என் மன வேதனை அதிர்ச்சிப் பகிர்வு...
தேங்காய் இன்று உடைத்து வைத்து மிச்சம் இருந்தால் குளிர்சாதனத்தில் வைக்கிறோம்.
வெளியே வைத்தால் என்ன ஆகும்?...
அப்படியானால் லட்சக்கணக்கான தேங்காயை உடைத்து வியாபாரிகள்
எப்படி பயன் படுத்துவார்கள்?
தேங்காய் எண்ணை தயாரிப்புக்கு
அடி நாதமாக விளங்கும் இந்த கொப்பரையை பதப் படுத்த இயற்கையான முறையில் தயார் செய்ய இயற்கையாக காய வைத்தாலே போதும்.
நியாயமாக தொழில் செய்ய மக்களுக்கு நன்மை தர நல்ல தரமான கொப்பரை இருந்தால்தானே சுத்தமான தேங்காய் எண்ணை கிடைக்கும்?
ஆனால் பணம் செய்ய
எதையும் செய்யலாம்?
எப்படியும் செய்யலாம்?
என்ற சிந்தனை அரசியல்வாதிகளிடம் இருந்து வியாபாரிகளுக்கும் பரவியதால் கொப்பரையில் பட்டாசு தயாரிக்க பயன்படும் கந்தகத்தைத் தடவி இருப்பு வைக்கிறார்கள்.
தேங்காய் விலை ஏறும் காலத்தில் இவர்களுக்கு விலை அதிகமாக கிடைக்க இந்த முறை பயன் படுகிறது.
சபரி மலை ஐயப்பன் கோவிலில் வெடி வழிபாடு நடக்கும்.
கோடிக்கணக்கான தேங்காய் உடைத்து வழிபாடும் நடக்கும்.
கீழே கொண்டு போய் சேர்த்து எண்ணெய் கம்பெனிகளிடம் சேர்க்க காலதாமதம் ஆகும்.
அதனால் வெடி வழிபாடு செய்யும் இடத்திலேயே கந்தகம்(SULPHUR) பூசப் படுகிறது.
கந்தகத்தால் பாதுகாக்கப்பட்ட கொப்பரைகள் பல மாதங்களானாலும் ஒன்றும் ஆகாது.
ஒரு பொருளில் புழு வந்தாலோ,வண்டு வந்தாலோ,பூசனம் பூத்தாலோ உயிர்த் தன்மை இருக்கும்.
புழு,பூச்சி சாப்பிட்டது போக மீதி கிடைப்பதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதுதான் நியதி...
ஆனால் நமக்கு இரண்டு வருடம் ஆனாலும் ஹார்லிக்ஸ் மாதிரி கெடாமல் இருக்கணும்.
அப்புறம் கெமிக்கலை கலந்தால்தான் கெடாது.
கெமிக்கலில் முக்கினால் என்னவாகும்!?
கொப்பரையில் உள்ள அமில கந்தகம் உடம்புக்குள் போனால் என்னவாகும்?
கேன்சர் வரும்....
வயிறு கோளாறு வரும்....
ரத்த ஓட்டம் அதிகரித்து ரத்தக்கொதிப்பு வரும்....
சுரப்பிகள் சீர் கெட்டு நீரிழிவு நோய் வரும்....
உடல் பருமன் மாறுபடும்...
கிட்ணி பழுதடையும்......
இருதய துடிப்பு எண்ணிக்கை மாறுபடும்....
புத்தி வேறுபடும்....
சோரியாசிஸ் தோல் வியாதிகள் வரும்....
சரி...இதோடு போனால் பரவாயில்லை.
தேங்காய் விலை உயர்வு...
எள் விலை உயர்வு...
கடலை விலை உயர்வு...
சூரியகாந்தி விதை உற்பத்தி குறைவு...
இதனால் எண்ணெய் விலைகள் கடும் விலை உயர வேண்டும்.
ஆனால் அப்படி உயராமல் விலை குறைவாகதான் உள்ளது.
ஒரு சிறிய பார்வை....
ஒரு லிட்டர் எண்ணெய் தயாரிக்க சுமார் மூன்று கிலோ விதை தேவைப்படும்.
நிலக்கடலை கிலோ ரூ70*3kg=Rs210
எள் கிலோ ரூ90*3kg=Rs 270
சூரியகாந்தி விதை ரூ55*3kg=Rs 165
மேலே சொன்ன விலை ஒரு கிலோவுக்கு என்றாலும் ஆட்கள் சம்பளம்,கரண்டு பில் ,கழிவு,லாபம் கணக்கிட்டால் விலை எங்கே போகும்!?
இப்படி விலை பிரச்சனையால் எல்லா இடத்திலும் ஒரு தந்திரத்தனம் உருவாகிறது.
அதனால் மனித இனத்திற்கே கேள்விக்குறி ஆகிறது?!எப்படி?!...
இனிதான் உங்களுக்கு அதிர்ச்சி...???!!!
வளைகுடா நாடுகளில் பெட்ரோலிய இன்டஸ்ட்ரியல் கழிவு லிட்டர்
ரூபாய் 11 க்கு பெறப்படுகிறது.
அதை இங்கு கூலிங் பிராசஸ் செய்து லிட்டர் ரூபாய் 30க்கு எண்ணெய் தயாரிப்பு கம்பெனிகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.
இதை இறக்குமதி செய்வது "பாமாயில்" என்கிற பெயரில் இங்கு வருகிறது.
பால்ம் என்ற மரத்தில் இருந்து எடுக்கப்படும் பாமாயில் உண்மையில் மிக நல்ல எண்ணெய் தான்.
பனை மரம்,பேரீச்ச மரம் போன்று பால்ம் ஒரு சிறந்த மரம்.
ஆனால் உலகம் முழுவதும் பாமாயில் எண்ணெய் சப்ளை செய்ய இயலுமா?
பால்ம் மரங்கள் உள்ளதா?!
சூரிய காந்தி எண்எணய் வியாபாரம் தமிழகம் உட்பட பாரதம் முழுவதும் விற்பனை ஆகிறது.
அதற்கு ஏற்ப சூரியகாந்தி சாகுபடி தோட்டங்கள் உள்ளதா?....இல்லையே!
சரி விடுங்கள்...
250 சூரியகாந்தி பூவில் உள்ள விதையில் 50 ml சன்பிளவர் ஆயில் தான் கிடைக்கும்.
125 கோடி மக்களுக்கு சன் பிளவர் ஆயில் தயாரிக்க எங்கே விவசாய சாகுபடி நடக்கிறது?!
அதுபோலதான் பாமாயிலும்...
சரி.
நன்றாக போய் கொண்டு இருந்த நேரத்தில் நாம் நல்லெண்ணை,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் பயன் படுத்தி வந்தோம்.
இதயத்தை பாதுகாக்க சூரியகாந்தி எண்ணெய் என்று நமக்கு பொய் சொல்லி,விளம்பரம் செய்து நம்மை ஏமாற்றியதை நாம் அறிந்தோமா!?
உண்மையில் கொழுப்பு சத்து நம் உடலுக்கு கட்டாயம் வேண்டும்.
ஒரு மிருகத்தில் இருந்து எடுக்கப்படும் நெய்யே நமக்கு நன்மை தந்தால் ஒரு இயற்கையான தாவரத்தில் இருந்து கிடைக்கும் எண்ணை நமக்கு செரிமானம் ஆகாதா!?
சிந்தனை செய்யுங்கள் மக்களே!!!
பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு, குழந்தை பாக்கியம் இன்மை,ஆண்மை கோளாறு,சிறு வயதிலேயே வயதுக்கு வருதல்,கேன்சர்,சிறு வயதில் சர்க்கரை நோய் போன்ற அனைத்து வராத நோய் வந்த பிரச்சனைக்கும் காரணம் பாழாய் போன சன் பிளவர் ஆயில் வந்த பிறகுதானே!!!!.
எண்ணெயை தொட்டுப் பாருங்கள்.
அது பச பசன்னு கிரீஸ் மாதிரி இருக்கும்..
எண்ணெய் என்ற பெயரில் கந்தகமும்,பெட்ரோலிய கழிவுகளும்,அதே எண்ணெய் போல தயாரித்த வாசனைகளும் கலந்தால் நம் உடல் என்னவாகும்!?
மனிதச் செயலா இது?!
எண்ணெய் கலப்படம் ஒரு சர்வ தேச மோசடி...
கொலை பாதக செயல்...
நூடில்ஸ் மோசடியை விட இது கோடிக்கணக்கான மடங்கு விஷக் கொலைச் செயல்!?
இது உயிர் உடலா?!கெமிக்கல் பேரலா?!
அரசின் தீர்வுதான் என்ன?
உணர்வு செத்து வேடிக்கை பார்க்கும் குருட்டு சுகாதார அமைச்சத்தை இழுத்து இனி மூடி விடலாம்...
இந்த படத்தில் உள்ள கொப்பரை 11 மாதங்களாக கெடாமல் உள்ள கந்தகக் கொப்பரை.
உங்கள் வருங்கால சந்ததிகளை எண்ணி உணர்ந்து பாரம்பரியம் காக்க பகிருங்கள் என் சக நண்பர்களே!!!...
Thursday, 21 January 2016
என் மன வேதனை அதிர்ச்சிப் பகிர்வு... தேங்காய் இன்று உடைத்து வைத்து மிச்சம் இருந்தால் குளிர்சாதனத்தில் வைக்கிறோம்.
Labels:
பொது அரிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment