முதலில், "மதுரை" எனப் பெயர்பெற்றது... குமரிக் கண்டத்தின் பஃறுளி ஆற்றங்கரை தலைக்கழக இருக்கையே. இன்றைய வைகைக்கரை மதுரைகூட மூன்றாம் மதுரையே. குமரிக்கண்டம் கடலில் மூழ்கி, ஏற்பட்ட புதிய நிலப்பரப்பான வட இந்தியாவுக்குச் சென்ற தமிழர், (டெல்லிக்கு அருகேவுள்ள) கண்ணன் மதுரையை அமைத்தனர். தம் முன்னோரையும், தம் பூர்வீக நகரையும் நினைவு கூர்வதற்கே அதற்கு அப்பெயரிட்டனர். பிற்காலத்தில், அப்பெயர் அந்நாட்டு மக்கள் மொழி இயல்புகேற்ப "மதுரா" எனத் திரிந்தது.
கண்ணனின் காலமாகிய பாரத காலத்தில் வைகை மதுரை இல்லாமையால், இந்தியாவிலேயே இரண்டாவது மதுரை, வடநாட்டு மதுரையே! ஆதலால், அதை அமைத்தவர்கள், தலைமைக் கழகம் இருந்த நிலப்பகுதியை முழுக்கிய முதற்கடல்கோளினின்று (சுனாமியிலிருந்து) தப்பியவராக இருத்தல் வேண்டும்.
வைகை மதுரையும், மானாமதுரையும், தமிழகத்தின் வடமதுரையும் இதன்பின் தோன்றியவையே. வடநாட்டு மதுரையே, தலைக்கழக மதுரையைத் "தென்மதுரை" என அழைக்கக் காரணமானமென்றும் அறிக.
"மதுரை" எனும் இடப்பெயர் திங்களைக் குறிக்கும் 'மதி' என்னும் சொல்லினின்று தோன்றியது. தலைக்கழக மதுரையை அமைத்த பாண்டியன், தன் குலமுதலாகக் கொண்ட சுடர்பெயரை முதல் அடியாகக் கொண்டு "மதிரை" என அந்நகருக்குப் பெயரிட்டான். 'குதி' எனுஞ் சொல்லினின்று 'குதிரை' என்ற பெயர் தோன்றியபடியே, இதுவும் ஆயிற்று. பின்னர், ஒலிப்பு எளிமை காரணமாக, அதுவே "மதுரை" எனத் திரிந்தது. (ஒப்புநோக்கல் - எதிர்கை - எதுகை)
குலசேகரப் பாண்டியன் வேண்டுகோளுக்கிணங்கி, சிவபெருமான் தன் சடைமுடியிலுள்ள மதியினின்று மதுவைப் பொழிந்த இடம் மதுரை என்று ஆனதென திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டிருப்பது கற்பனைக் கதையும், சிவபெருமானை மக்கள்பால் நம்பவைக்கக் கொண்ட சூழ்ச்சியே அன்றி, அது வெறும் உன்னிப்பு சொல்லியல் (Assumption Etymology) என்றுணர்ந்து விடுக்க. நன்றி!
Tuesday, 9 February 2016
முதலில், "மதுரை" எனப் பெயர்பெற்றது...
Labels:
பொது அரிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment