ஒருவர் ஒருகாலத்தில் சொன்ன கருத்துகள் அன்றைய சூழலுக்கும் காலத்திற்கும் ஏற்ப இருக்கும் அதை பலகாலம் கடத்தி ஆவணப்படுத்தப்படும்போது அந்த கருத்துகளின் சிதைவு எப்படியாகியிருக்கும் என்பதை உங்கள் (Abuasia) முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.. குறிப்பு : நபிகள் வாழ்ந்த காலமும் ஆவணப்படுத்தப்பட்ட காலத்திற்கும் உள்ள இடைவெளியில் என்ன நடந்திருக்கலாம் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்..
100-150 வருடங்களுக்கு முன்னர் எத்தனைபேருக்கு எழுத படிக்கத்தெரியும் .. இது தேவையில்லாமலே மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள்.. அப்ப இந்த எழுத்தாக்கம் செய்யப்பட்ட நூல்களின் (இலக்கியங்கள்) பயண்பாடு யாருக்கானது? இதன் மூலம் பயண் ஈட்டக்கூடியவர்களுக்கே இந்த எழுத்துகள் பயண்பட்டிருக்கும்.. எழுத்துருவாக்கம் என்பது வணிகத்தின் தேவை அதனாலேயே எதெயெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டதோ அத்தனையும் வென்றவர்களாலும் வணிக பயன்பாட்டிற்கு ஏற்ப எழுதப்பட்டிருக்கும் … அதாவது யாரோ யாருக்காகவோ யாருடைய கருத்தையோ எழுத்துருவாக்கம் செய்யவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது உற்று நோக்கினால் புரியும்… ஆனாலும் சில விடயங்களை சமூக அமைப்பாக கடைபிடித்து வந்தவைகளுக்கான காரணம் தெரியாவிட்டாலும் அதை பற்றிய உண்மையை அந்த செயல்களின் மூலம் உணரமுடியும்.. சந்திரனின் பிறையை / மறைநிலவு / முழுநிலவு பார்தது சில விடயங்களை முடிவு செய்வது.. இவற்றை ஆவணப்படுத்தத்தேவையில்லை அவை வாழையடி வாழையாக மரபாக கடத்தப்படும் மரபறிவாகவும், நினைவலைகளாகவும் கடத்தப்படும்… இவற்றை எழுத்தில் விவரித்தால் அதனின் கருத்து எப்படி வேண்டுமானாலும் சிதையும்...
75 வருடத்திற்கு முன் என் மீது இந்து என்று அடையாளம் திணிக்கபடாதவரை எனக்கு எந்த மத அடையாளமும் இல்லை.. அதே மாதிரிதான் 300-700 வருடங்களுக்குள் இசுலாம் / கிருத்துவத்திற்கு மாறியவர்களின் நிலை.. அதற்கு முன்னர் இந்த மதம்/சமயம் நகரத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அவர்களுக்கும் கிராமங்களிலும் காடுகளிலும் வாழ்ந்த வர்களுக்கு சம்பந்தமில்லை.. இவர்களைதான் பழங்குடிகள் என்கிறேன்.. பழங்குடி / தற்சார்பு வாழ்வியல் என்றால் இலைதலையை கட்டிக்கொண்டு காடுகளில் மட்டும்தான் வாழ்பவர்கள் என்கிற உங்கள் நினைபிற்கு நான் பொறுப்பாகமுடியாது.. இன்னும் சொல்லப்போனால் இசுலாம் / கிருத்துவம் / இந்து என்று அடையாளப்படுத்துமுன் உங்களையும் சேர்த்தே அனைவரும் பழங்குடிகள்தான்.. மதம்மாறியவர்களின் குலங்களை பார்ததிருக்கிறீர்களா, நகரத்தில் வாழும் பிராமண மற்றும் உயர்ந்த குலங்களிலிருந்து எவ்வளவு பேர் மதமாறியிருக்கிறார்கள் என்று புள்ளிவிவரத்தை உற்று நோக்கினால் புரியும்… என் பழங்குடி மரபு நான் நினைத்தாலும் அழிந்துபோகாது.. அதை அழிக்க காலமும் அதற்கெதிராக மரபு திணித்தலும் தொடர்ந்து என்மீது ஏவப்பட்டாலே சாத்தியம்...
எனக்கு எது தேவை என்பதை உணர்கிறேனோ அதைமட்டுமே படிப்பேன்.. இயற்கையை பற்றிய தேடுதலும், புரிதலும் மற்றும் உணர்தலும் இப்போதைய தேவையாக உணர்கிறேன் .. இதற்கே எனக்கு நேரமில்லை.. இதில் அதைப்படி,இதைப்படி என்று சொன்னால் எப்படி?
ஒருவருக்கு மீனைக்கொடுப்பதைவிட மீனைப்பிடிக்க கற்றுக்கொடுத்தால் மிகச்சிறப்பு.. அதேமாதிரிதான் ஒருவருக்கு கருத்தை சொல்லுவதைவிட்டுவிட்டு அவரை சிந்திக்கவைத்துவிட்டால் அவரே அவருக்கு தேவையான கருத்துகளை காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப உருவாக்கிக் கொள்வார் இதற்கு நூல்களைப்படித்தால் பற்றாது அதனின் அடிப்படையை புரிந்து கொண்டு இயற்கையோடு ஒன்றிணைத்து பார்ககவேண்டும் அப்போது புலப்படும்.. எந்த நூல்களின் உதவியின்றி இயற்கை நமக்கு பாடம் எடுத்ததுக்கொண்டேயிருக்கிறது நாம் கவனிப்பதேயில்லை.. நாமும் இயற்கையை கவனிக்க ஆரம்பித்தாலே போதும்…
இங்கே இவற்றை பதிவிட்டது சிந்திக்க மட்டுமே.. அந்த நூலில் இது இருக்கிறது.. இந்த மார்ககத்தில் இப்படியிருக்கிறது.. வணிகம்னா என்ன.. தற்சார்புன்னா என்னா.. இல்லுமினாட்டினா என்ன.. ஜீன் / கருப்புன்னா என்ன.. என்ற கேள்விகளை வைப்பது வேறு.. அதை தேடி உணருவது வேறு… நீங்கள் தேடப்போவதில்லை என்பது எனக்கு தெரியும்.. விவாதிக்க தயாராகியிருப்பீர்கள்.. நான் தயாராகவில்லை..
எனக்கு தேடலையும், ஒரு விடயத்தின் அடிப்ப்டையும், இயற்கையையும், வணிக இயங்கியலையும், தற்சார்பையும் பற்றியும் சிந்திக்கவைத்த இந்த முகநூல் மூலமாக விதைத்த அந்த மூன்றுபெருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்… அவர்களுக்கும் செய்யும் கைமாறு நான் இதே தேடலை மற்றவர்களுக்கு விதைக்கவேண்டும்… கருத்துகளை அல்ல..
No comments:
Post a Comment