விருதுநகர் பரோட்டாவும், பொறிச்ச பரோட்டாவும் சுவையாக இருக்கலாம். ஆனால், நீங்கள் உண்பது மெல்லக் கொல்லும் விஷத்தை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தின் நகர, புறநகரப் பகுதிகளில் பரோட்டாக் கடை இல்லாத தெருவைப் பார்க்க முடியாது. கிராமங்களிலும் பரோட்டா பிரியர்கள் அதிகம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது பரோட்டா. ஒரு சாதாரண மனிதன் ஒரு வாரத்தில் பரோட்டா சாப்பிடாமல் கடந்துவிட முடியாது. குறிப்பாக, பேச்சுலர்கள்.
பரோட்டா, வீச்சு பரோட்டா, முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா, சிலோன் பரோட்டா, சில்லி பரோட்டா, கைமா பரோட்டா, முட்டை லாப்பா என பரோட்டாவிலேயே ஏராளமான வகைகள்.
விதவிதமான கிரேவிகளுடன் நினைத்தாலே எச்சிலூறும் சுவை. பரோட்டா உடலுக்குக் கெடுதல் என சில ஆண்டுகளாகவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், அதன் மீதான மோகம் குறையவில்லை.
எளிதில் கிடைக்கும் உணவு. மலிவான விலை. அதன் சுவை எனப் பல காரணங்கள்.
ஆனாலும், பரோட்டா ஏன், எந்த அளவுக்குத் தீமையானது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
பரோட்டாவின் மூலப்பொருள் மைதா. இது வெள்ளை எமன். மைதா கோதுமையில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
மைதாவை மூன்று பெரும் பாகங்களாகப் பிரிக்கலாம்.
தவிடு (Bran)
முளை (Germ)
வித்தக விழையம் (Endosperm).
இதில், மற்ற இரண்டையும் நீக்கிவிட்டு வித்தக விழையத்தில் இருந்து மட்டும் மைதா தயாரிக்கின்றனர். இதில், மாவுச்சத்தும், செரிக்க அதிக நேரம் எடுக்கும் குளூட்டனும், புரோட்டினும் உள்ளன.
மைதாவில் உள்ள குளூட்டன் சிக்கலான வடிவம் கொண்டது. எனவே, செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும். எனவே, இதை உண்பவர்களுக்குச் செரிமானச் சிக்கல் வரும்.
வித்தக விழையம் நன்றாக அரைக்கப்பட்டால், அது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த மாவை பென்சாயில் பெராக்ஸைடு (benzoyl peroxide )எனும் ரசாயனத்தால் வெள்ளை ஆக்குகிறார்கள். இதுதான் மைதா.
இந்த பென்சாயில் பெராக்ஸைடு முடிக்கு டை அடிக்க பயன்படுத்தும் ரசாயனம். இது, புரதத்துடன் சேர்ந்து, சர்க்கரை நோயை (Diabetes) உருவாக்குகிறது.
மாவை மிருதுவாக்க, அலோக்ஸான் (Alloxan) எனும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, செயற்கை நிறமூட்டிகள், மினரல் எண்ணெய், சுவையூட்டிகள், சர்க்கரை, சாக்கரின், அஜினோ மோட்டோ போன்றவையும் மைதா மாவில் சேர்க்கப்படுகின்றன. இவையெல்லாம் சேர்ந்ததுதான் மைதா மாவு.
அலெக்ஸான் ரசாயனம் எதற்கு பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள். சோதனைக் கூடங்களில், எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதற்காக, இந்த வேதிப் பொருளைத்தான் பயன்படுத்துவார்கள். அப்போதுதானே அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியும். ஆக, பரோட்டா சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் நிச்சயம்.
மைதா மாவில் நார்ச்சத்தே இல்லை. இதனால், நம் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, செரிமான சக்தி குறைந்து விடும்.
மைதாவில் செய்யப்படும் பரோட்டா மட்டுமல்லாமல், வேறு எந்த தின்பண்டமாக இருந்தாலும் அது ஆரோக்கியக் கேடுதான். எனவே, நீங்களும் உண்ணாதீர்கள், குழந்தைகளுக்கும் உண்ணக் கொடுக்காதீர்கள்.
ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் மைதா பண்டங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய் மட்டுமல்ல, சிறுநீரகக் கல், இதய நோயும் வர வாய்ப்புள்ளது.
மக்களே உஷார். விருதுநகர் பரோட்டாவும், பொறிச்ச பரோட்டாவும் சுவையாக இருக்கலாம். ஆனால், நீங்கள் உண்பது மெல்லக் கொல்லும் விஷத்தை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment