Sunday, 25 October 2015

வாழ்க்கை ஒரு போராட்டம்! இதில் தோல்வி கூட வெத்ற்றிக்கு சமமெ


வாழ்க்கை ஒரு போராட்டம் !
இதில் தோல்வி கூட
வெற்றிக்குச் சமமே
தோற்க மாட்டேன் என்று
வியர்வை சிந்தினால்.!

வெட்டப் பட்ட மரக்கிளையிலும்
உயிருண்டு, அதை
நட்டுப்பார்,
நம்பிக்கை எழுந்து வரும் !

உழைப்பது உன் கடமை
உனக்காக வாழ்வது
உன்னைப் படைத்த
கடவுளின் கடமை.!
எந்த தாய்ப் பறவையும்
தன் குஞ்சு பசித்திருக்கையில்
தூங்காது,
தன் வயிற்றை நிரப்பிக் கொள்ள
இரை தேடாது.

உயர்வோ தாழ்வோ
விடியும் வரை போராடு.
விடியாது போனால்
சாகும் வரை போராடு.!

கசப்பிலும் சுவையுண்டு
இனிப்பிலும் நஞ்சு உண்டு
மகிழ்ச்சியும் துக்கமும் வெறும் மனதளவு.
மயங்காமல் வீரநடை போடு..!

No comments:

Post a Comment