மருத்துவம்:
ஆங்கில மருத்துவத்தில் நோய்வாய்பட்ட நபர் இருக்கும் இடத்திற்கு மருத்துவர் வரமாட்டார். மருத்துவர் இருக்கும் இடத்திற்குத்தான் நோயாளி செல்லவேண்டும். ஆனால் நாட்டு மருத்துவரோ நோய்வாய்ப்பட்டவரின் வீட்டிற்கே சென்று நாடி பார்த்து ஒருசில நிமிடங்களில் நோயைக் கண்டறிந்து விடுவார். அதற்கான மருந்தையும் நோயாளியின் வீட்டைச் சுற்றி வளர்ந்திருக்கும் மூலிகைகளை வைத்தே தயாரித்துக்கொள்வார். இதுமாதிரியான நாட்டு மருத்துவ முறைகள் வணிகத்திற்கு உகந்ததாக இல்லாத காரணத்தால் அம்மருத்துவத்தை முழுவணிகமாக மாற்றுவதற்கு கண்டறியப்பட்ட ஒரு உத்தியே ஆங்கில மருத்துவம் ஆகும். இம்முறையில் நாட்டு மருந்துகளைப் போல அல்லாமல் எளிதில் வீணாகாதவாறு மருந்துகளைத் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் அதை வெகுநாட்களுக்கு வைத்திருந்து வணிகம் செய்யமுடியும். மூலிகைகளை காய்ச்சி வடித்து அதிலிருந்து எடுக்கப்படும் சாரத்தை மாத்திரைகளாகவோ (அ) ஊசித்திரவங்களாகவோ வைத்திருப்பதன் மூலம் அவை நெடுநாட்களுக்கு கெட்டுப்போவதில்லை. இருப்பினும் இதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகள் மிகப் பயங்கரமானது.
ஆங்கில மருத்துவம் தனித்து இயங்குவதில்லை. மூன்று வெவ்வேறு பிரிவுகளாக இயங்குகிறது. 1) நோயைக் கண்டறிதல் 2) நோய்க்கான மருந்தை தயாரித்தல் 3) நோய்க்கான மருந்தை சிபாரிசு செய்தல். இவற்றுள் 3-வது பிரிவில் மட்டுமே மருத்துவர்கள் பணியாற்றுவார்கள். மற்ற பிரிவுகளில் மருத்துவத்தை சாராதவர்கள் பணியாற்றுவார்கள். ஒரு நோயாளி ஆங்கில மருத்துவரிடம் சென்றால் அவரை நோயைக் கண்டறியும் துறைக்கு முதலில் சிபாரிசு செய்து அனுப்புவார். அங்கு Blood Test, Urine Test, Ultrasonic Sound Test, CT, MRI போன்ற டெஸ்டுகள் எடுக்கப்பட்டு நோயாளியிடம் மிகப்பெரிய வியாபாரத்தை நடத்துவார்கள். நோயாளி ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்த பின்னரே அவரது நோய் கண்டறியப்பட்டிருக்கும்.
அதன் பின்பு அந்த ரிப்போர்டை எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவரிடம் செல்வார். அதற்கு மருத்துவர் கார்ப்பரேட் கம்பெனிகளால் தயாரிக்கப்படும் மருந்துகளை சிபாரிசு செய்யும் வெற்றுப்பணியை மட்டுமே செய்வார். அதன்பின்னர் பாதிக்கப்பட்ட நோயாளி மருந்துகளை விற்கும் விற்பனையகத்திற்கு சென்று மருந்துகளை வாங்குவார். அங்கும் நோயாளியிடம் மிகப்பெரிய வியாபாரம் நடந்திருக்கும். ஆக மொத்தத்தில் ஒரு ஆங்கில மருத்துவரால் கார்ப்பரேட் கம்பெனிகளின் விற்பனை பிரநிதியாக மட்டுமே செயல்படமுடியும். அவரால் தனித்து எந்தவொரு முடிவும் எடுக்க இயலாது. ஒருவேளை ஆங்கில மருத்துவத்தின் தவறால் உயிரிழப்பு ஏற்படுமானால் சம்மந்தப்பட்ட மருத்துவர் மருந்து கம்பெனிகளை குறைகூறியோ அல்லது ஸ்கேன் சென்டர்களைக் குறை கூறியோ தப்பித்துக்கொள்வார். பாதிக்கப்பட்டவருக்கு பட்டை நாமமே சாத்தப்படும்.
ஆனால் ஒரு திறமையான நாட்டு மருத்துவரோ 1) நோயைக் கண்டறிதல், 2) நோய்க்கான மருந்தை முடிவு செய்தல், 3) அம்மருந்தை தயாரித்தல் என இம்மூன்றையும் ஒருவரே செய்துவிடுகிறார். இதன் மூலம் ஏதாவது சிறிய தவறு நடந்தால் கூட அவரை எளிதாக சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க முடியும். நாட்டு மருத்துவ முறைகள் இன்றும் உயிர்ப்புடன் இருப்பது வணிக இயங்கியலுக்கு ஒத்தே வராது என்பதால்தான் அதனை அழிக்க முழுமூச்சாக களம் இறங்கியிருக்கிறார்கள்.
- N. Ezhilan
#தற்சார்பு_வாழ்வியல்
No comments:
Post a Comment