Saturday, 30 September 2017

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?
தனுஷ்கோடிக்கு.
ஆம். அது தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால்
நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய.
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின்
ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல
இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!
மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில்
ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.
உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ்
மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.
கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்
இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.
போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான் உண்மை!
கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன்
தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ்
கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்!
ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க
இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும்
ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.
விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த
இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு.

நம்ப தமிழ் நாட்டில் ஆயுத பூஜை! ஆட்டையை போட்ட ஆரியம்!

நம்ப தமிழ் நாட்டில் ஆயுத பூஜை!
ஆட்டையை போட்ட ஆரியம்!
இதை அலும்பு பண்ணும் திராவிடம்!
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இந்த சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் ஓவியங்கள் இல்லை,
இப்ப இருக்கும் ஓவியம் எல்லாம் இராஜ ரவி வர்மா
ஐரோப்பிய மோகத்தில் அதன் கலவையுடன் வரைந்த கிறுக்கு படைப்புகள்,
இவைகள் எப்படி நம் கடவுள்கள் ஆக முடியும் ?
அப்புறம் ஆயுத பூஜையின்ன இன்னா நைனா ன்னு
நீங்க கேக்கறது புரியுது....!
நம்ம ஔவை( சங்ககால ஔவை )
நம்ப தமிழ் வேந்தர் அதிய மானுக்கும்
தொண்டைமானுக்கும் ஏற்பட்ட சண்டையை
தவிற்க்கும் பொருட்டு
( ஏன் இன்னிவரிக்கும் தமிழன் தனக்குள்ள சண்டை போட்டுக்கிட்டு தான இருக்கான்!! ஆனா அன்னிக்கி ஔவை இருந்தா,
தன் தமிழால் சண்டைய நிறுத்துனா,
நாமும் நம்ம தமிழ் மூலம் சண்டைய நிறுத்த பாப்பம் .....!!)
தொண்டமானிடம் தூது போற.....
போயி அங்கன தொண்டமானின் ஆயுதசாலையை
பார்கிறா....!
ஆயுதம் எல்லாம் பூசை போட்டுஅலங்கரிச்சு இருக்கு
இத பாத்து ஒரு பாட்டும் பாடுறா!!!
"இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.'
அவ்ளோதான் ஒரே பாட்டு....
தொண்டமான் சமாதன கை கொடுத்துட்டான்
தமிழுக்கு அவ்ளோ வலிமை !!
அப்புறம் சங்க இலக்கியம்
புறப்பொருள் வெண்பா மாலை,
இதுவும் சொல்லுது #மங்கலம் எதெல்லாம்ன்னு
குடுமி களைந்த புகழ் சாற்று நிலையே,
மண மங்லமே. பொலிவு மங்கலமே,
நாள் மங்கலமே, பரிசில் நிலையே,
பரிசில் விடையே, ஆள்வினை வேள்வி,
பாண் ஆற்றுப்படையே, கூத்தர் ஆற்றுப்படையே,
பொருந் ஆற்றுப்படையொடு, விறலி ஆற்றப்படையே,
வாயுறை வாழ்த்தே, செவியறிவுறூஉக்,
குடை மங்கலமொடு , #வாள்_மங்கலமே,
மண்ணு மங்கலமே, ஒம்படை , ஏனைப்
புறநிலை>>>>...
மேல சொன்ன எல்லாம் தமிழன் கைகொண்ட
#மங்கலங்கள்.... !!
அப்புறம் இன்னும் சில மேல் விவரங்கள்
வாங்கல் (இது எங்க கரூர் பக்கம் உள்ள ஒரு காவேரிக்கரை சிற்றூர் ) இதன் பழைய பெயர்
#வாள்_மங்களம் !!
அப்புறம் சமயபுரம் அருகில் #வாளாடி என்றும்
ஒரு ஊர் உள்ளது
ஆயுதம் கொண்டாடுவதும்
அதை பூசிப்பதும் நமது தமிழ் மரபு
இதை மீட்டெடுத்து நமது விழாவாக

கடல்கடந்து வணிகம் செய்தான் தமிழன் ரோமபுரி கிரேக்கம் சீனம் மலேயா என கடல் தொடும் ஊருக்கெல்லாம் தமிழில் பெயர் வைத்தான்.

கடல்கடந்து வணிகம் செய்தான் தமிழன் ரோமபுரி கிரேக்கம் சீனம் மலேயா என கடல் தொடும் ஊருக்கெல்லாம் தமிழில் பெயர் வைத்தான். இன்றைக்கு சொந்த நாட்டில் தொழில் செய்ய தயங்குறான். இதற்கு காரணம் என்ன ? படித்து வெளிநாட்டில் வேலைப்பார்ப்பதை மட்டுமே இன்றைய தமிழன் குறிக்கோளாக கொண்டு வளர்க்கப்படுகிறான். தொழில் என்றாலே எதோ தீண்டத்தகாத ஒன்றாக எண்ணுகிறான். வந்தவன் போனவன் இங்கு வாழ இவன் நாடோடியாக வேறொங்கோ வாழ்கிறான்.
டீக்கடையும் பேக்கரியும் வச்சி மலையாளத்தான் பல கடைகள தொறந்துடுறான் மார்வாடி காலம்காலமா அடகுக்கடை முதல் எல்லா பொருட்கள் மொத்த வியாவாரமும் பண்ணி இங்கையே பரம்பரையா செட்டில் ஆயிட்டான் இதத்தவிர சவுளிக்கடை நகைக்கடை சாப்பாட்டுக்கடைன்னு தெலுங்கனும் ஐயரும் வளமாயிருக்கான். இத தாண்டி புதுசா முளைத்திருக்கிற கார்பொரேட் நகைக்கடை அடகுக்கடை துணிக்கடை இவையெல்லாம் மாற்றான் கையில் தான் .. இந்நாட்டில் இவுங்கள ஒப்பிட்டு பார்த்தால் தமிழன் சொந்த தொழில் செய்பவரை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இது பெரிய விசயமா ? ஆம் நம் நிலம் களவு போகும் விசயம். மாற்றான் இங்கு காலம் காலமாக வாழ்வது போக இன்று தமிழக எல்லையோர மாவட்டங்களில் வேற்றினத்தானின் ஆக்கிரமிப்பும் அதிகமாகி கொண்டே போகிறது.
சரி பெரிய பேச்சு வேண்டாம். நம்மால் முடிந்ததை செய்வோம். எப்படி ? நாமும் தொழில் செய்வது குறித்து பயில ஆரம்பிப்போம். தொழில் செய்வோரானால் மற்றவர்க்கு படிப்பித்துகொடுப்போம். நம்மவரிடம் பொருட்களை வாங்குவோம். மற்றவரும் அவ்வாறே வாங்க பரிந்துரைப்போம். இணையம் அதற்கு பெரிதும் துணை செய்யும்.
சொந்த தொழில் செய்வோர் தங்களின் விவரம் கூறி பங்களிப்பை நல்கவும்.
தொழில் செய்வோர் பற்றிய விவரங்களை பகிர்வோம்.
நானறிந்த இணைய நட்புகள் செய்யும் தொழில் பற்றிய விவரம்
Manivannan R Iyarkai Karangal ( பனை சார்ந்த பொருட்கள் )
Karthikeyan Parkavithai ( மருந்தில்லா காய்கறிகள் - மதுரை )
ஏனாதி அ.பூங்கதிர்வேல் / Maavel ( உணவு பொருட்கள் முதல் ஆடை வரை )
Manikandan Devakumar / தைத்திங்கள் ( ஆடைகள் தோல் பொருட்கள் )
இளங்குமரன் தா ஐயா ( செக்கு எண்ணெய் வகைகள், உணவு பொருட்கள், மருத்துவபழங்கள், சோலார், தங்கும் விடுதி )
Vetri Kondan ( மருந்தகம் - நாகர்கோவில் )
Karthikeya Pandian Kalyani Gandhi - பாரதி தமிழ் பொருளகம் ( ஆடைகள்,தோல்/வரவேற்பறை பொருட்கள்,கடிகாரம் - காரியாபட்டி )
K Vadivel Kuppusamy ( அடுமனை / பேக்கரி - திருப்பூர் )
Sathiskumar Annadurai ( www.udhava.com )
நா.த. தமிழினியன் ( ஆயத்த ஆடைகள் )
மா.செந்தில் குமார் அம்பில். ( புகைப்படம் மற்றும் காணொளியாளர் - திருச்சி )
வடிவேல் சுப்ரமணியம் - வருணி அக்வா (RO) மற்றும் சீன்சு கால்சட்டை (Jeans)
.

Friday, 29 September 2017

கதை சொல்லப்போறேன் தொடர் 110 எனது பார்வையில் #குலசை_முத்தாரம்மன்

கதை சொல்லப்போறேன் தொடர் 110
எனது பார்வையில்
#குலசை_முத்தாரம்மன்
முதலில் குலசேகர பட்டிணம் என்பது ஒரு கடற்கரை இயற்க்கை துறைமுகம். சிங்கப்பூர்,பர்மா போன்ற நாடுகளுடனும் மும்பாய்,கொல்கத்தா,கள்ளிக்கோட்டை போன்ற பெருநகரத்துடற் வணிக தொடர்பு கொண்டு இருந்தது.நவதானியங்கள்,தேங்காய்,
எண்ணெய்,மரம் இறக்குமதி செய்யப்பட்டு உப்பும் கருப்பட்டியும் ஏற்றுமதி செய்யப்பட்டது. பாண்டிய மன்னர்கள் அரபு நாடுகளில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்ததும் இந்த துறைமுகத்தில் தான்.மேலும் இங்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் சிறப்புற்று விளங்கியது.இங்கு தங்க நாயணங்கள்
அச்சிடப்படும் அக்கசாலைகள் இருந்தற்கான சான்றாக அக்கச்சாலை விநாயகர் கோயில் உள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.
முத்தாரம்மன் என்பது முத்துக்களை ஆரமாக தொடத்து அம்மனுக்கு அணிவித்தால் அந்த பெயர் வந்திருக்கலாம். பாண்டியர் நாட்டில் முத்துகளுக்கா பஞ்சம். குலசையில் உள்ள சுயம்பு வடிவ நடுகல் வழிபாடாக இருந்திருக்க வேண்டும் அதன் சேர மன்னருக்கும் குலசேகரபாண்டியனுக்கும் போர் ஏற்படுகின்றது அதில் பாண்டியன் தோல்வி அடைக்கின்றான். அந்த பிறகு இந்த கோவிலை கட்டியதாக சொல்லப்படுகின்றது. பாண்டியன் காளிக்காக பலி கொடுத்து மீண்டும் போரை தொடங்கி வெற்றி பெற்று உள்ளான்.போரின் வெற்றியின் காரணமாக குலசேகர பாண்டியன் கோவிலை கட்டி இருக்கலாம்.
ஒரு வணிகம் செய்யவந்த #செட்டியார் இங்கு வந்த பிறகே நடுகல் வழிபாடு மாற்றப்பட்டு சிலை வழிபாடாக மாற்றம் அடைகின்றது. குலசை பூசாரி கனவில் சொன்னதும் சிதம்பரம் ஆசாரியான சிற்பியின் கனவில் சொன்னதாக சொல்லப்படுபவை என்னை பொறுத்தமட்டும் நடுகல் வழிபாடுகளை தடுத்து உருவ வழிபாட்டு முறைக்காக சொல்லப்பட்டவை கட்டு கதைகள் தான்
அதை போல ஒரு வணிகம் செய்த செட்டியாரின் கனவில் தெய்வம் சொன்னதாக நாளை உனக்குவரும் சரக்கு மூட்டையில் பணம் வரும் அதை கொண்டு பெரிய மணியை கோவிலுக்கு செய் என்று சொல்லப்படும் கதையும்
மணி ஓலியை கடல் பயணம் செய்த வணிகர்கள் தங்களின் இருப்பை அபத்து காலங்களில் அறிந்து கொள்ள பெரிய மணிகளை பயன்படுத்தினர்.இந்த கோவில் 52 கிலோ வில் பெரிய மணி இன்வறும் உள்ளது. அதை செஅய்ய பணம் உதவி செய்தவர் வணிகம் செய்யும் செட்டியார் தான்.
வருசம்தோறும் புரட்டாசி மாசம் வரும் #அமாவாசைக்கு அடுத்த திருநாளில் அம்மனுக்கு காப்பு கட்டி, கொடியேற்றத்தோடு திருவிழா தொடங்குது.உள்ளூர் மற்றும் வெளியூர் வழிபாட்டாளர்கள் 10 நாட்கள் விரதம் இருக்கவேண்டும் ஆசைவம் , உடலுறவு தவிர்த்து விசயதசமி அன்று வரை விரதம் முடித்து காப்புகளை கலட்டவேண்டும்.
யார் என்ன வேடம் போட வேண்டும் என்பதை பூசாரி தான் முடிவு செய்வார் என்பது தான் ஒரே இடர்பாடு.புரட்டாசி மாதம் என்று சொல்லி வைணவத்தின் பெயரில் பலி இடுவதையும் அசைவம் உண்ணுவதையும் தடுத்தது போல காளி வழிபாட்டாளர்களையும் இந்த புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் அசைவம் தவிர்க்க வைத்து உள்ளனர் என்பதே என் கருத்து
தசராவிழாவிற்கும் தமிழர்க்கும் எந்த வித தொடர்பும் இல்லை.நவராத்திரி என்பது எல்லாம் வணிகர்களின் மேன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விழா.இந்த முத்தாரம்மன் கோவில்யை பொருத்த மட்டும் பலியிடுதல் இல்லை சைவ படையல் தான்
ஞானமூர்த்தீஸ்வரர் -முத்தாரம்மன் இங்கு தெய்வமாக உள்ளறர். ஞானமூர்த்தீஸ்வரர் - ஞானம்+மூர்த்தி+ஈஸ்வரன் இதன் பொருள் பேரறிவு வடிவான ஈஸ்வரன் என்றும் கொள்ளலாம் உலகம் முழுவதும் அறிந்தவர் என பொருள் கொள்ளலாம்
யாருக்கு உலகம் பற்றி முழு அறிவு பெற்று இருப்பர் உலக நாடுகளுடன் வணிகம் செய்தவர்களை தவிர..
முத்தாரம்மன் முத்துக்களை ஆராமாக கொண்ட பெண் என பொருள் கொள்க.
வணிகத்திற்காக காளி வழிபாட்டை மாற்றிய கதை இது

சி_ஐ_ஏ_யும் #அவர்களின்_கொடூர_கொலைகளும் (Central Intelligence Agency) அமெரிக்க நாட்டின் உளவு நிறுவனம்.

#சி_ஐ_ஏ_யும் #அவர்களின்_கொடூர_கொலைகளும் (Central Intelligence Agency) அமெரிக்க நாட்டின் உளவு நிறுவனம்.
1941 ல் (Office of Coordinator of Information-COI) என்ற பெயரில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் துவக்கினாலும் 1947 ல் அமெரிக்க அதிபர் ட்ருமன் என்பவரால் சி.ஐ.ஏ (Central Intelligence Agency) என பெயர் மாற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வருகிறது.
#கொலைகாரர்களின்_நிறுவனம்
என்றழைக்கப்படும் இந்த உளவு நிறுவனத்தால் 1987 வரை மட்டுமே 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
1.1953 ல் ஈரானில் அந்நிய பிரிட்டிஷ் எண்ணை நிறுவனத்தை தேசிய மயமாக்க முயன்ற, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான் அதிபர் முகம்மத் மொசாதேக் (Mohammed Mossadegh) தூக்கி எறியப்பட்டு சர்வாதிகாரி ஷா என்பவர் அதிபராக அமெரிக்காவால் நியமிக்கப்படுகிறார்.
2.1961 ல் ஐ. நா. வின் தலைமைச்செயலர் ஹம்மர்ஸ்ஜொல்ட் (Dag Hammarskjold) என்பவர் ஜாம்பியாவில் கனிமச்சுரங்கங்களை ஆக்கிரமிக்க நினைத்த பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு எதிரான அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால் "விமான விபத்தில்" கொல்லப்பட்டார்.
3.1967 அக்டோபர் 9 ல் அர்ஜென்டினா நாட்டுக்காரரான போராளி சே குவேரா பொலிவியா நாட்டில் கொல்லப்பட்டார்.
4.1973 ல் சிலி நாட்டின் மக்கள் அதிபர் அலண்டே (Salvador Allende) கொல்லப்பட்டு பினோச்சே (Augusto Pinochet) என்ற சர்வாதிகாரி அதிபராக்கப்படுகிறார்.
5.எண்ணை நிறுவனங்களை தேசியமயமாக்க முனைந்த இராக்கின் சதாம் ஹுசேன், வெனிசூலாவின் ஹுகோ சாவேஸ் மற்றும் லிபியாவின் கடாபி வரை காலனியத்தை எதிர்க்கும் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களுக்கும் நிகழ்வது இந்த சதிவலையால் ஏற்படும் கொலைதான்.
6.தென் அமெரிக்காவில் மக்களுக்காக பாடுபட்ட சமூக சிந்தனை கொண்ட தலைவர்கள் சமீப காலமாக இறக்க காரணமாய் இருப்பது புற்று நோய். சர்வாதிகாரிகளுக்கு வராமல் அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்க்கும் சமூக சீர்திருத்த தலைவர்களுக்கு மட்டுமே இந்த புற்று நோய் வருவது ஒரு நவீன தொழிநுட்ப அமெரிக்க சதி என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
2008 ல் சி.ஐ.ஏ பராகுவே (Paraguay) நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் அந்நாட்டு அதிபர் பெர்னாண்டோ லுகோ வினுடைய டி.என்.ஏ படிமங்களைப் பெற்றதை விக்கி லீக்ஸ் வெளியிட்டுருக்கிறது.
1. 2010 ஆகஸ்டில் பராகுவே நாட்டின் அதிபர் பெர்னாண்டோ லுகோ (60 வயது)
புற்று நோயால் மரிக்கிறார்.
2. 2011 அக்டோபரில் பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இன்னாசியோ லுலா தா சில்வா (66)
புற்று நோயால் மரிக்கிறார்.
3. 2013 மார்ச் 5 ல் வெனிசூலா நாட்டின் அதிபர் ஹுகோ சாவேஸ் (59) புற்று நோயால் மரிக்கிறார்.
4. 2012 ஜனவரியில் அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா கிர்நெருக்கும் (58)
புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
5. கியூபா முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ மீதான 12 முறைக்கும் மேற்பட்ட
சி.ஐ.ஏ வின் கொலை முயற்சிகள்.
இவை அனைத்தும் அமெரிக்க சி.ஐ.ஏ வின் அதிநுட்ப அறிவியல் படுகொலைகளே (Scientific Assassinations) என்கிறது சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம்.
8. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ப்ரெஞ்சுக்காலனியாக இருந்த அப்பர் வோல்டா (Upper Volta) என்ற நாட்டை நேரியவர்களின் நாடு (Land of Upright Men) என்ற பொருள் பொதிந்த புர்கினா பாசோ (Burkina Faso) என்ற பெயருள்ள நாடாக மாற்றிக்காட்டிய தாமஸ் சங்கரா என்ற இளம் போராளி ஆப்ரிக்காவின் சே குவேரா என்றழைக்கப்பட்டார். அவருடைய 5 வருட ஆட்சிக்குள்ளாக, 37 வது வயதிலேயே கொல்லப்பட்டார்.
தொடரும் கொலைகள் அடுத்த பதிவில் .........(முடியல எத்தனை )

கணவன் - மனைவி

கணவன் - மனைவி :-

நான் அனுபவம் இன்றி எழுதும் முதல் கட்டுரை இது.ஏனெனில் எனக்கு திருமணம் முடியவில்லை...இருந்தாலும் எனக்கு தெரிந்தவிடயத்தை பகிரவேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன்...

முதலில் திருமணம் காதல் திருமணமா இல்லை வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமா என்பது தான் முதல் கேள்வி காதல் திருமணம் எனில் முதலில் வருவது சாதி...இங்கே வாழ்வியலில் மாற்றம் வரும் என்பதற்காக தான் சாதி மாறி திருமணம் செய்யவில்லை என்பதை நாம் ஒத்துகொள்ள வேண்டும்.இப்போது தான் உலகவாழ்வியல் என்ற மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு நாம் மாற்றப்பட்டு விட்டதற்கு பிறகு இந்த சாதி என்பது திருமணத்தில் தேவை இல்லை...மனத்திற்கும் பெற்றோருக்கும் பிடித்துவிட்டதெனில் திருமணம் ஒன்றும் தவறு இல்லை...

திருமணத்திற்கு பின்பு தான் பிரச்சனையே ஆரம்பிக்கும்...

சில வருடங்களுக்கு பிறகு ஏதோ ஒரு கசப்பு உறவுகளுக்குள் வரும்...ஏதோ ஒரு வெறுப்பு மனதை பற்றி கொள்ளும்...இது கணவனுக்கும் நிகழும் மனைவிக்கும் நிகழும்...

இது ஏன்?

நமது மனது #விரிவடையும் தன்மை கொண்டது...

விரிவடையும் தன்மை என்பது புதிய புதிய விசயங்களை தெரிந்து கொள்வதிலும் பழையவற்றை கடந்து செல்லும் தன்மையும் கொண்டது...

ஆணும் சரி பெண்ணும் சரி இந்த நிலையில் இருந்து மீள முடியாது...

ஒரு சிலர் வாழ்க்கையே வெறுகிறது என்பார்கள் ஏன் என கேட்டால் தொடர்ச்சியாக அதே வேலை அதே நாள் அதே சோர்வு என கூறுவார்கள்

அவர்களிடம் நாம் கேட்பது இதை தான்

சூரியன் தினமும் உதிக்கிறது ஆனால் நன்றாக கவனித்தால் அது தினமும் வேறுமாதிரியாக தன்னை மாற்றி கொண்டே இருக்கிறது.இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே தன்னை ஒவ்வொரு விநாடியும் புதுபித்துகொண்டே இருக்கிறது...ஏன் பாறைகள் எனப்படும் கற்கள் கூட தன்னை புதுப்பித்து கொள்கிறது தெரியுமா ?

மனிதன் தன்னுடைய பார்வையை மாற்ற வேண்டும்...அவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் #புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ள வேண்டும்...ஒவ்வொரு நிமிடமும் புதியதாக பிறந்ததை போன்ற #புத்துணர்ச்சி தான் வாழ்க்கைகான தேவை...

இதை நன்கு உணர்ந்தவர்கள் பழங்குடி மக்கள்...அவர்களிடம் இருக்கும் புத்துணர்ச்சி நகரவாழ்க்கையில் எவரிடமும் இல்லை...அதனால் தான் அவர்களால் தினமும் இரவு கிராமமே சேர்ந்து நடனம் ஆடி பாட்டு பாடி மகிழ்ந்து இருக்க முடிகிறது...

இந்த புத்துணர்ச்சி தான் ஒரு ஆண் பெண்ணை வசிகரிக்க கூடிய தூண்டில்...

பெண்ணுக்கும் இது தான் நிரந்தர வசிகரம் தரக்கூடியது...அழகு போய்விட கூடும்.புத்துணர்ச்சி போகாது...

கணவன் மனைவிக்கான அந்த #சலிப்புதன்மை இந்த புத்துணர்ச்சி இல்லாததால் தான் வருகிறது...புத்துணர்ச்சியுடன் இருக்கும் கணவனோ மனைவியோ ஏதாவதொரு சேட்டையையும் கிண்டலையும் செய்து கொண்டு இருப்பார்கள் அப்போது தான் அந்த உறவில் சலிப்புதன்மை என்பதே வராது...இதை புரிந்துகொள்ளாமல் தான் பல விவாகரத்து வழக்குகள் பதியப்படுகிறது...இது ஆதாரப்பூர்வமாக பல உளவியல் நிபுணர்களால் நிறுபிக்கப்பட்ட விசயமே...

எப்போதும் புத்துணர்ச்சியுடன் கணவன் மனைவி வாழ்க்கையில் இன்புற்று இருக்க எனது வாழ்த்துகள் - விருத்திரன் சே

காதல்


காதல் :-

எனக்கு தெரிந்து புரட்சி என்ற வார்த்தைக்கு பிறகு அதிகமாக மலுங்கடிக்கப்பட்ட வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.

இந்த ஒரு வார்த்தையை வைத்து ஆயிரம் அரசியல் பேசிவிடலாம்.காதலுக்கான விளக்கம் என்ன என நண்பர்களிடம் கேட்டப்போது அவர்கள் சொன்ன பதில்கள்

1) மனதுடன் மனது சேருவது

2) பார்த்தவுடன் வருவது

3) காமத்திற்கு முன்

இது போல் நிறைய வந்தது... என்னை பொருத்தவரை

காதல் : இயற்கை மனிதர்களின் வாழ்க்கையை இணைக்க மனதில் உருவாக்கும் ஒருவகை #உணர்வு

காமம் : இயற்கை மனிதனின் உடலை இணைக்க உருவாக்கும் #உணர்ச்சி

உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் வேறுபாடு உண்டு.அதிகமாக நாம் உணர்ச்சிவயப்படுவதால் நாம் பார்பதை எல்லாம் காதல் என்று முடிவு செய்கிறோம்.

மனிதர்களின் இந்த உணர்ச்சியை பணமாக்கும் தந்திரம் தான் தற்கால #சினிமா

தற்போது அது ஒவ்வொரு பொருட்களின் விளம்பரத்திலும் கூட வந்துவிட்டது.உங்களின் உணர்ச்சியை தூண்டி தான் அவர்கள் பொருள்களை உங்கள் மனதில் பதிய வைக்க வேண்டியுள்ளது.இதற்கு பெரும்பாலும் பெண்கள் தான் பயண்படுத்தப்படுகிறார்கள்.இவை எல்லாம் தற்செயல் நிகழ்வுகள் அல்ல.எல்லாமே ஆராய்ச்சி செய்து திட்டமிட்டு செயல்படுத்தப்படுபவை...

எதற்காக காதலை பற்றி தெரிய வேண்டும் என்றால் :

காதல் என்று காம உணர்ச்சியின் மூலம் இங்கே பல லட்சம் கோடி பொருளாதாரம் சுரண்டப்படுகிறது.

அனைத்து பொருள்களும் அதை அடிப்படையாக கொண்டே விளம்பர படுத்தப்படுகிறது.பெண்ணின் உடலை காட்டி உங்களை அந்த விளம்பரத்தை பார்க்க வைக்கிறார்கள் என்றால் எவ்வளவு கேவலமான செயல் இது.இதை படித்து கொண்டு இருப்பவர்கள் தொலைகாட்சியை பாருங்கள் அது உங்களுக்கு காட்டும் நான் சொல்லும் இந்த விடயம் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று...

நீங்கள் காதல் என்ற ஒற்றை உணர்வை புரிந்துவிட்டால் போதும் காமத்தை உங்களால் பிரித்து பார்க்க முடியும்.காமம் எது என தெரிந்துவிட்டால் அதை வைத்து செய்யும் வியாபார கூத்துகளை நிராகரிக்க முடியும்.

" நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் காதல் என்ற உணர்வின் மேல் விருப்பம் கொள்ளுங்கள் இயற்கை அதை உங்களை உணரவைக்கும்.இயற்கை உங்களை இணைக்க முடிவு செய்துவிட்டால் யாராலும் அதை உடைக்க இயலுமோ! ! ! "