Friday, 29 September 2017

கணவன் - மனைவி

கணவன் - மனைவி :-

நான் அனுபவம் இன்றி எழுதும் முதல் கட்டுரை இது.ஏனெனில் எனக்கு திருமணம் முடியவில்லை...இருந்தாலும் எனக்கு தெரிந்தவிடயத்தை பகிரவேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன்...

முதலில் திருமணம் காதல் திருமணமா இல்லை வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமா என்பது தான் முதல் கேள்வி காதல் திருமணம் எனில் முதலில் வருவது சாதி...இங்கே வாழ்வியலில் மாற்றம் வரும் என்பதற்காக தான் சாதி மாறி திருமணம் செய்யவில்லை என்பதை நாம் ஒத்துகொள்ள வேண்டும்.இப்போது தான் உலகவாழ்வியல் என்ற மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு நாம் மாற்றப்பட்டு விட்டதற்கு பிறகு இந்த சாதி என்பது திருமணத்தில் தேவை இல்லை...மனத்திற்கும் பெற்றோருக்கும் பிடித்துவிட்டதெனில் திருமணம் ஒன்றும் தவறு இல்லை...

திருமணத்திற்கு பின்பு தான் பிரச்சனையே ஆரம்பிக்கும்...

சில வருடங்களுக்கு பிறகு ஏதோ ஒரு கசப்பு உறவுகளுக்குள் வரும்...ஏதோ ஒரு வெறுப்பு மனதை பற்றி கொள்ளும்...இது கணவனுக்கும் நிகழும் மனைவிக்கும் நிகழும்...

இது ஏன்?

நமது மனது #விரிவடையும் தன்மை கொண்டது...

விரிவடையும் தன்மை என்பது புதிய புதிய விசயங்களை தெரிந்து கொள்வதிலும் பழையவற்றை கடந்து செல்லும் தன்மையும் கொண்டது...

ஆணும் சரி பெண்ணும் சரி இந்த நிலையில் இருந்து மீள முடியாது...

ஒரு சிலர் வாழ்க்கையே வெறுகிறது என்பார்கள் ஏன் என கேட்டால் தொடர்ச்சியாக அதே வேலை அதே நாள் அதே சோர்வு என கூறுவார்கள்

அவர்களிடம் நாம் கேட்பது இதை தான்

சூரியன் தினமும் உதிக்கிறது ஆனால் நன்றாக கவனித்தால் அது தினமும் வேறுமாதிரியாக தன்னை மாற்றி கொண்டே இருக்கிறது.இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே தன்னை ஒவ்வொரு விநாடியும் புதுபித்துகொண்டே இருக்கிறது...ஏன் பாறைகள் எனப்படும் கற்கள் கூட தன்னை புதுப்பித்து கொள்கிறது தெரியுமா ?

மனிதன் தன்னுடைய பார்வையை மாற்ற வேண்டும்...அவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் #புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ள வேண்டும்...ஒவ்வொரு நிமிடமும் புதியதாக பிறந்ததை போன்ற #புத்துணர்ச்சி தான் வாழ்க்கைகான தேவை...

இதை நன்கு உணர்ந்தவர்கள் பழங்குடி மக்கள்...அவர்களிடம் இருக்கும் புத்துணர்ச்சி நகரவாழ்க்கையில் எவரிடமும் இல்லை...அதனால் தான் அவர்களால் தினமும் இரவு கிராமமே சேர்ந்து நடனம் ஆடி பாட்டு பாடி மகிழ்ந்து இருக்க முடிகிறது...

இந்த புத்துணர்ச்சி தான் ஒரு ஆண் பெண்ணை வசிகரிக்க கூடிய தூண்டில்...

பெண்ணுக்கும் இது தான் நிரந்தர வசிகரம் தரக்கூடியது...அழகு போய்விட கூடும்.புத்துணர்ச்சி போகாது...

கணவன் மனைவிக்கான அந்த #சலிப்புதன்மை இந்த புத்துணர்ச்சி இல்லாததால் தான் வருகிறது...புத்துணர்ச்சியுடன் இருக்கும் கணவனோ மனைவியோ ஏதாவதொரு சேட்டையையும் கிண்டலையும் செய்து கொண்டு இருப்பார்கள் அப்போது தான் அந்த உறவில் சலிப்புதன்மை என்பதே வராது...இதை புரிந்துகொள்ளாமல் தான் பல விவாகரத்து வழக்குகள் பதியப்படுகிறது...இது ஆதாரப்பூர்வமாக பல உளவியல் நிபுணர்களால் நிறுபிக்கப்பட்ட விசயமே...

எப்போதும் புத்துணர்ச்சியுடன் கணவன் மனைவி வாழ்க்கையில் இன்புற்று இருக்க எனது வாழ்த்துகள் - விருத்திரன் சே

No comments:

Post a Comment