உயிர் இயக்கம் :-
.........................விருத்திரன் சே..................
மூளையில் தான் அறிவு தோன்றுகிறது என்றால் நாம் ஒரு செல் உயிரியாக கருவுக்குள் சென்ற போது மூளை வளரவில்லை.,ஆனால் தனது உணவான கருப்பையில் மிதக்கும் நுண் உணவுகளை தானே உட்கொண்டு உடலை வளர்கிறது...கண் காது மூக்கு என எதுவுமே இல்லாத சமயத்தில் இந்த அறிவு எவ்வாறு அப்போது ஒரு செல் உயிரியான நமக்கு தெரிகிறது...???
இதை மூளை இறந்தவுடன் மனிதனின் உயிர் போய் விடும் என்று தர்க்கம் செய்வோர் விளக்க வேண்டும்...
அறிவு :
ஐம்புலன்களின் உதவியால் நாம் உணர்வது அறிவு
மனம் :
மனத்திற்கு உடலை கடந்து பேசும் ஆற்றல் பேற்றது...அனைத்து உயிர்களையும் உணரும் ஊடகம்.நீங்கள் மனத்தால் மற்ற உயிர்களுடன் உறவாட முடியும்
உணர்வுகளை புரிந்து கொள்ளுதற்கு தான் மனம்...
உயிர் :-
இது காலம் வெளி இவற்றை கடந்து பயணிப்பது...அவை உருவங்களை எடுத்து மாறி மாறி பிறந்து வருகிறது...இந்த உலகத்தில் ஆரம்பத்தில் இருந்து உயிர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை.
அவைகள் வேறு வேறு வடிவங்கள் எடுக்கிறதே தவிர அவை மாறுவது இல்லை...உயிரை உணருபவர்களால் தான் இந்த உடலை கடக்க முடியும்.வாழும் விருப்பம் கொண்டு இந்த உடலை விட்ட உயிர்கள் நிலவு நீச்சம் அடையும் நேரம் வீரியம் கொள்ளுகிறது அவைகளுக்கு அன்று இரத்தம் பலி கொடுத்தல் என்பது ஒரு மரபியல்...அந்த காலம் வெளியை கடந்து செல்லும் நம் முன்னோர் உயிர்அலைகளை (கருப்புகளை) நமக்கு உதவ அழைப்பது தான் நம் வழிபாடு...குறிகேட்டல்...வாக்கு வாங்குதல்...
இது தான் நம் எதிரிக்கு தடையாக இருந்தது...அவன் உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் என முடிவெடுத்தான்.அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது இந்த வழிபாடு இதை ஒழிக்க தான்
" ஊன் உண்ணாமை " என்ற கோட்பாடு வந்தது...
சிலர் அறிவாளிகளை போல் ஏன் வாயில்லா உயிர்களை கொல்கிறீர்கள் என மேதாவி தனமாக கேட்கிறார்கள்.அவர்களுக்கு நான் வைக்கும் கேள்வி இது தான்?
தாவரங்களுக்கு உயிர்கள் இல்லையா? ஏன் வாயில்லாத தாவரங்களை உண்ணுகிறீர்கள் ?
ஒரு உயிர்களின் பெருக்கம் அதிகமானால் அதை குறைக்க அடுத்த உயிர் தோற்றுவிக்கப்படும்.அப்படி தோற்றுவிக்கப்பட்ட உயிர் தான் மனிதன்...இந்த அடிப்படையை தெரிந்து கொண்டு பேசுங்கள்.
உயிர்கள் தோன்றிய கருவை
( கடவுள் ...காந்த சக்தி...போரற்றல் )
உணர்ந்து கொள்ள நாம் உயிரை உணர வேண்டும்...
இங்கே அந்த உயிரை உணரவிடாமல் செய்வதற்காக தான் கோவில் என்ற வழிபாடு உருவாக்கப்பட்டது...இதோ இந்த கல்லில் தான் கடவுள் உள்ளார் என அதை வணங்க செய்வதன் மூலம் நாம் உயிர்களின் பற்றியான தேடல் உடனே மட்டுபடுத்தப்பட்டு பக்தியாக மாற்றப்பட்டுவிடும்...
ஏன் நீங்கள் உயிரை உணர கூடாது?
அவர்களின் செயல் திட்டப்படி இந்த உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும்.நீங்கள் எதையும் உணரா முட்டாளாக இருந்தால் தானே அடிமையாக இருப்பீர்கள்.குலதெய்வ வழிபாடு மூலம் உயிரையும் மரபுவழி கடத்தப்பட்ட சூலம் போன்ற அடிப்படை மெய்யியல் கடத்திகளையும் உணர்ந்துவிட்டால் அவர்களை எதிர்க்க தொடங்கிவிடுவீர்கள்.
புலன்களுக்கு தெரியும் கல்லை கடவுள் என்று சொல்லுவதும்
( ஆத்திகம்)
புலன்களுக்கு எட்டாத எவையும் இல்லை என சொல்லுவதும்
( நாத்திகம்)
இந்த இரண்டுமே உங்களை முட்டாள்களாக்க கொண்டுவரப்பட்டது தான்...
( சைவ வைணவ மடங்கள் Vs பெரியாரியல்)
நீங்கள் உங்கள் மரபுக்கு திரும்புங்கள்...
#அறிவு தான் நீங்கள் என உணர்ந்தால் உடலால் வாழ்வீர்கள்.மரணத்தை கண்டு அஞ்சுவீர்கள்...அந்த பயம் தான் மூலதனம் நம் எதிரிகளுக்கு...
நீங்கள் உங்கள் மனதால் வாழுங்கள்...அனைத்தும் உயிர்களுடனும் பேசுங்கள்...மகிழ்ந்து இருங்கள்...உயிரை உணருங்கள்...உங்கள் எதிரியை கண்டுகொள்ளுங்கள்...
No comments:
Post a Comment