Sunday, 29 December 2019

தேவேந்திரகுல வேளாளர் ஆன்மீகப் பாரம்பரியம்

தேவேந்திரகுல வேளாளர் ஆன்மீகப் பாரம்பரியம் 

தேவேந்திரகுல வேளாளர் சமூகம் மிக உயரிய பண்பாட்டிற்குச் சொந்தகார்கள். ஆம்.. கி.பி.1500-ம் ஆண்டுகளில் இச்சமூகம் பண்பாட்டிலும் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கினர் என்பதற்கு எண்ணற்ற சான்றுகளும், பதிவுகளும் நம்மிடம் உள்ளன. அப்போது தேவேந்திரர் வம்சமாகிய மூவேந்திரர்களான  சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், தெலுங்கு வடுகநாயக்கர்களின் படையெடுப்பால் தங்கள் ஆட்சியையும், உடமைகளையும் பறிகொடுத்தனர். இதனால், அன்றைய ஆட்சியாளராகவும் நிலஉடமைகளராகவும் இருந்த தேவேந்திரர்கள் அனைத்தையும் இழந்து ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, நிலஉரிமையாளராக இருந்தவர்கள் பண்ணை அடிமைகளாக ஆக்கப்பட்டனர். மள்ளர் என்னும் தேவேந்திரகுல வேளாளர் சமூகமாக அழைக்கபட்டவர்கள், தங்கள் சமூகப்பெயரும், வாழ்வியல் அடையாளங்களும் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதை அப்போது, அவர்களால் உணர முடியவில்லை. இதற்கு பல குறிப்புகள் கண்டறியபட்டுள்ளனர். கி.பி.1528-யில்  எழுதப்பட்ட பழனி செப்பேடு மற்றும் 1938-யில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் சேவல் கொடியோன் கோயில் தண்ணீர் பந்தல் கட்டிடம் கட்ட 11-ஊர் முக்கியஸ்தர்கள் இணைந்து கையெழுத்திட்டனர். அதில் மூப்பர் என்ற பதிவும், தேவேந்திரகுல வேளாளர் சமூகம் என்றே குறிபிடப்பட்டுள்ளது, மேலும், சென்னை-பார்த்தசாரதி கோயிலின் குறும்பர் பற்றிய கல்வெட்டு, உக்கிரன் கோட்டையில் பாண்டியர்களின் கோட்டை மற்றும் அதன் கல்வெட்டுகள், உலகில் முதல் நாகரிகம் தோன்றிய ஆதி நித்தன் குடும்பன் (தேவேந்திரர்) வாழ்ந்த தூத்துகுடி-ஆதிச்சநல்லூர் கல்வெட்டு என பல கல்வெட்டுகளும் கண்டறியபட்டுள்ளன. மேலும் கி.பி.1881 திருச்செந்தூர் கோயில் அருகில் தேவேந்திரகளால் கட்டப்பட்ட 9-நாட்டார் (தேவேந்திரர்) மடங்கள், கோவை-அவினாசிலிங்கம், போரூர் கோயில்களில் தேவேந்திரர் மடங்கள், மதுரை திருபரங்குன்றம் தேவேந்திரர் மடங்கள், பழனி மாரியம்மன் கோயில் குளக்கரையில் கட்டப்பட்ட தேவேந்திரர் மடங்கள், மதுரை மீனாட்சியம்மனுக்கு தேவேந்திர மடத்திலிருந்து பச்சைப்பட்டு கொடுத்தல் என பல்வேறு மடங்களும் இன்றளவும் உள்ளன, ஆம்.. தேவேந்திரர்களே,  பாண்டியர்கள். தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்திரர் குடி, சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், இக்குலமே என பல மிகச்சிறந்த ஆதாரங்கள் உள்ளன. சங்கரன் கோயில் கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு, கேரளா சாதிப்படியலில் தேவேந்திரர்களே பாண்டியர்கள் எனப் பதிவு, நிலப்பகுதி பத்திர ஆவணங்களில் பாண்டியர் குலம் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளனர், 325 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இராஜபாளையம் வெண்குடை திருவிழா, மதுரை-திருபரங்குன்றம் பங்குனி மாத தேரோட்ட திருவிழா, மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா, நாற்று நடவு திருவிழா மற்றும் கதிர் அறுப்பு திருவிழா, தூத்துகுடி-நவகைலாயம் என்ற சிவதலங்கள் வழிபாட்டுத் திருவிழா, தூத்துகுடி-கோவில்பட்டி சென்பகவள்ளியம்மன் மற்றும் பாண்டியராஜா தேரோட்ட திருவிழா, விளாத்திகுளம்-மீனாட்சி சுந்தரேசுவரர் தேவேந்திரர் தேரோட்டம் மற்றும் மண்டகபடி பெறுதல், விருதுநகர்-சாத்தூர்-இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருவிழா, மதுரை-கார்செரி காரின்நாயன்மார் மாசி மாத பூராடம் வழிபாட்டுத் திருவிழா, திண்டுகல்-பழனி கோயில் தைப்பூசத் திருவிழா, திண்டுகல்–பழைய வத்தலகுண்டு மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா, கரூர்-வாங்கலம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா, நாமக்கல்-சின்காலண்டபுரம் செல்லபாண்டியம்மன் கோயில் திருவிழா, சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா, இராமநாதபுரம்-அபிராமம் பொன் ஏர்ப்பூட்டும் இந்திர விழா, திருச்சி மற்றும் பெரம்பலூர் மாரியம்மன் கோயில் திருவிழா, திருவாரூர்-மாவூர்-திருநாட்டியத்தான்குடி சிவபெருமான் கோயில் திருவிழா, புதுகோட்டை-இலுப்பூர் நார்த்தாமலை மாரியம்மன் கோயில் திருவிழா மற்றும் மண்டகபடி பெறுதல், என இன்னும் பல விழாக்களும், மண்டகபடி பெறுதலும் வெவ்வேறு பரிமாணங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் படம்பிடித்து காட்டுகிறது. மேலும், சிவ மரப்பில் வந்தவர்கள் என்றும், சிவ வழிபாடு செய்பவர்கள் என்றும், சிவ மதம் சார்ந்தவர்கள் என்றும் உலகில் இவர்களுக்கு தனிப்பெரும் வரலாற்று பெருமைகளும் உண்டு. 63 நாயன்மார்களில் 18 பேர்களும், உலகபுகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை நிறுவிய மாமள்ளர் இராசராச சோழனும் தேவேந்திரர்களே. ஆம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கட்டியதும் தேவேந்திரர்களே என்பது தகவல் உரிமை சட்டம் மூலம் 
அறியப்பட்டது. மேலும், மதுரை மீனாட்சியம்மன் கழுத்தில் அணிந்திருக்கும் M வடிவிலான தாலியும் தஞ்சைப் பெருவுடையார் பெரிய நாயகி அம்மன் கழுத்தில் அணிந்திருக்கும் M வடிவிலான தாலியும் போன்று தேவேந்திரர் குல வேளாளர் பெண்கள் இன்றளவும் அணிகின்றனர் என்பது வெளிப்படை. பாண்டியர்கள் ஆண்ட பெரு நாட்டில் தேவேந்திரகுல உட்பிரிவான காலாடி கடற்கரை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கிரேக்கம், கொரியா, இந்தோனேசியா போன்ற இன்னும் பல்வேறு நாடுகள், நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பறைச்சாட்டுகிறன. இதை பற்றிய தொலைநோக்கு பார்வையில் ஓர் ஆய்வை தொடர அரசு வழிவகை செய்ய வேண்டும். 

இவ்வாறு தொன்மையான நீண்ட நெடிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொண்ட இச்சமூகம் நாயக்கர்களின் ஒடுக்குமுறைக்கு  ஆளானது, வியப்பின் சரித்திர குறியீடு. 1935-யில் வெள்ளையர் ஆட்சியின் போது, ஒடுக்கப்பட்ட சமூகமும், தீண்டாமை சமூகமும் என தனித்தனியே பகுத்தறியாமல் இவ்விரண்டையும் இணைத்து பட்டியல் சாதி (Scheduled Caste) என உருவாக்கப்பட்டதே இச்சமூகத்தின் வரலாற்று பிழை. இந்த குறியீடுகளிருந்து விடுபட முடியாமல் ஒரு நீண்டகால போராட்ட களமாக மாற்றிவிட்டது. அதை போல, அரசியல் சுதந்திரம், அரசியல் சமூக பொருளாதாரச் சுதந்திரம் என இவ்விரண்டையும் தனித்தனியே பகுத்தறியாமல் தான், இந்நாடு சமநிலையின்றி பல ஏற்றத்தாழ்வுகளுடன் பொருளாதார பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். எனவே, இந்த சமூகச் சூழலில் இச்சமூகத்தின் பிரிவுகளான குடும்பர்(35), பன்னாடி(54), காலாடி(28), கடையர்(26), பள்ளர்(49), தேவேந்திரர் குலத்தார்(17) மற்றும் வாதிரியார்(72) என்ற ஏழு வகையான உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்கிற பொது பெயரில் அழைத்திட அரசானை பெறுவதில் முதன்மை நோக்கமாக கொண்டு மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று முடிவு நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இது வெறும் கையெழுத்து மட்டும் அல்ல, நம் தலையெழுத்தை மாற்றியமைக்கவிருக்கும் தலையெழுத்து என்பதை நாம் உணரவேண்டும். எனவே, யார் பாராட்டினாலும், பாராட்ட விட்டாலும் கவலை வேண்டாம். ஏனெனில், கவலைக்கு நாம் இடம் கொடுத்தால் அது நம்மை கவலைக்கிடமாக்கிவிடும். எனவே, வெற்றியோ, தோல்வியோ எதுவரினும் நம் தொடர்ந்து கடமையாற்றுவோம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது, பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான். இது ஒரு குறுகிய மனபான்மை என்று யாராவது கருதினால், அதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், குடியிருக்கும் வீட்டை செப்பனிட எண்ணுவது குறுகிய மனபான்மையா இல்லை சுயநலமா! சிந்திப்பீர்!. இந்நாட்டின் சுயநலத்திற்காகவும் இச்சமூக நலனிற்காகவும், இம்முயற்சியை நாம் விதை போல விதைத்துக்கொண்டே இருப்போம். அது முளைத்தால் மரமாகட்டும் இல்லையென்றால் அது மண்ணிற்கு உரமாகட்டும் என்கிற வேளாணறிஞர் நம்மாழ்வரின் முன்னோக்கு பாதையில் நாம் தொடர்ந்து பயணிப்போம் பணியாற்றுவோம்.
நன்றி Ragupathi pandian அண்ணா

No comments:

Post a Comment