Thursday, 21 April 2016

தனது மணத்தாலும், இன்சுவையாலும் ஈர்க்கும் அன்னாசிப் பழத்தில் அநேக மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

தனது மணத்தாலும், இன்சுவையாலும் ஈர்க்கும் அன்னாசிப் பழத்தில் அநேக மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

அன்னாசியில் வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும்.

நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்துகளைக் கொண்ட அன்னாசிப் பழம், செரிமான சக்தியை அதிகரிக்கும்.

உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்குப் பலத்தைத் தருவதாகவும் இருப்பதோடு, பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் அன்னாசி இருக்கிறது.

உடம்பில் போதுமான ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு நல்ல மருந்து.

நன்றாகப் பழுத்த அன்னாசிப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் தூசிபடாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் படுக்கச் செல்வதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின்னர் படுக்கச் செல்லும்போது ஊறிய வற்றல்களை சாப்பிட வேண்டும். இதை 40 நாட்களுக்குத் தொடர வேண்டும்.

இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

பெண்கள் உள்பட அனைவரின் தொப்பையையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறுசிறு துண்டு களாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

அன்னாசிப்பழம் பித்தக் கோளாறுகளை விரைந்து சரியாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம். புரதம் தாராளமாக இருப்பதால் செரிமானக் கோளாறு, உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது.

No comments:

Post a Comment