Tuesday, 26 November 2019

பிரபாகரன் எப்படி?கேப்டன் பிரபாகரன் ஆனார்..


         பிரபாகரன் எப்படி?கேப்டன் பிரபாகரன் ஆனார்..
       *இலங்கை அங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்ததிலிருந்து தமிழர்களுக்கும்,சிங்களர்களுக்கும் இடையே இன பிரச்சனை தோன்றியது.வரலாற்றில் மூத்த இனமான தமிழ் இனத்தை அடக்கி ஆள வேண்டும் என சிங்களர்கள் முடிவு செய்தனர்.இதனால் தமிழர்கள் சிங்கள இன வெறிக்கு எதிராக போராட ஆரம்பித்தனர். இந்த போராட்டம் தனி தமிழ் ஈழ போராட்டமாக மாறியது.இதனால் ஈழத்தில் பல விடுதலை இயக்கங்கள் தோன்றின.1974ம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்தில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது.இதற்கு யாழ்பண மேயர் ஆல்பர்ட் துரையப்பா அனுமதி அளிக்கவில்லை.காரணம் இவர் சிங்கள அரசுக்கு ஆதரவாகவும்,தமிழர்களுக்கும் எதிராகவும் செயல் பட்டார். தமிழரின் போராட்டங்களுக்கு இவர் செவிசாய்க்கவில்லை.இருந்தாலும் இவர் யாழ்ப்பாணத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தார்.இப்பொழுதுதான் 1974 ஜனவரி மாதத்தில் உலக தமிழர் ஆராய்ச்சி மாநாடு நடக்க இருந்தது.அதற்கு இவர் அனுமதி அளிக்கவில்லை காரணம்,மாநாடு நடந்தால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துவிடும் என்ற பயம் இருந்தது.தடையையும் மீறி மாநாடு நடந்தது.இதனால் மேயர் ஆல்பட் துரையப்பா சந்திரசேகர் தலைமையில் காவலர்களை அனுப்பி மாநாட்டில் கலவரம் செய்ய வைத்தார்.இந்த கலவரத்தில் 9தமிழர்கள் கொல்லப்பட்டனர்.இதனால் தமிழ் ஈழ மாணவர்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. பின்னர் விரிசல் அவரை கொலைசெய்ய வேண்டும் என்ற வெறியாக மாறியது.
இதனால் தமிழ் ஈழ இளைஞர் சிவகுமாரன் ஆல்பட் துரையப்பாவையும்,காவல் ஆணையர் சந்திரசேகரையும் கொள்ள திட்டம் போட்டார்.இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சிவகுமாரன்,சந்திரசேகரை கொலை செய்ய முயர்ச்சி செய்தார்.ஆனால் அப்பொழுது கைதுப்பாக்கி பழுது அடைந்த காரணத்தால் அவரால் சந்திரசேகரை கொலைசெய்ய முடியவில்லை.பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள பொன்னம்பாளை எனும் இடத்தில் ஆல்பர்ட் துரையப்பனை கொலை செய்ய முயர்ச்சி செய்தார்.அந்த முயற்சியும் தோல்வி அடைந்து. இதனால் அவர் தமிழகம் செல்ல முயர்ச்சி செய்தார்.ஆனால் அவரிடம் தமிழகம் செல்ல பணம் இல்லை.இதனால் ஒரு வங்கியில் திருடி மாட்டி கொண்டார். பிறகு அவர் சயனைடு சாப்பிட்டு1974 ஜூலை 27 அன்று தற்கொலை செய்து கொண்டார்.இதன் பிறகு தமிழ் ஈழ போராட்டம் ஆனது ஆயுத போராட்டமாக மாறியது.சிவகுமாரன் தான் ஆயுத போராட்டத்திற்கு அடித்தளம் போட்டார். இதற்கிடையே தமிழ் புலிகள் ஆல்பட் துரையப்பாவை கொலை செய்ய திட்டம் போட்டனர்.இந்த திட்டத்தில் 4 பேர் பங்கு எடுத்துகொண்டனர்.அவர்கள் கலாபதி,கிருபாகரன்,பற்குணராஜ மற்றும் பிரபாகரன் ஆகியோர் பங்கு எடுத்தது கொண்டனர்.சிவகுமாரன் இறந்து முதலாம் ஆண்டு நினைவுநாள் 1974,ஜூலை 27 ம் தேதி இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு ஆல்பர்ட் துரையப்பா பாதுகாப்பு இன்றி வந்தார்.அவருக்கும கிருபாகரன் அவர்கள் வணக்கம் செலுத்தி விட்டு சென்றார்.பிறகு பிரபாகரன் துப்பாக்கியால் ஆல்பர்ட் துரையப்பாவை சுட்டார்.பிரபாகரன் சுட்ட குண்டு ஆல்பர்ட்டின் உயிரை பறித்தது.இதன் பிறகு இந்த செய்தி இலங்கை முழுவதும் காட்டு தீ போல் பரவியது.பிரபாகரனின் பெயர் இலங்கை முழுவதும் பரவியது. பிறகு 1976ம் ஆண்டு புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மாறியது. விடுதலை புலிகளின் கேப்டன் பிரபாகரன் ஆனார்....அதன் பிறகு புலிகளின் வேட்டை தொடர்ந்தது..........

No comments:

Post a Comment