Saturday, 30 May 2020

வெட்டுகிளியை இவ்வளவு நாளாக grasshopers னு தானே சொல்லி கொடுத்தாங்க

வெட்டுகிளியை இவ்வளவு நாளாக grasshopers னு தானே சொல்லி கொடுத்தாங்க.. இப்ப ஏதோ locusts னு சொல்றோமே ஏன் என்று சிலருக்கு தோன்றியிருக்கலாம். சிலர் 'அட ரெண்டும் ஒன்னு தான் பா இப்படியும் சொல்லலாம் அப்படியும் சொல்லலாம் 'என்று சொல்லலாம்.. இந்த கும்பலாக வரும் மஞ்சள் வெட்டுகிளிகள் திடீரென வருகின்றனவே இவ்வளவு நாள் இவைகள் எங்கே இருந்தன என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். வெட்டுகிளிகள் படையெடுப்பு என்பது வரலாற்றில் புதிது அல்ல கி.மு வில் இருந்தே பல வரலாற்று சம்பவங்கள் உள்ளன.
Grasshopers.. locusts.. இவை இரண்டும் ஒன்றா..? 
ஆம் இவை இரண்டும் ஒன்னு தான். ஆனால் ஒன்னு இல்லை. Grasshopers களின் உருமாறிய சூப்பர் வில்லன் வடிவம் தான் locust. பொதுவாக நாம் கூறும் கிராஸ் ஹோபார்ஸ்களை நாம் அவ்வபோது வயவெளிகளில் பார்த்து இருக்கலாம் அவைகள் பச்சை நிறத்தில் இருப்பதை பார்த்து இருப்போம். மேலும் அவைகள் கூட்டம் சேராமல் தனி தனியாக இருப்பதை தான் பார்த்து இருப்போம். பெரும்பாலும் அவைகளை நாம் பறந்து சென்றே பார்த்திருக்க மாட்டோம் குதித்து குதித்து சென்று தான் பார்த்திருப்போம் ஆனால் வயல்வெளிகள் மீது கும்பலாக படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் இருப்பதை காணலாம். அசால்டாக பல நூறு கிலோமீட்டருக்கு பறந்து செல்வதையும் பார்க்கலாம்.
இவைகள் க்ராஸ்ஹோபார்ஸ் கள் இல்லையா ? என்றால் இவைகள் ஒரு காலத்தில் க்ராஸ் ஹோபராய் இருந்து பின் உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் இந்த வில்லன் வடிவில் மாறி விட்டவைகள் . (பரிணாம வளர்ச்சியுடன் குழப்பி கொள்ள வேண்டாம். இது பரிணாம வளர்ச்சி அல்ல ) அவை ஏன் அப்படி மாறுகின்றன ? எப்போதும் அனைத்து க்ராஸ்ஹோபர்ஸ்ர்ஸ்களும் இப்படி லோகஸ்ட் ஆக மாறுமா? என்றால் இல்லை. மிக சில தருணங்களில் மட்டுமே இந்த க்ராஸ் ஹோபார்ஸ்களில் வில்லன் மாற்றம் நடக்கிறது. அது ஏன் எப்படி எதனால் நடகிறது என்று பார்த்தால்....
பொதுவாக வெட்டுக்கிளிகள் தனித்து வாழக்கூடியவை. முட்டைகள் இட்டு அவற்றில் இருந்து வரும் குட்டி வெட்டு கிளிகள் இதே போல தனித்து பச்சை நிறத்தில் இருக்கும் வெட்டுக்கிளி ஆக வளர்பவை. ஆனால் மிகச் சில தருணங்களில் இது நடக்கிறது. தனியாக இருக்க வேண்டிய வெட்டுக்கிளிகள் கும்பலாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. உணவு தேவை அதிகம் மக்கள் தொகையோ அதிகம் என்கிற சூழலை வெட்டுக்கிளிகள் எதிர்கொள்ள நேர்கிறது. சில நேரங்களில் இவைகள் உணவு தேவை ,வறட்சியை எதிர்கொள்கின்றன. அப்போது கும்பலாக வாழும் வெட்டுகிளிக்கு உடம்பில் ஒரு மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கிறது. அது ஒரு உயிர்காக்கும் உள்ளுணர்வு என்று சொல்லலாம். ' நாம இப்படியே இருந்தா செத்துப் போய் விடுவோம் நாம உயிர் வாழனும்னா நாம வேற மாறி மாறி ஆகணும் ' என்று அவைகளுக்குள் உள்ளுணர்வு கட்டளையிடுகிறது.
கும்பலாக வாழும் போது ஒரு வெட்டு கிளி அடுத்த வெட்டு கிளியை பார்க்கிறது .. முகர்கிறது மேலும் பின் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொட நேருகிறது. இந்த செயல்களால் அவைகள் உடலில் உள்ள சில ஹார்மோன்கள் சுரக்க வைக்க படுகிறது.அந்த ஹார்மோன் சுரக்க சுரக்க படி படியாக வெட்டுகிளிகள் உருமாறுகிறது.
பச்சையாக இருந்த உடல் இப்போ மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. ரக்கைகள் முன்பை விட வேறு மாதிரி பலமாக .. நீண்டதூரம் பறப்பதற்கு ஏற்றமாதிரி மாறுகிறது. க்ராஸ் ஹோபர் ரக்கைகள் இரண்டடுக்கு மெல்லிய ரக்கைகள் கொண்டிருக்கும் ஆனால் locust ரக்கைகள் நீண்டு வலிமையான வடிவாக மாறுகிறது.அவைகளின் பார்க்கும் திறன் முகரும் திறன் எல்லாமே அப்பாவி to சூப்பர் வில்லன் நிலைக்கு நிலைமாற்றம் அடைகிறது. சொல்ல போனால் இவைகளின் மூளை கூட அளவில் பெரிதாக மாறுகிறது. இந்த மாற்றம் இரண்டு மூன்று கட்டமாக நடக்கிறது..உடல் உருவ அளவில் கொஞ்சம் முன்பை விட தன்னை சுருக்கி கொள்கின்றது.
ஒரு grass hoppers தனித்து மட்டுமே இருக்கும் ஆனால் ஒரு locust கும்பலாக சமூக விலங்காகவும் வாழ முடியும். இப்போது இவைகள் கும்பலாக ஒற்றுமையாக வலிமை மிக்கவையாக நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கின்றன. அவைகள் செல்லும் பாதைகளில் உள்ள பயிர்கள் அனைத்தையும் தின்று தீர்த்து போகும் வழி பூராவும் அழிவை தடயமாக விட்டு செல்கின்றன.
பொதுவாக இந்த மாதிரி வெட்டுக்கிளிகளின் இடமாற்றம் என்பது பருவ மாறுதல் மழை பொழிவு.. காற்று திசை இவைகளை பொறுத்து உண்டாகிறது. குறிப்பாக பாலைவனப் பகுதியில் வரட்சிகள் மிகுந்து உணவு குறைவாக பற்றாக்குறையாக இருக்கும் தருணங்களில் வெட்டுக்கிளிகள் முட்டையிட நேர்ந்து இருக்கும் சமயங்களில் இந்த உருமாறும் வில்லன்கள் உருவாகின்றன. இவைகள் காற்றை பின் தொடர்ந்து தனது பாதையை அமைக்கின்றன என்பதால். ஓரளவு இவைகள் செல்ல போகும் பாதையை நம்மால் கணிக்க முடியும். இயல்பாக வாழ சூழல் இல்லாத போது காலத்துக்கு ஏற்றார் போல தன்னை மாற்றி கொண்டு உயிர்வாழும் சக்தி பொதுவாகவே விலங்குகளுக்கு பூச்சிகளுக்கு அதிகம் இருக்கின்றன. இந்த வெட்டுகிளிகள் அதை தான் செய்கின்றன.
இவைகள் கடந்து செல்லும் இடங்களில் பயிர்கள் பெரிய அளவில் நாசம் செய்து விவசாயிகளை கதற விடுகின்றன.உணவு உற்பத்தி குறைவதால் உண்டாகும் chain reaction களுக்கு காரணமாகின்றன. இவைகளை அடக்க சிறந்த வழி பறவைகள் .
பறவைகள் தான் இந்த வில்லன்களை தட்டி கேட்கும் சூப்பர் ஹீரோஸ்கள். இவைகளை தின்று தீர்க்கும் பறவைகள் எண்ணிக்கை குறைந்து போனால் இவைகள் தட்டி கேட்க ஆள் இல்லாமல் அட்டகாசம் செயகின்றன.. (குருவிகள் சாகும் போது குருவி செத்தா நமக்கு என்ன என்று இருந்த மனிதர்கள் இப்போது கொஞ்சம் சங்கிலி தொடர் விளைவு பற்றி உணரலாம் )
இதை தவிர தகுந்த ராசயணங்கள் மூலம் இவைகளை கட்டு படுத்தலாம். மற்றும் இவைகள் உடலில் சுரக்கும் சேரடோனியம் தான் இவைகளின் வில்லன் நடத்தைக்கு காரணம் என்பதால் அதற்கு எதிரான கெமிக்கல் தெளிப்பது மூலமாகவும் இவைகளை கட்டு படுத்தலாம்.
சரி இந்த வெட்டுகிளிகளை காப்பான் படத்தில் வருவது போல மனிதர்களே உருவாக்க முடியுமா ? என்றால் விடை ஆம் நிச்சயம் முடியும்.
Paul Driessen இவர் the Committee for a Constructive Tomorrow (CFACT) and the Center for the Defense of Free Enterprise இல்
சீனியர் பாலிசி அட்வைசராக இருப்பவர்... கிழக்கு ஆப்ரிக்காவில் Kenya, Ethiopia, Eritrea, Djibouti மற்றும் Somalia வில் வெட்டுகிளிகள் 70 ஆண்டுகள் இல்லாத அளவு பாதிப்பை உண்டு பண்ணிய போது. இது ஒரு man made என்று அவர் அறிவித்தார்.
அவர் கூறுகிறார்..". Economic development organizations and activist nongovernmental organizations have foisted "agroecology" on the poorest nations — an organic-style agriculture.
இது மனித உருவாக்கமோ அல்லது இயற்கையின் உருவாக்கமோ ஆனால் ஒன்று நிச்சயம் மனிதன் தன்னை மிகப்பெரிய மாற்றத்திற்கு தயார் செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. இல்லையேல் டார்வின் சொன்ன 'தகுதியுள்ளவை' லிஸ்டில் மனிதன் பெயர் இருப்பது சந்தேகம்தான்.

Wednesday, 20 May 2020

தற்சார்பு பொருளாதாரம்

தற்சார்பு பொருளாதாரத்தைப பற்றி பேசுவதற்கு முன்னால் நிறைய அடிப்படை உண்மைகளை நாம் திரும்ப ஞாபகப் படுத்திக்கொள்ளல் வேண்டும். நான் புதிதாக எதையும் சொல்லப் போவதில்லை. நாம் மறந்த வாழ்வியலை வழிமுறையை கோடிட்டு காட்டப்போகிறேன். அவ்வளவே. முதலில் ஆசைக்கும் அத்தியாவசிய தேவைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் யோசிக்க வேண்டும். பிறகுதான் தேவையானவை மட்டும் எவை என்ற புரிதல் கிடைக்கும்.

பணப்பரிமாற்றம் முறையை முதலில் மெல்ல மெல்ல தவிற்க வேண்டும். குறைந்தபட்சம் பணத்தை வங்கியில் முதலீடு செய்வதை நிறுத்துங்கள்.



1.வங்கியில் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு குறைந்த வட்டியே தருவார்கள். உங்கள் பணத்தை ஊராருக்கு கடனாக கொடுத்து அதிக வட்டி பெருவார்கள்‌. இந்த வட்டி வித்தியாசம்தான் வங்கிக்கு லாபம். வங்கியில் கடன் வாங்கியவர்கள் அதிக வட்டியுடன் கடனை திருப்பித் தரவேண்டுமானால் அவர்களின் தொழிலில் லாபத்தைக் கூட்ட வேண்டும், அதாவது அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் (காய்கறிகள், இறைச்சி, பழவகைகள், போன்றவை) விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும். வங்கியில் பணத்தைப் போட்டுவிட்டு விலைவாசி உயர்வதற்கு பிள்ளையார் சுழியும் நீங்களே போடுகிறீர்கள்‌. இடையில் நோகாமல் நொங்கு தின்பது வங்கி. நீங்கள் மாதந்தோறும் வங்கியில் வாங்கும் வட்டி, விலைவாசி ஏற்றத்திற்கு சரியாக போய்விடும். நீங்களும் வங்கியில் பணம் டெபாசிட் பண்ணாமல் இருந்திருந்தால் இந்த விலைவாசி ஏற்றத்தை தாக்குபிடித்திருக்க முடியாது என்று நம்பிவிடுவீர்கள். பாவம் அந்த விலைவாசி உயர்வுக்குப் பிரதான காரணமே வங்கிதான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

2.வங்கி முறை முதலில் சரியானதா ? நிச்சயம் இல்லை. உதாரணமாக ரிசர்வ் வங்கி 100 கோடி ரூபாய் அச்சடிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். 10 தேசிய வங்கிகளுக்கு தலா 10 கோடி கடனாக தருகிறது. அந்த பத்து வங்கிகளும் இரண்டு ஆண்டுகள் கழித்து வட்டியுடன் 11 கோடியாக தரவேண்டும். பத்து வங்கிகளும் 11 கோடி தந்தால் மொத்தம் 110 கோடி. அச்சடிக்கப்பட்ட மொத்த தொகையே 100 கோடிதான். எப்படி 110 கோடி வரும்? என்ன நடக்குமென்றால், ஒன்பது வங்கிகள் பதினொரு கோடியை மக்களிடம் பெற்று தரும். மீதி ஒரு வங்கி ஒரு கோடி ரூபாய் வட்டியை மட்டும் கட்டிவிட்டு தனது கடனுக்கான வட்டி விகிதங்களை மாற்றி மக்களின் தலையில் சுமையை வைத்துவிடும். அந்த இல்லாத பத்து கோடிக்குதான் ஊரே அடித்துக் கொள்ளும். இதன் பக்க விளைவுகளே சொத்துக்களை ஏலத்தில் விடுவது, ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கைகள். குழப்பமாக இருக்கிறதா? எளிதில் புரிந்துவிட்டால் வங்கியை நீங்கள் புறக்கணிக்க மாட்டீர்களா? அதற்குத்தான் இந்த தெளிவற்ற தன்மையை வங்கிகள் பின்பறறுகின்றன.

3.பணத்தை என்னதான் செய்வது ? வங்கியில் போடுவதே பாதுகாப்பானது என்று உங்களை நம்ப வைத்திருப்பார்கள். அம்பானியை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது வங்கிக் கணக்கில் கடன்தான் இருக்கும். ஏனெனில் லாபத்தை பண வடிவில் சேத்து வைப்பது முட்டாள்தனம். தொழில் வடிவத்தில் சேத்து வைப்பதே நலம். ஏனென்றால் பணத்தை மூட்டைகட்டி வைப்பதால் அது வளராது. திட்டமிட்டு ஒரு தொழில் தொடங்குங்கள். முதலீடு செய்யுங்கள். லாபமோ நஷ்டமோ ஒரு தொழிலில் வெற்றிபெருவதற்கான யுக்தி உங்களின் கைகளில் இருக்கும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். சுற்றத்தார் சிலரிடம் நல்ல தொழில் சிந்தனைகள் யோசனைகள் இருக்கும் அவரிடம் மூதலீடு செய்யுங்கள், கடன் வழங்குங்கள். ஏனென்றால் 501 என கலாய் வாங்கின ரிலயன்ஸ்சின் பாடமே ஜியோவின் வெற்றிக்கு வித்திட்டது. வங்கியில் கட்டுக்கட்டாக பணம் டெப்பாசிட் செய்வது உங்கள் வாழ்க்கை சக்கரத்தில் நீங்களே காற்றை இறக்கிக்கொள்வதற்கு சமம். தனிநபர் வளர்ச்சியை மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியையும் இது தடுக்கும்.

இப்படி மெல்ல மெல்ல உங்களின் சொத்துக்களை, பொருளாதார சுதந்திரத்தை உங்களிடம் இருந்து பறித்து ஏலத்தில் விட்டும், விலைவாசியை உயர்த்தியும், வளர்ச்சியை தடுத்தும் ஊளை சதைப்போட்டு வளரும் வங்கிகளின் துரித திருட்டு இதுதான்.

உணவு உடை இருப்பிடம் இது மூன்றும் அத்தியாவசியம் தான். ஆனால் நம் வாழ்க்கையை உற்று பார்த்தால் தெரியும், அதில் ஆடம்பர பொருட்களே அதிகம் என்று.

இன்னொரு முக்கியமான குறிப்பு, கீழே சொல்லியிருக்கும் ஒவ்வொரு செயலையும் முயற்சிக்க சில குறிப்பிட்ட நேரம் செலவாகும். (யோசித்துப் புரிந்து கொள்ளவே நிறைய நேரம் ஆகலாம்). எனக்கு time இல்ல. Office வேல பாக்கவும், வீட்ட கவனிக்கவுமே time சரியா இருக்குன்னு நொண்டி சாக்கு சொல்பவர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புறேன். இதில்தான் தற்சார்பு பொருளாதாரத்திற்கான தேவை என்ன என்பதும் அடங்கியிருக்கு.

வேலைக்கு செல்வதற்கு நாம் பிறக்கவில்லை, வாழ்வதற்கு பிறந்திருக்கோம். வாழ்வது என்றால் உலகில் உள்ள அற்புதங்களை ஐம்புலன்களால் அனுபவிப்பது. (அதைப்பற்றி விரிவாக இன்னொரு 
பதிவில் எழுதுகிறேன்.)



வேலைக்கு செல்வதே வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குதான். அதாவது வாங்குற சம்பளத்தில் என்ன வாங்குவீர்கள் ? வீட்டில் வாழ தேவையான பொருட்களைத்தானே வாங்குவீர்கள். அதில் பல உள்ளரசியல் இருக்கின்றன. அதை கவனியுங்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு உங்கள் மூலமாக கிடைக்கும் லாபம் கண்டிப்பாக உங்களின் சம்பளத்தைவிட சிலபல மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். இல்லாவிடில் உங்களை வேலையில் வைத்திருக்க மாட்டார்கள். உதாரணமாக உங்கள் சம்பளம் பத்தாயிரம் என்று வைத்துக் கொள்வோம். உங்களால் உங்களின் கம்பெனிக்கு குறைந்தது முப்பதாயிரம் லாபம் இருக்கும். இல்லை முப்பதாயிரம் மிச்சப்படும். நீங்கள் எட்டு மணி நேரம் உழைப்பதில் உங்களுக்கு ஊதியமாக ஒரு நறுக்கு மட்டும் தரப்படும். மீதி முதலாளிக்கு லாபம். இப்போது அந்த பத்தாயிரத்தை வைத்துக் கொண்டு நீங்கள் எதை வாங்கினாலும் அதில் பொருளின் மதிப்புடன் கூடுதலாக லாபம் வரி பேக்கிங் என மொத்தமும் உங்கள் தலையிலே விடியும். பத்தாயிரத்தில் நீங்கள் வாங்கிய பொருட்களின் மதிப்பும் பெற்ற சேவையின் மதிப்பும் கூட்டினால் தோராயமாக நாலாயிரத்தில் அடங்கிவிடும். மீதி ஆறாயிரமும் மற்றவர்களின் லாபத்திற்கும் அரசாங்க லாபத்திற்கும் சென்றுவிடும். எனவேதான், வேலைக்கு போய் சம்பாரித்து செட்டில் ஆனவர்கள் யாரும் இலர். மேலும் அன்பளிப்பாக உடல்நலக் குறைவு, மன அழுத்தம், டாக்டர் செலவு, பணப்பற்றாகுறை, கடன் தொல்லை என அத்தனை உயிர் கொல்லிகளும் வாரி வழங்கப்படும்.

இப்போது இப்படி வைத்துக் கொள்வோம், 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் சொந்த மற்றும் இதர வேலைகள் என்க. இந்த 8 மணி நேரம் வேலை பார்ப்பதை தவிர்த்து, உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்ய உழைத்தீர்களானால் ? உங்கள் உழைப்பின் பலன் உங்களுக்கே கிடைக்கும். ஏதோ பௌர்ணமி பிதற்றல் போல் தோன்றும்.

சற்று நிதானமாக நம் தாத்தா பாட்டி காலத்தை ஞாபகப் படுத்திப் பாருங்கள். அவர்கள் வேலை விவசாயமாக இருக்கும். சொந்த நிலத்தில் விளைந்ததை அறுவடை செய்து விற்றும் உண்டும் வாழ்ந்தார்கள். அவர்களின் இதர தேவைகளுக்காக மட்டும் நெல் விற்ற பணத்தைப் பயன்படுத்துவார்கள். உழைப்பதால் உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். லாபமும் கிடைக்கும். மருத்துவ செலவு என்பதே இருந்திருக்காது. “விவசாயிகளே தற்கொலை பண்ணிக்கிட்டு சாவுறாங்க, இதுல நம்மல போய் விவசாயம் பண்ண சொல்லுறானே”னு பயப்படாதீர்கள். எல்லோரையும் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்க சொல்லவில்லை. சிலர் உணவு பொருட்கள் சிலவற்றை உற்பத்தி செய்யுங்கள். சிலர் உடைகளை உற்பத்தி செய்யுங்கள். சிலர் இருப்பிடம் கட்டிக் கொடுங்கள். இப்படி ஒரு ஊர் மக்கள் தங்கள் தேவைகளை தங்கள் ஊர் மக்களைக் கொண்டே பூர்த்தி செய்து கொள்ளலாம்.மேலும் இதை நடைமுறைப்படுத்துவதில் உளவியல் பிரச்சினைகளும் உண்டு. என்னவென்றால், மக்களுக்கு சுகமான வாழ்க்கை என்றால் பீச்சோர பங்களாவில், swimming poolக்கு பக்கத்தில் நீட்டமான மரப்படுக்கையில் படுத்துக் கொண்டு நான்கைந்து வேலையாட்களை அடிமைகளைப் போல் ஏவியேவி வேலை வாங்குவதும், தேவையோ இல்லையோ மனதை வசீகரிக்கும் எல்லா டி.நகர் குப்பைகளையும் வாரந்தோரும் தன் வீட்டில் குவித்துக் கொள்வதும், பார்ப்பவரை பொறாமைப் பட வைக்கும் அளவிற்கு மிடுக்காய் உடையணிந்து கொள்வதுமாக எல்லாமுமே TV விளம்பரங்களில் வரும் காட்சிகள்தான். அந்த தவறான சித்தரிப்புகளை உங்கள் கற்பனையில் இருந்து நீக்குங்கள். அதில் வரும் முதலாளியாக நீங்கள் உங்களை நினைப்பீர்கள். ஆனால், சமூகத்தைக் கட்டுபடுத்தக் கூடியவர்கள் உங்களை அந்த வேலை ஆட்களாகவே வைத்திருப்பார்கள்.

பிறகு ஏன் அந்த ஆசையை காட்டுகிறார்கள் என்றால், அதன் விளைவாகவே உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்கு வந்தே தீருவீர்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து சொகுசான வாழ்வை அனுபவிக்கலாம் என்று உங்களை நம்பவைத்து ஆசைப்பட வைப்பார்கள். “நீ நிம்மதியாய் இல்லை, மோசமான கஷ்டமான வாழ்வை அனுபவித்து வருகிறாய்” என்று மூளைச் சலவை செய்வார்கள். இப்படி மந்தை போன்ற சமூகத்தை பாத்திக்கட்டி திசைதிருப்பும் யுக்தி சில multi millionaireகளின் அதிகார மேசைக்கு மட்டுமே தெரியும். இந்த அதிபயங்கர அதிபுத்திசாலிகளின் சிலந்தி வலையில் இருந்து தப்பித்து ஆரோக்கியமான, நல்ல அனுபவகரமான வாழ்வை மேற் கொள்ளவே இந்த தற்சார்பு பொருளாதாரம்.தோற்றம் அல்லது Image. இந்த சமூகத்தில் ஒரு தனிநபரின் தோற்றமே அவரை யாரென நிர்ணயிக்கிறது. இதன் விரிவான விளக்கங்களை புரிந்து கொள்ள Halo Effect மற்றும் Horn Effect  பற்றி படியுங்கள். கருத்தவன்லாம் கலீஜு, செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்டி ஜீவா ஓடும் ? போன்ற எண்ணங்களுக்கு உளவியல் ரீதியாக பின்னாலிருக்கும் உண்மையை உணருங்கள்.

சமூகம் எதிர்பார்க்கும் அல்லது அங்கீகரிக்கும் image ஐ தூக்கி எறியுங்கள். உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தாற்போல் நீங்கள் மாற்றலாம். ஆனால் அனைவரும் ஒன்று திரள வேண்டும். குறைந்தது நூறு குடும்பங்கள் பண்ட மாற்று முறையையும் தற்சார்பு பொருளாதாரத்தையும் புரிந்து செயல்பட்டால் போதும், அவர்களின் வளர்ச்சி, வாழ்க்கை தரத்தை பார்க்கும் அனைவரும் தற்சார்பு பொருளாதாரத்தை பின்பற்றுவார்கள்.

வீட்டில் சமைப்பதற்குத் தேவையான மூலப் பொருட்கள் தோராயமா நூறு இருக்கு என்று கொள்வோம். இதில் எவையெல்லாம் localல் கிடைக்கும் என்று பாருங்கள். ஏறத்தாழ எண்பது பொருட்கள் இருக்கும். பல பொருட்கள் plastic packet ல் அடைத்து பெரிய brandன் பெயர் போட்டு ஜிகுஜிகுவென்று இருக்கும். அவற்றை வாங்காதீர்கள். அதே பொருட்கள் localல் அதைவிடவும் குறைந்த விலையில் கிடைக்கும். அதையே வாங்குங்கள். மீதி இருக்கும் இருபது பொருட்களும் நீங்களே உற்பத்தி செய்ய முடியும்.



உதாரணமாக மிளகாய்த்தூள் வேண்டும் என்றால் நீங்களே வரமிளகாய் மல்லி எல்லாம் வாங்கி வீட்டில் காயவைத்து அருகில் இருக்கும் மாவு அரைக்கும் கடைகளில் அரைத்து மிளகாய் தூள் தயாரிக்கலாம். இதைப் போலவே ஒவ்வொரு பொருளையும் trial and error முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். முயற்சியுங்கள் பிறகு உங்களுக்கே அது எளிதாகி விடும். ஒரே நாளில் இருந்து எல்லாவற்றையும் தயாரிக்க முயற்சிக்க வேண்டாம். ஒவ்வொரு பொருளாக தயாரிக்க தொடங்குங்கள். ஒரே வருடத்தில் உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களில் எதுவும் பெரிய brandன் பொருட்களாக இருக்காது. அப்போது மாத budgetல் ஆயிரம் ரூபாய் மிச்சப் பட்டிருக்கும். மருத்துவ செலவு எதிர்காலத்தில் அறவே தவிர்க்கப்படும்.

இவை அனைத்தும் மூலப் பொருட்கள் அல்ல, உப பொருட்களே. நிலம் இருப்பவர்களின் அடுத்த நகர்வு விளைச்சலை நோக்கி இருக்க வேண்டும். சொந்த விவசாய நிலம் அற்றவர்கள் மற்ற அத்தியாவசிய தேவைகளான உடை மற்றும் இருப்பிடத்தின் கூறுகளை கவனியுங்கள். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு jeans ஒரு சட்டை கூட நல்லதாக வாங்கிவிட முடியாது. ஆனால் அதே ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் எத்தனை மணி நேரம் உழைக்க வேணடும் என்பதை கணக்கிடுங்கள். ஏறத்தாழ பதினாறு மணி நேரம் உழைப்பீர்கள். இப்போது ஒரு வேட்டி ஒரு சட்டையின் மெட்டீரியல் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்களே சட்டையை தையுங்கள். அதிக பட்சம் நான்கு மணி நேர உழைப்பில் உங்களுக்கான சட்டையை நீங்களே தயாரித்துவிடலாம். முதலில் கோனல் மானலாகத்தான் வரும், பத்து சட்டை தைத்த பிறகு, கடைகடையாக தேடி வாங்கும் சட்டையை கடகடவென்று நீங்களே தைக்கலாம். சிரிப்பாக வரலாம். ஏனென்றால் பல வருடம் அறியாமையோடே இச்சமூகத்தில் வாழ்ந்துவிட்டு ஒரே நாளில் நன்மை தரும் சிந்தனைகளை உங்களுக்கு உள்ளில் இருந்து வெளிப்படுத்தினாலே சிரிப்பாகத்தான் இருக்கும். இந்த தற்சார்பு பொருளாதார வாழ்க்கை முறையில் உள்ள நன்மைகளை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.இப்படி ஒவ்வொரு பொருளாக தயாரித்து, உங்கள் சமூகத்திற்கான தேவையை நீங்களே கட்டமைப்பீர்களானால், ஐந்து முதல் பத்து வருடங்களில் அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியில் உங்களுக்கு தயாரிக்க ஏதுவான பொருள் எது என்பதை கண்டறிந்து, அதை சிறந்த முறையில் தயாரித்து சந்தைபடுத்தக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றிருப்பீர்கள். சமூக வளர்ச்சியில் உங்களின் வளர்ச்சியும் இன்றியமையாதிருக்கும்.

தெளிந்த நல்லறிவு பெற தடையாக இருக்கும் போதை என்ன என்பதை அறியுங்கள்.

“வெளிநாடு போய் சம்பாரிசசிட்டு ஊருல வந்து செட்டில் ஆகலாம்.”

“நல்ல ஐ.டி. கம்பெனில சேந்து லட்ச லட்சமா சம்பாரிச்சு தண்ணியிருக்க காடா பாத்து வளைச்சுபோட்டு இயற்கை விவசாயம் பண்ணலாம்” போன்ற அதிமேதாவித்தனமான யோசனை கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு,

சந்தன மரம், செம்மரக் கட்டை, ஐம்பொன் சிலைகள் மட்டும் மதிப்புள்ளவை அல்ல. உங்களது மூலையும் தான். பிற நாட்டின் வளர்ச்சிக்காக உன்னுடைய உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு விட்டு வருடங்கள் கழித்து திரும்பிப்பார்க்கையில் உன் நாடு அங்கேயே நின்றிருக்கும். நீ வாழப் போகும் சமூகத்திற்காக நீ பாடுபடு. உன் குடும்பம் வம்சம் சமூகம் என எல்லாமும் செழிக்கும். அயல் நாட்டுக்கு மனித வளத்தை கடத்துவதும் தார்மீக ரீதியில் குற்றமே. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏன் இதை கண்டுக்கொள்ளவில்லையெனில் வரி வருவாய் அதிகம். அதாவது லஞ்சம் பெற்றுக் கொண்டு உன் திறனை நாடு கடத்துவதாகும். மேலும் பல லட்சங்களோ சில கோடிகளோ சேமித்து சிட்டிக்கு தூரத்தில் அமைதியான சூழலில் காடு வீடு பங்களா என செட்டில் ஆகும்போது நீங்கள் வீனடித்த மறைநீரை, வளத்தை சமன் செய்வதற்கு உங்களின் மீதி காலம் போதாது. உங்களின் அடுத்தடுத்த சந்ததிக்கு எதுவும் மிஞ்சாது.

மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.

Friday, 7 February 2020

பயனுள்ள அழகு குறிப்புகள் உங்களுக்காக ..!!!

உலகில் உள்ள7 கண்டங்கள்










மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்
~~🐘🐘🐘🐘🐘🐘~~ 🌹☘ 
இன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிவப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
1982 ல் இங்கிலாந்து ஹெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது? எப்படி?
இரண்டு வருட ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் "மதுரை". மதுரை மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது கணக்கிடப்பட்டது. என்ன காரணம்?
அங்கு விளைவிக்கப்பட்ட சிகப்பரிசி எனும் அரிசி வகைதான் காரணம். அதையே உட்கொண்டதுதான் காரணம் என்பதை ஆய்வின் முடிவில் அறிந்தனர்.
சிகப்பரிசி. உரம் தேவையில்லை. இயற்கையாக இருக்கும் ஒருவகை ஆண்டி ஆக்சிடண்ட் காரணமாக பூச்சிகள் நெருங்குவதில்லை. எனவே பூச்சி மருந்து அவசியமில்லை. தண்ணீர் மற்றவைகளை விட குறைந்த அளவு போதுமானது. விளைச்சல் சாதாரண அரிசியை விட நான்கு மடங்கு அதிகம்.🌴🌱
"மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று,
யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை"
என இலக்கியம் பேசுகிறது இந்த அரிசியை பற்றி. யானை மிதித்து நெல் எடுக்கும் அளவுக்கு விளைச்சல் அதிகமாம்.
கவளம் என்றால் (யானைக்கு தரப்படும் ஒரு வாய் உருண்டை உணவு 1 கவளம் ஆகும். ஒரு கால்பந்து அளவு). ஒருவேளைக்கு யானை 8 முதல் 12 கவளம் தரப்படும். ஆனால் மதுரையில் சிகப்பரிசியில் செய்த 4 கவளம் யானைக்கு போதுமானதாம்.
நார்சத்து மிக அதிகம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, செம்மண்ணில் விளைந்த ஒரு பொக்கிஷம். எனவே தான் இன்றும் மதுரையில் 90 வயதுக்கு மேல் வீட்டுக்கு ஒரு பாட்டி ஐம்புலன்களும் நன்கு செயல்பட உழைத்து கொண்டிருக்கும். வயதளவில் மட்டும் வயதானவர்களை இன்றும் மதுரையில் காணலாம். அவர்களுக்கு சுகர் என்றால் என்னவென்றே தெரியாது. இரத்தக்கொதிப்பா அப்டினா என்பார்கள். தைராய்ட் னா சாப்பிடும் தயிரா என்பார்கள். குறைந்தது 6 முதல் 12, 15 பிள்ளைகள் பெற்றிருப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் வழக்கம் கிடையாது. மருத்துவமனை இன்று வரை செல்லாதவர்கள் அவர்கள்.
ஆனால் இந்தநிலை எப்படி ஏன் மாறியது.?
உரம், பூச்சி மருந்தை அதிகளவில் தன் நாடுகளில் தயாரித்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் இங்கிலாந்து, லண்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இச்சிகப்பரிசியினால் தன் பொருட்களுக்கு அவசியம் குறைவதால், மக்களை வெள்ளை அரிசியின் மோகத்தை தூண்டி சிகப்பரிசியை சரித்திரத்தில் மறைத்தனர்.
நம் பாரம்பரியத்தை மறந்து நாமும் இன்று மருத்துவமனை கதியாய் இருக்கிறோம். தாய் வீட்டில் பிறந்ததால் முன்பு அடிக்கடி பிறந்த வீடுகளுக்கு சென்று அங்கு விளைந்ததை பெருமைக்காக வாங்கி வந்த பரம்பரை. இன்று மருத்துவமனையில் பிறந்ததால் அடிக்கடி பிறந்த வீடான மருத்துவமனை சென்று அங்கிருந்து மருந்துகளை வாங்கி வந்து உட்கொள்ளும் அவலம் இந்த பரம்பரையில் மாறிவிட்டது நம் அவலநிலை.
சிகப்பரிசி இன்றும் கிடைக்கிறது. விலை 80ரூபாய் வரை. மீண்டும் இதையெல்லாம் அதிகளவு விளைவிக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்காது. காரணம் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்து இறக்குமதியில் அரசுக்கும் கமிஷன் பெருமளவில் செல்கிறது.
மனிதனின் ஆயுள் பொதுவாக 120. ஒவ்வொருவரும் 40வருடங்கள் என 40x3=120. மூன்று தலைமுறை கண்டவர்கள் நம் முன்னோர்கள். 120 வருடங்கள் நம் பாட்டனும் பூட்டனும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழந்தது போதும் என தானாகவே "வடக்கிருந்து"(தனக்காக ஒரு சமாதி கட்டி வடக்கு நோக்கி அதில் அமர்ந்து இறைசிந்தனையில் மூச்சை அடக்கி உயிர் துறத்தல்) உயிர்விட்டவர்கள் ஏராளம். அவர்களே இன்று நம் குலதெய்வங்களாக பலரால் வணங்கப்படுகிறது. ஆய்வு செய்து பாருங்கள் பேச்சியம்மா, ஆண்டியப்பன், பெரியகருப்பன், அங்கம்மா, இப்படிப்பட்ட குலதெய்வங்கள் சாஸ்த்திரத்தில் இலக்கியங்களில் இல்லை. பிறகு எப்படி குல தெய்வங்கள் ஆனார்கள்? நம் குலத்தை சிறப்பாக வழிநடத்திய வாழவைத்த முன்னோர்கள் அவர்கள்.
பாரம்பரியம் அறிவோம்!
புராதான உணவுகளை உண்போம்!
வாழ்வதற்காக உண்!
உண்பதற்காக வாழாதே!
உங்கள் பிள்ளைகளுக்கு ஏ பி சி டி யை விட நம் பாரம்பரியத்தை முதலில் அறியச்செய்யுங்கள்.
சரித்திரங்களை விதையுங்கள்.
வேலுநாச்சியாரை உங்கள் பிள்ளைகளுக்கு 
அஸைன்மென்ட்காக மட்டும் சொல்லிக் கொடுக்காதீர்கள். "மகனே/மகளே, அவர்களெல்லாம் சில தலைமுறைகளுக்கு முந்தையவர்கள் தான். அவர்கள் வாழ்ந்த அதே ஊர்களில் தான் நாமும் இருக்கிறோம். அவர்களுக்கு இருந்த அதே வீரமும், திறமையும் நமக்குள்ளும் இருக்கிறது மறவாதே! " அவர்கள் உண்ட உணவு இதுதான், வாழ்க்கைமுறை இதுதான் என இயற்கையையும், தன்னம்பிக்கையையும், வீரத்தையும் பிள்ளைகள் மனதில் விதையுங்கள். நிச்சயம் பழைமை திரும்பும். மனிதன் 120 வருடங்கள் மீண்டும்....

Wednesday, 5 February 2020

தென்கிழக்கு ஆசியா தேவேந்திரன் இந்திரன் South East Asia Devendran Indran


யார் இந்த பாண்டியர்கள்?


இது படித்ததில் பிடித்தது!மூட்டுவலியை சரிசெய்ய சிறந்த வழிகள்

இது படித்ததில் பிடித்தது!மூட்டுவலியை சரிசெய்ய சிறந்த வழிகள்
உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும்.
மேலும் அதிக எடை உள்ள பொருட் களை தூக்கினால் தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்றவற்றில் வலி அல்லது சுளுக்கு ஏற்பட்டு பாடாய் படுத்திவிடும். ஆகவே இத்தகைய இடங்களில் வலிகள் ஏற்படாமல் இருக்க
தடுக்கும் முறைகள்...
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
4. வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
5. இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும். (இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும்). இதை தொடர்ந்து 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். பிறகு 3 வாரங்கள் கழித்து மீண்டும் 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடும்போது காரமான உணவு, புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.
6. ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.
உணவுப் பழக்கம்
1. வாழைப்பழம் அதிகமாக சாப்பிட வேண்டும்.
2. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
3. கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்
தவிர்க்க வேண்டியவை
காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.
நன்றி... வணக்கம்...

*5 ந்தே நிமிடத்தில் சாகக் கூடியது ஒரு கையளவு அயோடின் உப்பு.*

*5 ந்தே நிமிடத்தில் சாகக் கூடியது ஒரு கையளவு அயோடின் உப்பு.*

*3 நிமிடம் , உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள்.* 

ஒரு கூட்டம், 

*இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார்* டாக்டர் இர்வின்.

அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது..

டாக்டர் இர்வின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்.

மேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர்.

பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்.

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்தபோது ஒருமுறை இவரை நூலகத்தில் வைத்துப் பேசியிருக்கிறேன்.

*சதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்: “இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள்.*

*காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள்.*

வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன.

இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம்.

*நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.*

பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன.

சென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது.

தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன.

பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன.

வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை.

உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.ஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம்.

அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம்.

அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை?” – ஒரு பண முதலை கேட்டது. ஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம்.

இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும். நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும்.

அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர்.

அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம். அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன?”

உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு” ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின.

இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது.

எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன.

கல்லுப்பின் பயன்பாடு அறவே நின்றுவிட்டது. சரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது. பெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன.

அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.

இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குமுன் திரண்டார்கள்.

பொது மக்களே! நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்? ஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?”.

*“ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள் இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.*” “

நாம் வாங்கும் பொடி உப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.” ‘

2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுன் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள்.

அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.” “ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?.

இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான்.

போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.” கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன.

இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.

*நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன.*

*வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள்.* 

ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.

போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.” சுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள்.

அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் 

அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர். இதை எல்லாத் தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள்.

ஆனால் 

*எதிலும் ஒளிபரப்பவில்லை! இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது!* 

மக்களாகிய நாம் தான் திருந்த வேண்டும்…! பொடி உப்பைத் தவிர்ப்போம்… கல் உப்பைப் பயன் படுத்துவோம்.          Kinldy forward to all without FAIL. SAVE your self and your family and friends [truncated by WhatsApp]
             இதனை ஏற்கனவே படித்திருந்தாலும் ,

*மாற்றம் வரும்வரை*
*மீண்டும் மீண்டும்*
*பகிரவேண்டும்*

Courtesy: நலம் வாட்சப் குரூப்

Wednesday, 15 January 2020

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந்துள்ள 'பகீர்' தகவல்கள்.

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது
போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந்துள்ள 'பகீர்' தகவல்கள்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போது மாடு மற்றும் பன்றிக்கும் பொருந்துகிறது.
இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது.
படித்ததும், "உவ்வே' என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள "பகீர்' தகவல்கள் வருமாறு:
மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர்.
அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் (இந்திய ரூபாய்) வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது.
மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர்.
அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சாப்பிடும் ஜெலட்டின்: இதில் புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் 50 முதல் 60 சதவீத அளவிற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஜெல்லி உணவுகள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், கேக் கிரீம் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ள குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தரும் பான பவுடர்களில் அவை சேர்க்கப்படுகிறது.
பார்மா மற்றும் போட்டோ ஜெலட்டின்: டியூப் மாத்திரைகளின் மூடி தயாரிப்பதற்கு இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி, புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்களுக்காக, மாத்திரைகள் மற்றும் "சிரப்'களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. போட்டோ ஜெலட்டின்கள், பட பிலிம்கள், எக்ஸ்ரே பிலிம்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
எலும்பு பவுடர் உரம்: வெளிநாடுகளில், எலும்பு பவுடர் விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, டன் கணக்கில் எலும்பு பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலும்பு பவுடர்கள் மிகச்சிறந்த உரமாக இருப்பதால், அதிகளவில் மகசூல் கிடைப்பதை அனுபவ பூர்வமாக அந்நாடுகளின் விவசாயிகள் உணர்ந்துள்ளனர்.
மாட்டு கொம்பு மற்றும் கால் குளம்பு பவுடர்கள், ஜெர்மனிக்கு அதிகளவில் உரத்திற்காக அனுப்பப்படுகிறது. தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில், மாட்டு எலும்பு பவுடர்களை உரமாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மாட்டு ஜவ்வு பவுடர்கள், கோழி தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
கோழிக் குஞ்சுகள் அவற்றை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துகள் பெற்று, மூன்று மாதங்களில் அவை இறைச்சிக்கு தயாராகி விடுகின்றன. இப்படி, மாட்டு எலும்புகள், உணவு, மருத்துவம், உரம் ஆகியவற்றில் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பல்வேறு பொருட்களில் பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிந்தால், விற்பனை பாதிக்கும் என்பதால், அவற்றை தயாரிப்பாளர்கள் மறைக்கின்றனர்.

Thursday, 9 January 2020

Communication gap!

இணைப்பில் உள்ள காணொளி தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு விடயத்தை கடத்தும்போது அது. எப்படி உருமாறுகிறது.. அதுவும் சமகாலத்தில் வாழும் ஒரே சுற்றத்தைக்கொண்டவர்களுக்கே இந்த நிலையென்றால்...
ஒருவர் ஒருகாலத்தில் சொன்ன கருத்துகள் அன்றைய சூழலுக்கும் காலத்திற்கும் ஏற்ப இருக்கும் அதை பலகாலம் கடத்தி ஆவணப்படுத்தப்படும்போது அந்த கருத்துகளின் சிதைவு எப்படியாகியிருக்கும் என்பதை உங்கள் (Abuasia) முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.. குறிப்பு : நபிகள் வாழ்ந்த காலமும் ஆவணப்படுத்தப்பட்ட காலத்திற்கும் உள்ள இடைவெளியில் என்ன நடந்திருக்கலாம் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்..
100-150 வருடங்களுக்கு முன்னர் எத்தனைபேருக்கு எழுத படிக்கத்தெரியும் .. இது தேவையில்லாமலே மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள்.. அப்ப இந்த எழுத்தாக்கம் செய்யப்பட்ட நூல்களின் (இலக்கியங்கள்) பயண்பாடு யாருக்கானது? இதன் மூலம் பயண் ஈட்டக்கூடியவர்களுக்கே இந்த எழுத்துகள் பயண்பட்டிருக்கும்.. எழுத்துருவாக்கம் என்பது வணிகத்தின் தேவை அதனாலேயே எதெயெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டதோ அத்தனையும் வென்றவர்களாலும் வணிக பயன்பாட்டிற்கு ஏற்ப எழுதப்பட்டிருக்கும் … அதாவது யாரோ யாருக்காகவோ யாருடைய கருத்தையோ எழுத்துருவாக்கம் செய்யவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது உற்று நோக்கினால் புரியும்… ஆனாலும் சில விடயங்களை சமூக அமைப்பாக கடைபிடித்து வந்தவைகளுக்கான காரணம் தெரியாவிட்டாலும் அதை பற்றிய உண்மையை அந்த செயல்களின் மூலம் உணரமுடியும்.. சந்திரனின் பிறையை / மறைநிலவு / முழுநிலவு பார்தது சில விடயங்களை முடிவு செய்வது.. இவற்றை ஆவணப்படுத்தத்தேவையில்லை அவை வாழையடி வாழையாக மரபாக கடத்தப்படும் மரபறிவாகவும், நினைவலைகளாகவும் கடத்தப்படும்… இவற்றை எழுத்தில் விவரித்தால் அதனின் கருத்து எப்படி வேண்டுமானாலும் சிதையும்...
75 வருடத்திற்கு முன் என் மீது இந்து என்று அடையாளம் திணிக்கபடாதவரை எனக்கு எந்த மத அடையாளமும் இல்லை.. அதே மாதிரிதான் 300-700 வருடங்களுக்குள் இசுலாம் / கிருத்துவத்திற்கு மாறியவர்களின் நிலை.. அதற்கு முன்னர் இந்த மதம்/சமயம் நகரத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அவர்களுக்கும் கிராமங்களிலும் காடுகளிலும் வாழ்ந்த வர்களுக்கு சம்பந்தமில்லை.. இவர்களைதான் பழங்குடிகள் என்கிறேன்.. பழங்குடி / தற்சார்பு வாழ்வியல் என்றால் இலைதலையை கட்டிக்கொண்டு காடுகளில் மட்டும்தான் வாழ்பவர்கள் என்கிற உங்கள் நினைபிற்கு நான் பொறுப்பாகமுடியாது.. இன்னும் சொல்லப்போனால் இசுலாம் / கிருத்துவம் / இந்து என்று அடையாளப்படுத்துமுன் உங்களையும் சேர்த்தே அனைவரும் பழங்குடிகள்தான்.. மதம்மாறியவர்களின் குலங்களை பார்ததிருக்கிறீர்களா, நகரத்தில் வாழும் பிராமண மற்றும் உயர்ந்த குலங்களிலிருந்து எவ்வளவு பேர் மதமாறியிருக்கிறார்கள் என்று புள்ளிவிவரத்தை உற்று நோக்கினால் புரியும்… என் பழங்குடி மரபு நான் நினைத்தாலும் அழிந்துபோகாது.. அதை அழிக்க காலமும் அதற்கெதிராக மரபு திணித்தலும் தொடர்ந்து என்மீது ஏவப்பட்டாலே சாத்தியம்...
எனக்கு எது தேவை என்பதை உணர்கிறேனோ அதைமட்டுமே படிப்பேன்.. இயற்கையை பற்றிய தேடுதலும், புரிதலும் மற்றும் உணர்தலும் இப்போதைய தேவையாக உணர்கிறேன் .. இதற்கே எனக்கு நேரமில்லை.. இதில் அதைப்படி,இதைப்படி என்று சொன்னால் எப்படி?
ஒருவருக்கு மீனைக்கொடுப்பதைவிட மீனைப்பிடிக்க கற்றுக்கொடுத்தால் மிகச்சிறப்பு.. அதேமாதிரிதான் ஒருவருக்கு கருத்தை சொல்லுவதைவிட்டுவிட்டு அவரை சிந்திக்கவைத்துவிட்டால் அவரே அவருக்கு தேவையான கருத்துகளை காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப உருவாக்கிக் கொள்வார் இதற்கு நூல்களைப்படித்தால் பற்றாது அதனின் அடிப்படையை புரிந்து கொண்டு இயற்கையோடு ஒன்றிணைத்து பார்ககவேண்டும் அப்போது புலப்படும்.. எந்த நூல்களின் உதவியின்றி இயற்கை நமக்கு பாடம் எடுத்ததுக்கொண்டேயிருக்கிறது நாம் கவனிப்பதேயில்லை.. நாமும் இயற்கையை கவனிக்க ஆரம்பித்தாலே போதும்…
இங்கே இவற்றை பதிவிட்டது சிந்திக்க மட்டுமே.. அந்த நூலில் இது இருக்கிறது.. இந்த மார்ககத்தில் இப்படியிருக்கிறது.. வணிகம்னா என்ன.. தற்சார்புன்னா என்னா.. இல்லுமினாட்டினா என்ன.. ஜீன் / கருப்புன்னா என்ன.. என்ற கேள்விகளை வைப்பது வேறு.. அதை தேடி உணருவது வேறு… நீங்கள் தேடப்போவதில்லை என்பது எனக்கு தெரியும்.. விவாதிக்க தயாராகியிருப்பீர்கள்.. நான் தயாராகவில்லை..
எனக்கு தேடலையும், ஒரு விடயத்தின் அடிப்ப்டையும், இயற்கையையும், வணிக இயங்கியலையும், தற்சார்பையும் பற்றியும் சிந்திக்கவைத்த இந்த முகநூல் மூலமாக விதைத்த அந்த மூன்றுபெருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்… அவர்களுக்கும் செய்யும் கைமாறு நான் இதே தேடலை மற்றவர்களுக்கு விதைக்கவேண்டும்… கருத்துகளை அல்ல..

Wednesday, 8 January 2020

இந்த பதிவை படிக்கும் போது, உங்கள் மனதில் தோன்றும் சாதிய படத்தை இன்னும் பார்க்கவில்லை..

இந்த பதிவை படிக்கும் போது, உங்கள் மனதில் தோன்றும் சாதிய படத்தை இன்னும் பார்க்கவில்லை.. 

சாதி இங்கு திணிக்கப்பட்டதா..?
உருவாக்கப்பட்டதா..?
பிறந்ததா..?

பிறந்தது எனில் யார் பெற்றெடுத்தார்....?
உருவாக்கப்பட்டது எனில் யார் உருவாக்கினார்..?
திணிக்கப்பட்டது எனில் யாரால் திணிக்கப்பட்டது..?

இந்த மூன்றுக்கும் ஒரே பதில் தான், சிலர் சொகுசாக வாழ்வதற்காக பலரை அடிமைப்படுத்த பயன்படுத்தப்பட்ட வார்த்தையை சாதி.. 

எனது வலியை ஒருத்தன் பேசிவிட்டான் என்று தானே இங்கு பெரும்பாலோர் சாதிய ஒழிப்பு ( அ ) தீண்டாமை 😂😂😂 படங்களை கொண்டாடுகிறீர்கள்..

ஆனால் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றுக்கும்எதிர்வினை உண்டாக்கும் என்பதை மறந்து விடுகிறீர்கள்..

எதிர்வினை எது..? 

இந்த பதிவில் முதலில் கேட்ட கேள்வியை மறுபடியும் படியுங்கள்.. அதற்கான பதிலை தேடுங்கள்..

இங்கு சாதிய படங்கள் ஒருபோதும் சாதி என்னும் சொல்லை உருவாக்கியவர்களை பற்றி ஒருபோதும் பேசுவதில்லை..

அதற்கான காரணம் இதுவரை தென்படவும் இல்லை..

ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே உங்களை மறுபடி மறுபடியும் கட்டமைக்கின்றனர்..

முதலில் இங்கு சாதி இருந்ததா..? என தேடுங்கள்..

குல வரலாறு பேசியவர்கள், திடீரென சாதிய தீண்டாமையை பேசுகிறார்கள்..

ஏன்..? இந்த முரண்..

சாதியை இல்லாத ஒரு இனத்திடம் எப்படி எந்த சாதி..?
உயர்ந்தது..? 
தாழ்ந்தது.? என பிரிவினை வந்தது என பேசுங்கள்..

இங்கு எல்லோரும் செய்கின்ற தவறு “என் வலிகளை ஒருத்தன் பேசிவிட்டான், அதனால் அந்த படத்தை கொண்டாடுகிறேன், அந்த படத்தின் கருத்துகள் அருமை” என புகழ்ந்து பேசாதீர்கள்..

இங்கு அவரவர் அவரவர் வேலைகளை எந்தவித பாகுபாடு இல்லாமல் செய்து கொண்டிருந்த போது, கடவுள் *** வந்தவன் என கூறுபவர்கள் தான், முதலில் இங்கு பிரிவினையை உருவாக்குகிறார்கள்..

ஏனெனில் அவர்கள் சொகுசாக வாழ வேண்டும் அல்லவா..!!!!!

இங்கு உங்களின் வலிகள் திரையில் புரட்சியாக பேசப்பட வில்லை,

அதற்கு மாறாக அது வணிகம் செய்யப்படுகிறது..

உடனே கேள்வி எழும் நீயும் தான் இந்த முகநூலில் புரட்சி செய்கிறேன் என கூறுகிறாய் என்று..

ஆம், ஆனால் நான் அதை வணிகமாக்க வில்லை..

இங்கு அவர்களின் மூலதனம் உன் உணர்ச்சிகளும், வலிகளும் தான்..

உன் வலிகளை திரையில் பேசி விட்டதால், எதையும் ஆதரவளிக்காதே..

காரணம் அதற்கான எதிர்வினையையும் நீ சந்திக்க வேண்டி வரும்..

இங்கு சாதிய, புரட்சி சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன..