Saturday, 16 January 2016

Post by Atchaya on 2011-09-10, 22:29 புத்தகத்தின் பெயர் - கணக்கதிகாரம்.

Post by Atchaya on 2011-09-10, 22:29
புத்தகத்தின் பெயர் - கணக்கதிகாரம். To download click here
இந்த புத்தகத்தை, நேரம் கிடைக்கிறப்போ, படிச்சுப் பாருங்க.ஆரம்பத்துல , தமிழ் கொஞ்சம் கடினமா தெரியலாம். ஆனா, சுவாரஸ்யமான புத்தகம்.
நம் பூமியோட அளவு என்ன, நிலம் எவ்வளவு, நீர் எவ்வளவு , சூரியன், சந்திரன் எவ்வளவு தொலைவுலே இருக்கு , மயிர் முனையை விட பல மடங்கு சின்ன அளவைகள், ஒரு மலையோட உயரம் எப்படி கண்டு பிடிக்கிறது , ஒரு படி நெல்லுல, எத்தனை நெல்லு இருக்கும்.. இப்படியே போயி, தயிர் கடல் , பாற் கடல் - அப்படின்னு அந்த காலத்து நம் கலாச்சாரம் , கண் முன்னே தெரிகிறது. அது தவிர , அன்றாட வாழ்க்கையில், அவர்களது டே-டு-டே விஷயங்களுக்கும் , பல சூத்திரங்கள் சொல்லி இருக்கிறார். என்ன ! ஒன்னு , ரெண்டு நம்பர்லாம் - தமிழ் ல இருக்கு. அதை முதல்லே நீங்க தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் படிக்கலாம். அவர்களின் திறமை , ஆச்சர்யத்தில் மூச்சை இழுத்துப் பிடிக்க வைக்கிறது. படிக்கும் ஆர்வம் இருப்பவர்களுக்கு சந்தேகமே இல்லாமல் ஒரு பொக்கிஷம்.
.சாம்பிளுக்கு கீழே ஒன்னு பாருங்க.

ஒரு பலாப் பழத்தை அறுக்காமலே அதில் எத்தனை சுளை இருக்கிறது என்பதைக் கண்டறிய
"பலவின் சுளையறிய வேண்டிதிரேலாங்கு
சிறுமுள்ளுக்காம்பருக்கெண்ணி - யறுகாக
ஆறிற்பெருக்கியே யைந்தினுகீந்திடவே
வேறென்ன வேண்டாஞ்ச்சுளை"

அதாவது பலாப்பழத்தின் காம்பைச் சுற்றியுள்ள முற்களை எண்ணி அதனை ஆறால் பெருக்கினால் வரும் விடையை ஐந்தால் வ‌குத்தால் கிடைப்ப‌து அந்த‌ பலாவில் உள்ள‌ எண்ணிக்கையாகும்.

உதாரணம்: காம்பைச் சுற்றியுள்ள சிறு முள்ளின் எண்ணிக்கை 30 எனில் 30 x 6 = 180 180/5 =36 பலாச்சுளைகளின் எண்ணிக்கை = 36 ஆகும். இதை எல்லாம் சர்வ சாதரணமாக கண்டறிந்து , அதை நம்மைப் போல பிற்கால சந்ததியும் அறிந்து கொள்ள பாடல் இயற்றி , வழி வகுத்துள்ளனர்.

இப்படிப் பலப்பல ஆச்சர்யங்கள்... !

No comments:

Post a Comment