கதை சொல்லப்போறேன் தொடர் 110
எனது பார்வையில்
#குலசை_முத்தாரம்மன்
முதலில் குலசேகர பட்டிணம் என்பது ஒரு கடற்கரை இயற்க்கை துறைமுகம். சிங்கப்பூர்,பர்மா போன்ற நாடுகளுடனும் மும்பாய்,கொல்கத்தா,கள்ளிக்கோட்டை போன்ற பெருநகரத்துடற் வணிக தொடர்பு கொண்டு இருந்தது.நவதானியங்கள்,தேங்காய்,
எண்ணெய்,மரம் இறக்குமதி செய்யப்பட்டு உப்பும் கருப்பட்டியும் ஏற்றுமதி செய்யப்பட்டது. பாண்டிய மன்னர்கள் அரபு நாடுகளில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்ததும் இந்த துறைமுகத்தில் தான்.மேலும் இங்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் சிறப்புற்று விளங்கியது.இங்கு தங்க நாயணங்கள்
அச்சிடப்படும் அக்கசாலைகள் இருந்தற்கான சான்றாக அக்கச்சாலை விநாயகர் கோயில் உள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.
முத்தாரம்மன் என்பது முத்துக்களை ஆரமாக தொடத்து அம்மனுக்கு அணிவித்தால் அந்த பெயர் வந்திருக்கலாம். பாண்டியர் நாட்டில் முத்துகளுக்கா பஞ்சம். குலசையில் உள்ள சுயம்பு வடிவ நடுகல் வழிபாடாக இருந்திருக்க வேண்டும் அதன் சேர மன்னருக்கும் குலசேகரபாண்டியனுக்கும் போர் ஏற்படுகின்றது அதில் பாண்டியன் தோல்வி அடைக்கின்றான். அந்த பிறகு இந்த கோவிலை கட்டியதாக சொல்லப்படுகின்றது. பாண்டியன் காளிக்காக பலி கொடுத்து மீண்டும் போரை தொடங்கி வெற்றி பெற்று உள்ளான்.போரின் வெற்றியின் காரணமாக குலசேகர பாண்டியன் கோவிலை கட்டி இருக்கலாம்.
ஒரு வணிகம் செய்யவந்த #செட்டியார் இங்கு வந்த பிறகே நடுகல் வழிபாடு மாற்றப்பட்டு சிலை வழிபாடாக மாற்றம் அடைகின்றது. குலசை பூசாரி கனவில் சொன்னதும் சிதம்பரம் ஆசாரியான சிற்பியின் கனவில் சொன்னதாக சொல்லப்படுபவை என்னை பொறுத்தமட்டும் நடுகல் வழிபாடுகளை தடுத்து உருவ வழிபாட்டு முறைக்காக சொல்லப்பட்டவை கட்டு கதைகள் தான்
அதை போல ஒரு வணிகம் செய்த செட்டியாரின் கனவில் தெய்வம் சொன்னதாக நாளை உனக்குவரும் சரக்கு மூட்டையில் பணம் வரும் அதை கொண்டு பெரிய மணியை கோவிலுக்கு செய் என்று சொல்லப்படும் கதையும்
மணி ஓலியை கடல் பயணம் செய்த வணிகர்கள் தங்களின் இருப்பை அபத்து காலங்களில் அறிந்து கொள்ள பெரிய மணிகளை பயன்படுத்தினர்.இந்த கோவில் 52 கிலோ வில் பெரிய மணி இன்வறும் உள்ளது. அதை செஅய்ய பணம் உதவி செய்தவர் வணிகம் செய்யும் செட்டியார் தான்.
வருசம்தோறும் புரட்டாசி மாசம் வரும் #அமாவாசைக்கு அடுத்த திருநாளில் அம்மனுக்கு காப்பு கட்டி, கொடியேற்றத்தோடு திருவிழா தொடங்குது.உள்ளூர் மற்றும் வெளியூர் வழிபாட்டாளர்கள் 10 நாட்கள் விரதம் இருக்கவேண்டும் ஆசைவம் , உடலுறவு தவிர்த்து விசயதசமி அன்று வரை விரதம் முடித்து காப்புகளை கலட்டவேண்டும்.
யார் என்ன வேடம் போட வேண்டும் என்பதை பூசாரி தான் முடிவு செய்வார் என்பது தான் ஒரே இடர்பாடு.புரட்டாசி மாதம் என்று சொல்லி வைணவத்தின் பெயரில் பலி இடுவதையும் அசைவம் உண்ணுவதையும் தடுத்தது போல காளி வழிபாட்டாளர்களையும் இந்த புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் அசைவம் தவிர்க்க வைத்து உள்ளனர் என்பதே என் கருத்து
தசராவிழாவிற்கும் தமிழர்க்கும் எந்த வித தொடர்பும் இல்லை.நவராத்திரி என்பது எல்லாம் வணிகர்களின் மேன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விழா.இந்த முத்தாரம்மன் கோவில்யை பொருத்த மட்டும் பலியிடுதல் இல்லை சைவ படையல் தான்
ஞானமூர்த்தீஸ்வரர் -முத்தாரம்மன் இங்கு தெய்வமாக உள்ளறர். ஞானமூர்த்தீஸ்வரர் - ஞானம்+மூர்த்தி+ஈஸ்வரன் இதன் பொருள் பேரறிவு வடிவான ஈஸ்வரன் என்றும் கொள்ளலாம் உலகம் முழுவதும் அறிந்தவர் என பொருள் கொள்ளலாம்
யாருக்கு உலகம் பற்றி முழு அறிவு பெற்று இருப்பர் உலக நாடுகளுடன் வணிகம் செய்தவர்களை தவிர..
முத்தாரம்மன் முத்துக்களை ஆராமாக கொண்ட பெண் என பொருள் கொள்க.
வணிகத்திற்காக காளி வழிபாட்டை மாற்றிய கதை இது
Friday, 29 September 2017
கதை சொல்லப்போறேன் தொடர் 110 எனது பார்வையில் #குலசை_முத்தாரம்மன்
Labels:
Illuminati
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment