

தமிழ்நாட்டின் மாநில மலராகப் போற்றப்படுவது செங்காந்தள் மலர். செங்காந்தள் ஜிம்பாவ்வே நாட்டின் தேசிய மலராகும். தமிழீழத்தின் மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது.

`Gloriosa Superba’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட செங்காந்தள் மலர்ச் செடியின் அனைத்துப் பாகங்களிலும் `கோல்ச்சிசின்’ (Colchicine) என்ற அல்கலாய்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

செங்காந்தள் என்பது காந்தள் அல்லது கார்த்திகைப் பூ என்பதுபோன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் பூக்கும் இந்தப்பூ வேலிகளில் மட்டுமல்ல சாலையோரங்கள் மற்றும் காடுகளிலும் படர்ந்து வளரக்கூடியது. குறிப்பாக, மலைகள் மற்றும் சரிவுகளில் காணப்படும் இந்த மலர் அழகிய விரல்களைப் போலவும், சுடர்கள்போலவும் காட்சியளிக்கும்.

செடி வகையான இது, கொடிபோல் படரக்கூடியது. இலைகளின் நுனி நீண்டும் சுருண்டும் பற்றுக்கம்பிகள் போல அருகில் உள்ள மரம், செடி போன்றவற்றைப் பற்றிப் பிடித்து வளரக்கூடியது.

இதன் இலைகளுக்கு காம்பு கிடையாது.  இதன் பூக்கள் பெரியவை. முதலில் பச்சை நிறத்துடன் பூக்கும் இந்த மலர் பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு (Scarlet), நீலம் கலந்த சிவப்பு என நிறம் மாறிக்கொண்டே போகும்.

தீ கொழுந்துவிட்டு எரிவதுபோலக் காணப்படும் செங்காந்தள் பூவை `அக்னிசலம்’ என்று சொல்வார்கள்.

காந்தள் மலர்ச் செடியின் வேர்ப்பகுதியை `கண்வலிக்கிழங்கு’, `கலப்பைக்கிழங்கு’, `வெண்தோன்றிக்கிழங்கு’, `கார்த்திகைக்கிழங்கு’ என்று அழைக்கிறார்கள். கிழங்கின் ஒவ்வொரு பகுதியின் முனையிலும் புதிய கணு முளைக்கும்.

கிழங்கு கலப்பையைப்போன்ற தோற்றத்துடன் காணப்படுவதால், அதை `கலப்பை’ என்றும், `இலாங்கிலி’ என்றும் சொல்வார்கள்.

இலைகளின் நுனி சுருண்டு காணப்படுவதால், `தலைச்சுருளி’ என்பார்கள். மற்ற தாவரங்களைப் பற்றிக்கொண்டு வளர்வதால் `பற்றி’ என்றும் சொல்வார்கள்.

வளைந்து பற்றிக்கொள்வதால், `கோடல்’, `கோடை’ என்று அழைக்கப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் பூ பூப்பதால் `கார்த்திகைப்பூ’ எனப்படுகிறது.

மழைக்காலத்தில் வனப்புடன் காணப்படுவதால், `தோன்றி’ என்றும் நாட்டு மருத்துவத்தில் `வெண்தோண்டி’ என்று அழைப்பார்கள்.

பூக்களின் நிறம் வேறுபடுவதால், `வெண்காந்தள்’ என்றும், `செங்காந்தள்’ என்றும் வர்ணிக்கிறார்கள்.

கிழங்கு பிரிந்து கணுக்கள் காணப்படுவதை, `ஆண்காந்தள்’ என்றும் கணுக்கள் இல்லாததை `பெண்காந்தள்’ என்றும் சொல்வார்கள்.

செங்காந்தள் மலரில் தேன் அதிகமாகக் காணப்படுவதால், எப்போதும் வண்டுகளும் தேனீக்களும் வட்டமிட்டுக்கொண்டிருக்குமாம். பொதுவாக, மலர்கள் அனைத்துமே பூத்து உதிரக்கூடியவை. ஆனால், செங்காந்தள் மலர் மட்டும் வாடினாலும் உதிர்வதில்லை. இந்தப் பூவை உற்றுப்பார்த்தால், கண்வலி வரும் என்று சொல்கிறார்கள், அதனால் இதை `கண்வலிப்பூ’ என்றும் அழைக்கிறார்கள்.

செங்காந்தள் மலர் புற்றுநோய்க்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, புற்றுநோய் பரவாமல் தடுக்கும் கால்சிசின் (colchicine) செங்காந்தளின் விதை, கிழங்கில் அதிகமாக உள்ளது. இதற்காக செங்காந்தள் செடியின் விதையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த மருந்து நிறுவனங்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றன.

செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு தினமும் காலை, மாலை என மூன்று நாள்கள் சாப்பிட்டுவந்தால், விஷம் இறங்கும். உப்பில்லா பத்தியம் அவசியம். சிறிய பாம்புகள் கடித்தாலோ, வண்டு கடித்தாலோ இதன் இலையை அரைத்துப் பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்தால் விஷம் இறங்கிவிடும்.

செங்காந்தள் வேரில் செய்யப்பட்ட தைலத்தை வாரம் ஒருநாள் தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் எலி, வண்டு, பூரான், சாரைப்பாம்பு கடிபட்டவர்களுக்கு விஷத்தன்மை குறைந்துவிடும். மேலும், இந்தத் தைலத்தை மேகநோய், சொறி, சிரங்கு, படை உள்ளவர்கள் குளித்து வந்தால் நோய் குணமாகும். இத்தகைய சூழலில் புளி, புகைப்பிடித்தல், போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது.

வாதநோய், மூட்டுவலி, தொழுநோயைக் குணப்படுத்துவதுடன் பால்வினை நோய், வெண்குஷ்டம் போன்றவற்றைக் குணப்படுத்தவும் இது பயன்படுகிறது. பிரசவவலியைத் தூண்டும் நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி இறங்காமல் அவதிப்படும் பெண்களுக்கு பச்சை செங்காந்தள் வேர்க்கிழங்கை அரைத்து தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் தடவுவார்கள். உடனடியாக நஞ்சுக்கொடி இறங்கிவிடும்.

பச்சைச் செங்காந்தள் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி அது மூழ்குமளவு வேப்பெண்ணெய் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். கிழங்குகள் மேலே மிதக்கும்போது அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து, பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புவலி போன்றவற்றுக்கு இந்த எண்ணெயைத் தேய்த்துவந்தால், குணம் கிடைக்கும். மேலும் தலைப்பேன்களை ஒழிக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

முக்கிய குறிப்பு  : இதை நேரடியாகச் சாப்பிட்டா விஷம்.

நிலவேம்பு குடிநீர்:

நிலவேம்பு குடிநீர்:

நிலவேம்பு குடிநீரை குடிப்பதால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும், தமிழக மக்களை வாரிசுகள் இல்லாமல் செய்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு அரசின் மீதும் சித்த மருத்துவர்கள் மீதும் சுமத்தப்படுகிறது.

அறிவியல்பூர்வமாக எலியின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளை சுட்டிக்காட்டி சில நவீன மருத்துவர்கள் கேள்வியை எழுப்பியதால், இது எதிர்கட்சி தலைவர் முதல் அரசியலில் அடி வைக்க காலம் பார்த்து கொண்டிருக்கும் நடிகர் வரை முக்கிய பிரச்சனையாக முன்னிறுத்தப்படுகிறது.

மக்கள் தலைவர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பாரட்டிற்குரியது.அவர்கள் அறிவியல் ஞானம் உள்ள மருத்துவர்கள் அல்ல.ஆனால் இந்த குற்றச்சாட்டை முன்வைத்த மருத்துவர்கள் அறிவியல் ஞானம் உடையவர்கள்.ஒரு குற்றச்சாட்டை சுமத்தும் முன், அறிவியல்பூர்வமாக சிந்தித்து தெளிய வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.அவசர கோலத்தில் அவர்கள் அள்ளி தெளித்த சேறு அவர்களின் பாரம்பரிய மருத்துவ வெறுப்புணர்வை மட்டும் பறைசாற்றுகிறது.

ஆங்கிலத்தில் சொன்னால் அறிவு என்று நம்பும் சில ஊடகங்களும், சித்த மருத்துவர்களிடம் எந்த கருத்தையும் கேட்காமல் நிலவேம்பு குடிநீருக்கு எதிரான தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.

உண்மை தான் என்ன?

நிலவேம்பு இலைக்கு விந்தணு உற்பத்தியை தடுக்கும் குணம் உண்டு என்று எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவு உண்மை தான்.

ஆனால்,1997 ஆம் ஆண்டு Journal of Ethnopharmacology இல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் வேறு விதமான முடிவுகளை உள்ளது. நிலவேம்பை எலிகளுக்கு 60 நாட்கள் கொடுத்து பார்த்து ஆய்வு செய்ததில் அவைகளின் விந்து பைகளில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆதாரம்:
http://www.sciencedirect.com/science/article/pii/S0378874197000998

அறிவியல் ஆய்வு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முடிவு வருவது இயல்பானது தான்.எனவே நான் மேற்சொன்ன ஆய்வு முடிவுகளை புறம்தள்ளி வைத்து, விந்து உற்பத்தியை தடுக்கும் என்ற ஆய்வை ஏற்று கொள்வதாகவே இருக்கட்டும்.

நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு என்ற ஒற்றை மூலிகை உடைய மருந்து அல்ல. இது இந்த பரப்புரையை செய்யும் எத்தனை பேருக்கு தெரியும்.நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு, சுக்கு, மிளகு,  வெட்டிவேர், விலாமிச்சு வேர்,பேய்ப்புடல், பற்படாகம்,கோரைக்கிழங்கு, சந்தனம் என்ற 9 மூலிகைகளை சம அளவில் உள்ளடக்கிய கலவை மருந்து.அதில் நிலவேம்பு என்பது 9இல் ஒரு பங்காக கலக்கப்படும் ஒரு மூலிகை சரக்கு.

இதில் நிலவேம்பு தவிர மற்ற மூலிகைகள் விந்து உற்பத்தியில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த பரப்புநர்கள் படித்ததுண்டா?அது தொடர்பான ஆய்வுகளை தேடியதுண்டா? கண்டிப்பாக செய்திருக்க மாட்டீர்கள். அப்படி தேடி படித்திருந்தால் இந்த குற்றச்சாட்டும், பரப்புரையும் நடந்திருக்காது.

எனவே அந்த ஆய்வுகளை இங்கே எழுதியுள்ளேன். படித்து பார்த்து விட்டு அறிவியல் பேசுங்கள்.

சுக்கு(Zingiber officinale):
https://www.ajol.info/index.php/ajbr/article/view/50750/39442

மேற்குறிப்பிட்ட ஆய்வை கிளிக் செய்து படித்து பார்க்கவும்.எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது.

Zingiber officinale aqueous extract treatment causes significant increase in weight of testis and epididymis.There were dose and duration dependent increase in sperm quality and motility.There was also significant increase in serum testosterone level. Malonhydialdehyde levels were significantly reduced.Our results indicated that Zingiber officinale posses pro-fertility properties in male rats.

அதாவது இந்த மூலிகையை எலிகளுக்கு கொடுத்து பார்த்ததில் விந்து உற்பத்தி செல்களை உள்ளடக்கிய testis , epididymis எடையை அதிகரிக்கிறது, ஆண் பாலின ஹார்மோன் டெஸ்டோஸிடரோன் அளவை அதிகப்படுத்துகிறது.மொத்தத்தில் இந்த மூலிகை மலட்டுதன்மையை அகற்றும் குணங்கள் நிறைந்தது..

https://www.ajol.info/index.php/ajbr/article/view/95189

மேற்குறிப்பிட்ட ஆய்வை கிளிக் செய்து படித்து பார்க்கவும்.

Sodium arsenite மற்றும் Zingiber officinale சேர்த்து எலிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்ட போது, ஆர்ஸ்னைட்டால் எலிகளின் விந்துப்பைகளின் ஏற்பட்ட பாதிப்புகளை திருத்தி அமைக்கும் பண்பு இம்மூலிகைக்கு இருந்தது கண்டறியப்பட்டது என்பதே இந்த ஆய்வறிக்கையின் உள்ளடக்கம்.

கோரைக்கிழங்கு ( Cyperus rotundus):

http://www.ijppsjournal.com/Vol4Issue1/3066.pdf

Cisplastin என்ற மருந்தின் மூலம்  விந்தகத்தில் பாதிப்பை உண்டாக்கப்பட்ட எலிகளில், கோரைக்கிழங்கின் aqueous extract கொடுத்து பரிசோதிக்கப்பட்டது.  கோரைக்கிழங்கு விந்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து விந்து உற்பத்தியை அதிகப்படுத்தும் செய்கையை உண்டாக்கியது நிரூபிக்கப்பட்டது.

பேய்ப்புடல் (Tricosanthes cucumerina):

http://www.webmedcentral.com/article_view/3498
one would observe reduction in the testes weights (shrinkage) because, no spermatogenic activity occurred, as the spermatogenic cells have been inhibited from their actions, but with the extract administration, the initial spermatogenic state of the testes were approached.

அதாவது, ஹார்மோன் கொடுத்து எலிகளின் விந்தகங்களில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது.இம்மூலிகையை கொடுத்து பரிசோதித்த போது, விந்து உற்பத்தி முன்பிருந்த நல்ல நிலைக்கு திரும்பியது கண்டறியப்பட்டது.

நிலவேம்பு குடிநீரில் உள்ளது 9 மூலிகைகள். இதில் நான் மேலே சொன்ன 3  மூலிகைகள் எலிகளில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் ஆற்றல் உள்ளது.

நிலவேம்பும் மிளகும் மட்டும் விந்தகங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் உள்ளன.

(மிளகின் இந்த செய்கை அவதூறு பரப்புவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நேர்மையான ஆராய்ச்சியாளனாக தெளிவுப்படுத்துவது எனது கடமை.(ஆதாரம்- http://nopr.niscair.res.in/handle/123456789/5973)

ஆக நிலவேம்பு மட்டும் டெங்கு கிருமியை எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், இன்ன பிற மூலிகைகளும் சம அளவில் சேர்க்க வேண்டிய அவசியம் சித்தர்களுக்கு ஏன் வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நுனிப்புல் மேய்ந்து விட்டு வதந்தி பரப்பும் அரைகுறை அறிவாளிகள் சித்தர் அறிவியலின் சத்ரு, மித்ரு சரக்குகளின் அறிவியல் கோட்பாட்டை தேடி படியுங்கள்.அல்லது சித்த மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.நிலவேம்பின் கெட்ட குணங்கள், மற்ற மூலிகைகளால் முறிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

டெங்கு உயிரியல் ஆயுதமாக நம் நாட்டின் ஏவப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.(பூச்சாண்டி காட்டவில்லை, Indian defence studies and analyses என்ற மத்திய தன்னாட்சி பாதுகாப்பு துறை நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான, கேப்டன் அஜய் லீலீயின் கட்டுரையை படிக்கவும்.இவர் பாதுகாப்பு துறை ஆய்வுக்கான கே.சுப்பிரமணியம் விருதை பெற்றவர்- https://idsa.in/idsastrategiccomments/DengueAGermwithWeaponPotential_ALele_191006)

இப்போது வதந்தி பரப்பும் சில நவீன மருத்துவர்கள் டெங்குவிற்கு மருந்தை கண்டுபிடித்து கொடுக்க யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்? ஆயுதத்தை ஏவியவர்கள் மருந்தையும் கொடுப்பார்கள் என்று காத்திருக்கிறார்களா?

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆய்வு நடத்தி மருந்து கண்டுபிடித்து கொடுக்கும் வரை நிலவேம்பை விமர்சனம் செய்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது தான் உங்கள் கடமையா?

மலேரியாவிற்கு மருந்து சிங்கோனா பட்டையில் இருந்து தான் வந்தது.ஆஸ்பிரின் என்பது வில்லோ மரப்பட்டை பல கட்ட ஆய்வுக்கு பின் உருமாறி வந்தது தான்.உங்கள் ஊரில் உள்ள சித்த மருத்துவர் கொடுக்கும் நிலவேம்பு குடிநீரை ஆய்வு செய்து நீங்கள் கற்ற நவீன மருத்துவ அறிவியலுக்கு உங்கள் பங்களிப்பை செய்திருக்கலாமே.

டெங்குவிற்கு சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பி விட்டு clinical trial செய்தீர்களா? Case report இருக்கிறதா? என்று கேட்பது அறிவுடமையா?

2012 ஆண்டு முதல் தமிழக அரசு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகிறது.அரசு சித்த மருத்துவர்கள் கௌரவம் பார்க்காமல் நிலவேம்பு குடிநீரை டீ கேனில் எடுத்து கொண்டு தெருதெருவாக கொடுத்து வருகின்றனர்.இதில் பெரும்பாலான மருத்துவர்களுக்கு மருந்தாளுனர்கள் துணை கிடையாது.குடிநீர் காய்ச்சுவது முதல் மருத்துவமனையை சுத்தம் செய்வது வரை இவர்கள் தான் ஆல் இன் ஆல்.

NRHM  சித்த மருத்துவர்களோ, தினக்கூலியாக வேலை பார்த்து கொண்டே,தங்களின் நிரந்தர வேலைக்கு குரல் கொடுத்து கொண்டே தெருதெருவாக நிலவேம்பு குடிநீரை கொடுத்து சமூக மருத்துவர்களாக தமிழத்துக்கு கடமை ஆற்றி வருகிறார்கள்.
இவர்களின் வியர்வை சிந்தும் பணி தான் நிலவேம்பு குடிநீர் என்ற மக்கள் மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

Clinical trial செய்ய வேண்டும் என்றால் Integrative treatment செய்ய அவர்களுடன் சேர்ந்து நவீன மருத்துவர்கள் செயல்பட வேண்டும்.
இல்லை,நான் ஏதாவது மருந்து கம்பெனி ஆய்வு நடத்தி அறிவிக்கும் வரை காத்து கொண்டிருப்பேன், நேரம் போகாமல், நுனிபுல் மேய்ந்து விட்டு வதந்தி பரப்புவேன் என்று இருந்தால், காத்திருங்கள்.

அதுவரை செத்து கொண்டிருக்கும் நோயாளிகள் காத்து கொண்டிருக்க மாட்டார்கள்.அவர்களுக்காக சித்த மருத்துவர்கள் மக்களுக்கு ஆற்றும் சமூக கடமையை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

https://youtu.be/DdanPH3vv6o

#தற்சார்பு_வாழ்வியல்