Saturday, 2 July 2016

மூளைக்கு யோகாசனம் “தோப்புக் கரணம்” தெர்யுமா ..?

மூளைக்கு என்ன பயிற்சி எனக் கேட்டால், பலரும் தலையை அமுக்கி விடுவது, மனனம் செய்வது அதாவது ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்லுதல் என்று தான் சொல்வது வழமை.

ஆனால், முன்னாளில் நமது ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் நமக்கு வழங்கிய தண்டனை “தோப்புக்கரணம்” தான் மூளைக்கு சிறந்த யோகாசனம்.

தோப்புக்கரணம் போடுவதால் மூளை புத்துணர்ச்சி அடைகிறதாம், Autism எனப்படும் மன இறுக்கம் கொண்ட குழந்தைகள் கூட இந்தத் தோப்புக்கரணத்தால் நலன் பெறுகிறார்களாம்.

அதுமட்டுமின்றி உடலில்இரத்த ஓட்டம் சீராவதால் நினைவாற்றல் அதிகரிக்கிறதாம்.

யாராவது ஒரு குழந்தை அடங்காமல அடம்பிடித்தால் அல்லது கோபத்தால் கிடைப்பதை எல்லாம் எறிந்து உடைத்தால், “Go to yourroom and think what you did…” என்பதில்லையே…செய்த பிழைக்கேற்ப பத்து, பதினைந்து அல்லது இருபது முறை தோப்புக் கரணம் போடு! என்பதுதான் வழமை…

குழந்தைகளுக்கு மன இறுக்கம் இருந்ததோ இல்லையோ, மன இறுக்கம் இருந்தால், அது உடனேயே நிவர்த்தி செய்யப்பட்டுவிடும்.

அந்த நாட்களில் பாடசாலை மாணவர்கள் அவமானம் என நினைத்த தண்டனையான இந்தத் தோப்புக்கரணத்திற்கு அமெரிக்கர்கள் காப்புரிமை கூடப் பெற்றிருக்கிறார்கள்.

எழுபதுகளில் ஒரு ஜேர்மானிய மருத்துவர் இந்தியா சென்ற போது, இந்தியர் பிள்ளையாரைப் பார்த்து தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்து விசித்திரமாக எண்ணவில்லை.

அவர் இந்த விசித்திரமான செய்கையை ஆராய்ந்து அந்த நாட்டு மருத்துவ இதழில் இந்தத் தோப்புக் கரணம் உடலில் என்ன நன்மையைச் செய்யும் என விளக்கியிருந்தார்.

அதாவது, இடது காதுச் சோணையில் வலது கண் நரம்பின் முடிவிடமும்,வலது காதுச் சோணையில் இடது கண் நரம்பின் முடிவிடமும் இருப்பதால் இவற்றைச் சீரான அழுத்தத்துடன் அமுக்கி விடுவதால் கண்களிரண்டும் நல்ல பயிற்சி பெறும், இதனால் பார்வைக் கோளாறுகள் வராது என கூறியுள்ளார்.

இப்போது தெரிகிறதா தோப்புக் கரணத்தின் அருமை!

No comments:

Post a Comment