சபரிமலைக்கு மாலை போட்டவங்க ஏன் செருப்பு போடக்கூடாது. இதுக்கு பின்னாடி பல காரணம் இருக்கு.. தெரிஞ்சுகலாமா ?
விரத விதிமுறை சொல்லும் காரணங்கள்:
- எளிமையான வாழ்க்கை வாழவேண்டும்.
- சபரிமலை பாதை கரடு முரடாக இருக்கும், அதுல செருப்பு போடாமா தான் போகனும். அப்போ போக கஷ்டமா இருக்க கூடாது, அதுக்கு தான்.
- செருப்பு மிருக தோலில் செய்தாக இருக்கும், அதனால்.
முதல் பாயிண்ட் சரி. ஏற்றுக்கொள்ளலாம்.
நீங்க பெரிய பாதைனு சொல்ற 35–40 கி.மி. காட்டு பாதையில போனா இரண்டாவது பாயிண்ட்டும் சரி தான். ஆனால் நம்மில் பல பேர் சின்ன பாதையில சிமெண்ட் ரோட்ல தான் போகிறோம்.
மூணாவது பாயிண்ட் நான் சொல்லனுமா என்ன ? இப்போலாம் ஒரிஜினல் லெதர் செருப்பு விக்குற விலைக்கு கொஞ்ச பேர் தான் வாங்குறாங்களே. 🤷♀️
சரி இதெல்லாம் இருந்தா கூட ஏன் செருப்பு போடமாட்றாங்க ? அதனால என்ன லாபம் ?
அப்படி கேளுங்க..
- செருப்பு போடாமல் வெறுங்காலில் நடந்தால் உங்க முட்டியில 12% கம்மியா அழுத்தம் இருக்கும், மூட்டு சம்பந்தப்பட்ட நோய்கள் சீக்கிரமா வராது. நான் சொன்னா நம்பமாட்டிங்க, America’s Tech Insiderயூட்யுப் சேனல்ல இத சொல்லிருப்பாங்க நீங்களே பாருங்கள்.
- செருப்பு போடாமல் வெறுங்காலில் நடந்தால் உங்க நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
- செருப்பு போடாமல் வெறுங்காலில் நடந்தால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
- அக்குப்பஞ்சர் வைத்திய முறையில 45க்கும் மேற்ப்பட்ட புள்ளிகள் உள்ளங்கால் பகுதியில மட்டும் இருக்கு. செருப்பு போடாமல் வெறுங்காலில் நடக்கிறப்போ இதுல பல புள்ளிகளில்பட்டு நோய்கள் குறைஞ்சு ஆரோக்கியம் பெறுவோம்.
- செருப்பு போடாமல் வெறுங்காலில் நடந்தால் நீங்க இந்த இயற்கை கூட நேரடி தொடர்பில் இருப்பிங்க, அது உங்களுக்கு அதிக ஆற்றலை தரும்.
செருப்பில்லாமல் நடக்க நீங்க மாலை போடனும்னு இல்லை, செருப்பு போடாம இருந்தாலே போதுமானது தான் 😁. மாலை போட்டா அது உங்களை செருப்பில்லாமல் நடக்க பழக்கிவிடும். ✌
இதெல்லாம் இப்போ யோசிச்சு பார்த்தா,
கல்லும் முல்லும், காலுக்கு மெத்தை தானே ?
நீங்க செருப்பு போடாமல் கடைசியா எங்க வெளியே போனீங்கனு யோசிச்சு பாருங்கள்..
உங்களோட கருத்துக்களை Comment-ல போடுங்க..
நன்றி !
No comments:
Post a Comment