Friday, 8 January 2016

ATM Online Complaint:

ATM Online Complaint:

இதுவரை அதிகாரவர்கத்தினர்
அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த
அப்பாவிகள், சாமானியர்கள்,
வாடிகையளர்கள்,
படிப்பறிவு குறைவானவர்கள் என
பல்வேறு தரப்பினர்
இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும்
என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
அதன் முதல் அங்கம், இந்தியாவில்
அனைத்து வங்கிகளையும்
தனது கட்டுபாட்டுக்குள்
வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண்
வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman }
என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த
சாதகமாகாவும், அசுர வேகத்தில்
வாடிக்கையாளர்களின்
குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக
செயலாற்றுகிறது என்பது பெரும்
மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.
அப்படியொரு சுவாரசியமான
செய்தி தான் நேற்று சென்னையில்
நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ள
து) என்ற வாடிக்கையாளர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள
அரசு உடமையாக்கப்பட்ட
வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/-
பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள்
வங்கி கணக்கிலிருந்து பணம்
எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல்
(SMS ) வந்துள்ளது.
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த
ஏமாற்றத்துடன்
வங்கியை அணுகி உள்ளார்.
வங்கியில் ஒரு கடிதம்
எழுதி கொடுங்கள் பணம் வந்தால்
தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த
சீட்டை இதோடு இணைத்து தாருங்கள்
என்று கூறியுள்ளனர்.
இவரும் கடிதம்
கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும்
எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம்
தேதி வரை காத்திருந்து பலன்
இல்லாமல் கடைசியாக மே 28ம்
தேதி இறுதியாக
வங்கியை தொடர்பு கொண்டார்.
அப்போதும் எந்தபலனும் இல்லை,
பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர்
திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
தனியார் வங்கியில் வேலை செய்பவரும்
ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல
நிலையை சொல்லி உள்ளார்.
அவர் தான் முதன் முதலில்
"ஒபட்சு மேன்" { Ombudsman }
பற்றி சொல்லி உள்ளார்.
அதை கேள்வி பட்ட அதே நாளில்
தனது அவலத்தை பின்வரும் இணையம்
வாயிலாக
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மே 29 அன்று ரூபாய் 3000/-
வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட
ஈடு தொகை ரூபாய் 525/-ம்
செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட
வங்கி பலமுறை தொலைபேசியில்
தொடர்புகொண்டு நேரில்
அழைத்து கைப்பட கடிதமும்
வாங்கி உள்ளனர்.
மேலும் சகல மரியாதையும்
செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற
தவறுகளை செய்தால் நீங்களும்
யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
" https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodal
Officer.html
சொடுக்கி உங்கள்
குற்றங்களை பதிவு செயுங்கள்.
நீங்கள் கூறும் குற்றம்
உண்மை என்று நிருபணம் செய்யபட்டால்
சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம்
செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்"
க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம்
தொடர்ந்து அதிகமாக இருந்தால்
சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும்
அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம்
உள்ளது.
இதை பார்கையில் எத்தனை காலம் தான்
ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல்
வரி ஞாபகம் வருகிறது.
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும்
இனி வரும் காலங்களின்
ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற
வாடிக்கையாளர் ஆதரவு நிலையம்
இயங்கும் காலம் தொலைவில்
இல்லை என்பது மட்டும் உண்மை

No comments:

Post a Comment