காதல் :-
எனக்கு தெரிந்து புரட்சி என்ற வார்த்தைக்கு பிறகு அதிகமாக மலுங்கடிக்கப்பட்ட வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.
இந்த ஒரு வார்த்தையை வைத்து ஆயிரம் அரசியல் பேசிவிடலாம்.காதலுக்கான விளக்கம் என்ன என நண்பர்களிடம் கேட்டப்போது அவர்கள் சொன்ன பதில்கள்
1) மனதுடன் மனது சேருவது
2) பார்த்தவுடன் வருவது
3) காமத்திற்கு முன்
இது போல் நிறைய வந்தது... என்னை பொருத்தவரை
காதல் : இயற்கை மனிதர்களின் வாழ்க்கையை இணைக்க மனதில் உருவாக்கும் ஒருவகை #உணர்வு
காமம் : இயற்கை மனிதனின் உடலை இணைக்க உருவாக்கும் #உணர்ச்சி
உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் வேறுபாடு உண்டு.அதிகமாக நாம் உணர்ச்சிவயப்படுவதால் நாம் பார்பதை எல்லாம் காதல் என்று முடிவு செய்கிறோம்.
மனிதர்களின் இந்த உணர்ச்சியை பணமாக்கும் தந்திரம் தான் தற்கால #சினிமா
தற்போது அது ஒவ்வொரு பொருட்களின் விளம்பரத்திலும் கூட வந்துவிட்டது.உங்களின் உணர்ச்சியை தூண்டி தான் அவர்கள் பொருள்களை உங்கள் மனதில் பதிய வைக்க வேண்டியுள்ளது.இதற்கு பெரும்பாலும் பெண்கள் தான் பயண்படுத்தப்படுகிறார்கள்.இவை எல்லாம் தற்செயல் நிகழ்வுகள் அல்ல.எல்லாமே ஆராய்ச்சி செய்து திட்டமிட்டு செயல்படுத்தப்படுபவை...
எதற்காக காதலை பற்றி தெரிய வேண்டும் என்றால் :
காதல் என்று காம உணர்ச்சியின் மூலம் இங்கே பல லட்சம் கோடி பொருளாதாரம் சுரண்டப்படுகிறது.
அனைத்து பொருள்களும் அதை அடிப்படையாக கொண்டே விளம்பர படுத்தப்படுகிறது.பெண்ணின் உடலை காட்டி உங்களை அந்த விளம்பரத்தை பார்க்க வைக்கிறார்கள் என்றால் எவ்வளவு கேவலமான செயல் இது.இதை படித்து கொண்டு இருப்பவர்கள் தொலைகாட்சியை பாருங்கள் அது உங்களுக்கு காட்டும் நான் சொல்லும் இந்த விடயம் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று...
நீங்கள் காதல் என்ற ஒற்றை உணர்வை புரிந்துவிட்டால் போதும் காமத்தை உங்களால் பிரித்து பார்க்க முடியும்.காமம் எது என தெரிந்துவிட்டால் அதை வைத்து செய்யும் வியாபார கூத்துகளை நிராகரிக்க முடியும்.
" நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் காதல் என்ற உணர்வின் மேல் விருப்பம் கொள்ளுங்கள் இயற்கை அதை உங்களை உணரவைக்கும்.இயற்கை உங்களை இணைக்க முடிவு செய்துவிட்டால் யாராலும் அதை உடைக்க இயலுமோ! ! ! "
No comments:
Post a Comment