கட்டுப்பாடற்ற தாவரங்களின் பரவலை அதை உணவாக உட்கொள்ளும் கால்நடைகள் கட்டுக்குள் வைக்கிறது. தாவரங்களை உணவாக உட்கொண்டு கட்டுப்பாடில்லாமல் இனவிருத்தி செய்யும் கால்நடைகளை சிங்கம், புலி போன்ற மாமிச விலங்குகள் கட்டுப்படுத்தி வைக்கிறது. அதாவது தாவரங்களின் விகிதம் 100% என்றால், கால்நடைகள் 20%, மாமிச உண்ணிகள் 1% என்ற விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். இயற்கையே இந்த விகிதாச்சாரத்தை தக்க வைக்கிறது. இதில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் உணவுச்சங்கிலித் தொடர் அறுபட்டு உலகம் அழியத் தொடங்கும். குறிப்பாக சிங்கம், புலி போன்ற மாமிச பட்சினிகளின் பிறப்பு விகிதாச்சாரத்தைக் கட்டுப்படுத்த ஒற்றைத் தலைமைத்துவ குணத்தை (Oneness) இயற்கையே அவற்றுக்கு அளிக்கிறது. அதிகாரப் போட்டியை அவற்றுக்கிடையே பற்றவைத்து விடுகிறது. தனது செக்ஸ் உறவுக்கு இடையூறாக இருப்பதால் ஒரு ஆண் சிங்கம் தான் பெற்ற குட்டியையே கொன்றுவிடுகிறது. ஆனால் பெண் சிங்கமோ மிச்சம் மீதி இருக்கும் ஒரு (ஆண்) குட்டியை மட்டும் காப்பாற்றி தனது வாழிட எல்லைக்கு அப்பால் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுகிறது. அந்த குட்டி ஆண் சிங்கம் மனதில் பழிவாங்கும் எண்ணத்தோடு வளர்ந்து அதற்காக காத்திருந்து ஒரு கட்டத்தில் தனது தந்தை சிங்கத்தையே தீர்த்துக்கட்டிவிடுகிறது. அதனால்தான் ஜோதிடத்தில் சிம்ம இராசியின் அதிபதியான சூரியனுக்கு சிங்கத்தை அடையாளமாக வைத்துள்ளனர். அதன் எண் ஒன்று ஆகும்.
-
ஒரு சிங்கக் கூட்டத்தில் உள்ள அத்துனை ஆண் சிங்கத்துக்குமே ஒற்றை அதிகார வெறி இரத்தத்தில் ஊறிப்போயுள்ளதால் அவைகள் தங்களுக்குள் சண்டையிட்டு மோதிக்கொண்டு முடிவில் இனமே கூட இல்லாமல் போய்விட வாய்ப்புள்ளது. ஆனால் ஒரு பெண் சிங்கத்துக்கு மட்டும்தான் அதிகார வெறியோடு சேர்த்து தனது இனத்தையும் தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால்தான் ஒரு ஆண்குட்டியை மட்டுமாவது மிக சாதுர்யமாக தந்தை சிங்கத்திடம் இருந்து காப்பாற்றி விடுகிறது. ஜோதிட விதிகளின் படி சிம்ம லக்னத்தில் பிறந்தவருக்கு சூரியன் உச்சமானால் அவரது தந்தையின் கதை இளம் வயதிலேயே முடிந்து விடுகிறது. மற்றும் மரபணுவில் சூரிய தோஷத்தோடு பிறக்கும் ஜாதகருக்கும் அவரது தந்தைக்கும் மிகப்பெரிய இடைவெளியை உண்டாக்கி விடுகிறது. நிற்க, சூரியனுடைய Oneness தத்துவப்படி இவ்வுலகை மறைமுகமாக ஆண்டுவரும் ஒரு கூட்டத்தார் தனது ஆளுமையின் அடையாளமாக ஆண்சிங்கத்தை வெளிக்காட்டிக்கொண்டாலும் அதிகார மையத்தில் ஒரு பெண் சிங்கத்தையே அமர்த்தி வைத்திருக்கிறார்கள். மணிரத்னம் டைரக்ட் செய்த தளபதி திரைப்படத்தில் ஓடையில் விடப்பட்ட தெப்பத்தில் மிதந்து சென்று வேறிடத்தில் வளரும் கதாநாயகன் தனது சகோதரனான கலெக்டருடன் ஒருகட்டத்தில் அதிகாரப் போட்டியில் ஈடுபடுவார். (சிட்டியை யார் அதிகாரம் செய்வது என்று) மேலும் ஒரு சகோதரன் விரும்பிய பெண்ணை மற்றொரு சகோதரன் கரம் பிடிப்பார். பாகுபலி திரைப்படத்திலும் இதே கதைதான். உலகம் முழுக்க இதே கதைக்கருவை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளிவந்திருக்க வாய்ப்புண்டு.
-
காப்பாற்றப்படாத பெண் குட்டி சிங்கங்களின் கதி என்னவாகும் எனக்கேட்க வேண்டாம். அது உவ்வே சமாச்சாரம் என்பதால் பதிவிடவில்லை. சிங்கங்களுக்கிடையே உறவுமுறைகள் இல்லை. சிங்கத்தைப் போலவே புலி, சிறுத்தை போன்ற வேட்டையாடி உண்ணும் ஏனைய விலங்குகளின் வாழ்க்கை முறையும் ஏறக்குறைய இதேமாதிரிதான். ஆனால் மற்ற விலங்குகளைக் காட்டிலும் சிங்கத்திடம் இந்த ஒற்றைத் தத்துவ அதிகாரவெறி சற்று அதிகம். தனித்து வேட்டையாடும் குணம் புலியிடம் மட்டுமே உண்டு. அதனால்தான் அதற்கு “ஒண்டிப்புலி” என்று பெயர் வந்தது. அதற்காக ஒரு சிங்கம் புலியைவிட பலவீனமானது என எண்ணக்கூடாது. புலியிடம் காணப்படும் (பதுங்கிப்பாயும்) தந்திரம்மிக்க குணம் சிங்கத்திடம் இல்லை. எதுவாக இருந்தாலும் நேரடித்தாக்குதல்தான். பெரும்பாலும் ஆண் சிங்கங்கள் வேட்டையாடுவதில்லை. பெண் சிங்கங்கள் மட்டுமே கும்பலாகச் சென்று வேட்டையாடுகிறது. அந்த உணவை ஆண் சிங்கம் எடுத்துக்கொள்கிறது. அதற்காக ஆண்சிங்கத்தை சோம்பேறி என எடுத்துக்கொள்ளக் கூடாது. அது தனது அதிகாரத் திமிறால் அவ்வாறு நடந்து கொள்ளுகிறது. ஒரு ஆண்சிங்கம் தான் வேட்டையாடுவதற்காக தன்னுடைய ஆற்றலை செலவு செய்வதில்லை. அதிகாரத்தை அடைவதற்காக மட்டுமே தன்னுடைய பெரும்பான்மையான ஆற்றலை செலவு செய்கிறது. அதிகாரத்தை அடைந்தவுடன் அதை சுகமாக அனுபவிக்க எண்ணுகிறது. அதனால்தான் ஆண்சிங்கங்கள் வேட்டையாடுவதில்லை. (ஒர் அரசனின் குணமும் அதுதானே…?)
-
ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் எந்த பாவத்தில் அமருகிறதோ அந்த பாவம் வேலை செய்வதில்லை மாறாக, அந்த பாவம் சம்மந்தப்பட்ட உறவுதான் நம்மை வேலை வாங்குகிறது. (எ.கா) ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கக் கூடிய 7-ம் இடத்தில் சூரியன் போய் தனித்து அமர்ந்துவிட்டால் திருமணத்திற்கு பின்னான வீட்டு வேலைகளை அந்த ஆண்தான் செய்ய வேண்டும். பெண் செய்யமாட்டாள். இதே ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7-ல் சூரியன் தனித்து அமர்ந்துவிட்டால் கணவன் வேலை செய்ய மாட்டான். கட்டிலில் அவனுக்கு பதிலாக மனைவியே குதிரை ஓட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நிற்க, ஓர் ஆண் சிங்கம் அதிகாரத்தை அடைவதற்காக மட்டுமே தனது அளவற்ற பலத்தை வெளிக்காட்டுவதாக கூறியிருந்தேன். அங்ஙணம் ஓரு யானையை வீழ்த்த குறைந்தது 2 ஆண்புலிகள் இணைந்து செயலாற்ற வேண்டும். ஆனால் ஒரேயொரு ஆண் சிங்கம் தனித்து நின்று ஒரு யானையை வீழ்த்திவிடும். அது ஒரே தாவில் யானையின் முதுகின் மேல் ஏறி நின்று அதன் பின்னந்தலையில் உள்ள புடனியின் மீது ஒரு முன்னங்காலைத் தூக்கி ஓங்கி அடிக்கும். அதன் அளவு ஒன்றரை டன் அளவிற்கு இருக்கும். ஒரே அடியில் யானை இறந்துவிடும். இதனால்தான் ஜோதிட திருமணப் பொருத்தத்தில் யானையை அடையாளமாகக் கொண்ட நட்சத்திரத்தோடு சிங்கத்தை அடையாளமாகக் கொண்ட நட்சத்திரத்தை சேர்ப்பதில்லை. இதற்கு யோனிப் பொருத்தம் என்று பெயர்.
**************************
தொடர்புக்கு
ஜோதிடர் நா.எழிலன்
No comments:
Post a Comment