Tuesday, 26 April 2016

வரிகள் : ஒரு அறிமுகம்

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், அரசின் வருமானத்தில் பெரும் பங்காற்றுவது Taxes எனப்படும் வரிகள் தான்.
வரிகள் தான் ஒரு நாட்டின் வருமானத்திற்கு ஆதார புள்ளி ஆகும். இந்த வரிகளால் தான், ஒரு அரசு தமது மக்களுக்கு பணியாற்ற, செயலாற்ற தேவையான நிதியினை பெறுகிறது. அதனால் தமது எல்லைக்குட்பட்ட வசிக்கும் பகுதிகளில் உள்ள மக்களின் மீதும், நிறுவனங்களின் மீதும் வரிகளை விதிகிறது. தயாரிக்கப்படும் பொருட்களின் மீதும், இடத்தின் மீதும், நாம் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்களின் மீதும் , ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களின் மீதும் , மற்றும் இன்னும் பிற மறைமுக வரிகளும் விதிக்கப் படுகின்றன. இவ்வாறு சேகரிக்கபட்ட வரிகளைக் கொண்டு தான், அரசு சிறந்த நிர்வாகத்தையும், சிறந்த சேவையினையும் மக்களுக்கு வழங்குகிறது.
இவ்வாறு நம் மீது திணிக்கபடும் சில வரிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
வருமான வரி INCOME TAX

ஒரு நாட்டின் சட்ட விதிகளின் படி, ஒவ்வொரு குடிமகனும் , நிறுவனமும் வருமான வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கிறது. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். அதிகம் வருமானம் ஈட்டும் ஒருவர், அதிக வருமான வரியையும், குறைந்த வருமானமீட்டும் ஒருவர் , குறைந்த வரியையும் செலுத்துகிறார்கள். மிக குறைந்த, வருமான வரம்பு எல்லையை தொடாதவர்கள் , வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. வருமான வரி சதவிகிதம் அவ்வப் போது மாறுபடும், அதன் வருமான வரம்பை பொறுத்து...

இப்படிபட்ட வருமான வரி, 1812 ல் அமெரிக்காவில் நடைபெற்ற போரின் போது தான் விதிக்கப் பட்டது. ஏனென்றால், போரினால் அமெரிக்காவிற்கு 100 மில்லியன் டாலர் கடன் ஏற்பட்டது. அதனை சரிகட்டும் விதமாகத்தான் இந்த வரி விதிக்கப் பட்டது. ஆனால் போர் முடிந்த பின்னர் அப்படியே நடைமுறையில் விடப்பட்டது. இதை தான் , இன்று அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்றன.
நிறுவன வரி CORPORATE TAX

இது ஒரு நிறுவனத்தின் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி ஆகும். இதனின் வரிச்சதவிகிதம், அந்நிறுவனத்தின் லாப அளவில் ஏற்படும் வித்தியாசத்தைப் பொறுத்து மாறுபடும். நாட்டின் மத்திய அரசு மட்டுமல்லாமல், அதன் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் கூட நிறுவனங்களின் மீது வரிகளை விதிக்கும்.
கலால் வரி EXCISE TAX

இது பொருட்களின் மீது விதிக்கப்படும் மறைமுக வரி ஆகும். இவை நேரடியாக பொருட்களின் மீது விதிக்கப் படாமல் உற்பத்தியாளர் மற்றும் வணிகர்கள் மீது விதிக்கப் படுகிறது.
சொத்து வரி PROPERTY TAX

உள்ளூராட்சி, நகராட்சி முதலியன அதன் எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் மேல், அதன் மதிப்பை பொறுத்து விதிக்கும் வரி ஆகும். இப்படி சேகரிக்கப் பட்ட வரிகளைக் கொண்டு தான், ஒரு நகராட்சி அதனுடைய சாலை, குடிநீர் மற்றும் பள்ளிகூட வசதிகளை ஏற்படுத்தி கொள்ளுகின்றன.
விற்பனை வரி SALES TAX

இந்த வரி வணிக விற்பனையாளர்களால் அரசுக்கு செலுத்தப்படும் வரி ஆகும். பொருட்களை விற்கும் போதும், இடத்தை விற்கும் போதும் இவ்வரி விதிக்கப் படுகிறது. பொருட்களின் மதிப்பை பொறுத்தும்,விற்பனையின் அளவை பொறுத்தும் இதன் வரி சதவிகிதம் மாறுபடும். உண்மையில் இந்த வரி, நுகர்வோர் மீது தான் விதிக்கப்படும் மறைமுக வரி. பொருள் வாங்கும் நுகர்வோருக்கு இந்த வரி பற்றி தெரிவதற்க்கு வாய்பில்லை. பின்னர், பொருளை விற்ற விற்பனையாளர், தான் விற்ற தொகையிலிருந்து கிடைத்த வரிப் பணத்தை எடுத்து அரசுக்கு செலுத்துகிறார்.
சேவை வரி SERVICE TAX

அரசும், உற்பத்தி நிறுவனங்களும் அவை வழங்கிய சேவையின் அடிப்படையில் நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரி ஆகும்.
ஏற்றுமதி வரி EXPORT TAX

உள் நாட்டில் உற்பத்தியான பொருளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் போது அதன் மதிப்பிற்கு ஏற்றவாறு விதிக்கப்படும் வரி ஆகும். இவ்வரியை ஏற்றுமதி நிறுவனங்களால் செலுத்த்ப் படுகிறது.
இறக்குமதி வரி IMPORT TAX

வெளி நாட்டில் உற்பத்தியான பொருளை நம் நாட்டில் இறக்குமதி செய்யும் போது அதன் மதிப்பிற்கு ஏற்றவாறு விதிக்கப் படும் வரி ஆகும். இவ்வரியை இறக்குமதி செய்யும் நிறுவனங்களால் செலுத்தப் படுகிறது.
இதனை சுங்க தீர்வை அல்லது சுங்க வரி எனலாம்.
மதிப்பு கூட்டபட்ட வரி VALUE ADDED TAX - VAT

இது நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரி ஆகும். பொருள் உற்பத்தியின் போது ஒவ்வொரு நிலையிலும் , அதன் மதிப்பிற்கு ஏற்றாற் போல் வரி விதிக்கப்படும். இப்படி கூட்டப் பட்ட வரிகளானது, பொருள் விற்பனைக்கு வரும் போது, அதனை நுகர்வோர் மீது விதிக்கப் படுகிறது. இத்தகைய வரி முன்பு மேலை நாடுகளில் மட்டும் தான் இருந்தது. தற்பொழுது இந்தியாவிலும் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.
சொத்து மதிப்பு வரி AD VALOREM TAX

Ad valorem எனப்படும் இவ்வார்த்தை (Latin) லட்டின் மொழியிலிருந்து உருவானது. இதன் அர்த்தம் According to Value என ஆங்கிலத்தில் கொள்ளப்படும். இதனை நாம் சொத்து மதிப்பு வரி எனலாம்.
ஒருவர் தான் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பை பொறுத்தோ அல்லது இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பை பொறுத்தோ விதிக்கப் படும் வரி - சொத்து மதிப்பு வரி எனப்படும்.
இத்தகைய வரி தான் ஒரு நகராட்சிக்கு அல்லது நாட்டிற்கு நல்ல வருமானத்தை ஈட்டி தருகிறது.
வருமான குவிப்பு வரி ACCUMULATED EARNINGS TAX

ஒரு நிறுவனம் தன் வருமானத்திற்கு அதிகமான வருமானத்தை ஈட்டுவதாக கொள்வோம். அந்த வருமானத்தை அந்நிறுவனம் தன்னிடத்தே வைத்திருக்க முயலுமானால் அதற்கு அரசு வரி விதிக்கிறது. இதனை வருமான குவிப்பு வரி எனலாம்.
எனவே நிறுவனங்கள் இந்த வரியை கொடுக்காமலிருக்க லாப பங்கீடை( Divident) வழங்குகிறது. இவ்வாறு வழங்குவதால் நிறுவனங்கள், அரசுக்கு குறைந்த அளவிலேயே வரியை செலுத்துகிறது.
வரி DUTY

அரசு சில பொருட்களின் மீதும், வியாபார பரிவர்த்தனைகளின் போதும், வழங்கும் சேவையினை பொறுத்தும் சுமத்தும் வரி தான் இந்த டூட்டி ( Duty) எனும் சுமை வரி. இதனை ஒருபோதும் தனிநபர்களின் மேல் சுமத்தப்படுவதில்லை. மாறாக பல்பொருள் பரிவர்த்தனைகளின் போதும், நிதி பரிவர்த்தனைகளின் போது மட்டும் தான் விதிக்கப்படுகிறது.
மறைமுக வரி HIDDEN TAXES

இந்த மறைமுக வரிகள் நுகர்வோரின் அறிவுக்கு தெரியாமலே , அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. இத்தகைய வரிகள், நுகர்வோருக்கு எதனால் விதிக்கப்படுகிறது என்பதை ஒருபோதும் தெரிவிக்கப் படுவதில்லை.
உதாரணம் : மதிப்பு கூட்டப் பட்ட வரி, விற்பனை வரி
வெகுமதி வரி GIFT TAX

ஒரு அரசு, தன் குடிமகன் ஒருவர், மற்றொருவருக்கு விலை உயர்ந்த பொருளை வெகுமதியாக கொடுத்தால் அதன் பேரில் ஒரு வரி விதிக்கிறது. அது தான் இந்த வெகுமதி வரி. இந்த வரியை வெகுமதி வழங்குபவர் தான் கொடுக்க வேண்டும். அத்தோடு அல்லாமல், பரிசு பெற்றவரும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் வரி செலுத்த வேண்டும். இந்த வரி , சில சமயங்களில் சாதனை புரிந்த இந்தியருக்கு வழங்கப்பட்ட பரிசின் போது விலக்கப் படுகிறது.

1. டெண்டுல்கர்க்கு கிடைத்த பெர்ராரி (Ferrari) கார் மீது 2. ரவி சாஸ்திரி கிடைத்த அவ்டி (Audi) கார் மீது வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
அபராதம் LEVY

அரசுக்கு கட்ட வேண்டிய வரியை காலம் தாழ்த்தி கட்டினால் அதன் மீது விதிக்கப்படும் கட்டணம் தான் அபராதம் ஆகும்.
உதாரணம் : குடிநீர் வரி, மின்சார வரி, டெலிபோன் வரி போன்ற வரிகளை காலம் தாழ்த்தி செலுத்தினால் ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப் படும் என்பது நமக்கு வரும் மாதகட்டண சீட்டில் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காணலாம். இந்த அபராதம் (Levy) லெவி எனப்படும்.
முத்திரை தீர்வு STAMP DUTY

ஒரு இடம் அல்லது மனை வாங்கும் போது, அதை (Document) பத்திரமாக மாற்ற , அந்த இடத்தின் மதிப்பிற்கேற்றார் போல , நாம் வாங்கும் முத்திரை தாளுக்கு செலுத்தும் தொகை தான் இந்த முத்திரை தீர்வு.
காலண்டர் வருடம் CALENDER YEAR

ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை உள்ள காலம் காலண்டர் வருடம்.
வரி ஆண்டு TAX YEAR

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் , தங்களின் வருடாந்திர கணக்கு வழக்குகளை சமர்பிக்க தேர்ந்துதெடுக்கும் ஏதேனும் 12 மாதங்கள் அடங்கிய வருடம் வரி ஆண்டு எனப்படும்.

உதாரணம் : ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை.
பிஸிகல் ஆண்டு FISCAL YEAR

ஒரு நிறுவனம் தன் வருட கணக்குகளுக்காக உபயோகப்படுத்தும் வருடத்தின் ஏதாவது 12 மாதங்கள். அவை காலண்டர் வருடமாகவும் இருக்கலாம் அல்லது வரி ஆண்டாகவும் இருக்கலாம்.
முடிவு வருடம் TERMINAL YEAR

வருமான வரி செலுத்தும் ஒருவர் இறந்த வருடத்தை குறிக்கும் ஆண்டு முடிவு வருடம் எனப்படும்.
பிடித்தம் DEDUCTION

வருமான வரி செலுத்தும் போது அதில் காட்டப்படும் வருமானம் என்பது நிகர வருமானத்திலிருந்து மொத்த செலவைக் கழித்து மீதியுள்ள தொகை தான் , வருமானமாக காட்டப்படும். இப்படி மொத்த செலவை நிகர வருமானத்திலிருந்து பிடிப்பதற்கு பிடித்தம் என்கிறோம். இதனால் வருமான வரி குறைவாக செலுத்தப்படுகிறது.
ஒதுக்கீடு WRITE OFF

ஒரு நிதி நிறுவனம், ஒரு சிறு தொழில் செய்பவருக்கு கடன் வழங்குவதாக கொள்வோம். வாங்கியர், ஏதோவொரு காரணத்தினால் திவாலாகி விட்டால், அவரால் கண்டிப்பாக கடனை திருப்பி அளிக்க முடியாது.
அந்நிலையில் நிதி நிறுவனம், இப்படி திரும்பி வராக் கடனை, தன் கணக்கில் செலவாக காண்பித்து ஒதுக்கீடு செய்கிறது.இதனை தான் ஒதுக்கீடு என்கிறோம்.
முதலீட்டு லாபம் CAPITAL GAIN

நாம் வாங்கிய ஒரு பொருள் அல்லது இடம், அதன் முதலீட்டு விலையை விட அதிக மதிப்பில் அல்லது அதிக விலையில் இருந்தால் அதை முதலீட்டு லாபம் எனலாம். இந்த லாபத்தை, நாம் பொருளை அல்லது இடத்தை விற்றால் மட்டுமே அடையலாம்.
முதலீட்டு நட்டம் CAPITAL LOSS

நாம் வாங்கிய ஒரு பொருள் அல்லது இடம், அதன் முதலீட்டு விலையை விட குறைந்த மதிப்பில் அல்லது குறைந்த விலையில் இருந்தால் அதை முதலீட்டு நட்டம் எனலாம்.
திரும்ப பெறும் நிதி REFUND

ஒருவர் , அரசுக்கு அதிக அளவில் வருமான வரி செலுத்திய பின்பு, அரசு அவரது கணக்கை சரிபார்த்து , அதிக வரி செலுத்தி இருந்தால் , நியாயமான வரியை மட்டும் எடுத்து கொண்டு மீதியை ஒரு காசோலையாக பணத்தை திரும்ப அளிக்கிறது.
இப்படி திரும்ப அளிக்கும் தொகையை தான் திரும்பப் பெறும் நிதி (Refund) என்கிறோம்.
உபரி கட்டணம் SURCHARGE

ஒரு அத்தியாவசிய பொருள் அல்லது வாகனம் வாங்கும் போது கூடுதலாக ஒரு உபரி தொகை அல்லது உபரி வரி சேர்க்கப் பட்டிருக்கும். இதை உபரி கட்டணம் எனலாம்.
வரி ஏய்ப்பு TAX EVASION

வரி ஏய்ப்பு என்பது மிக பெரிய குற்றம் ஆகும்.
ஒருவர் அல்லது நிறுவனம் தான் கட்ட வேண்டிய வரி கட்டாமல் அல்லது கட்டுவதை தவிர்த்து வந்தால் , அது வரி ஏய்ப்பாக கருதப்பட்டு, அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கும் , மிக பெரிய அபராத தொகையையும் விதிக்கும்.
வரி விடுமுறை TAX HOLIDAY

தொழிற் துறைகளுக்கு ஊக்கம் அளிக்கும் எண்ணத்தில் அரசு கொடுக்கும் ஒரு சலுகை. சில சமயங்களில் அரசு. வரியில் தள்ளுபடி அல்லது வரியே இல்லாமல் செய்வது போல சலுகைகளை வழங்கும். இதனால் அந்நிறுவனங்கள் நல்ல பலனடைந்து , அதன் வளர்ச்சியை பெருக்கும்.
அரசு, இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து , வெளி நாட்டு முதலீட்டாளர்களைக் கவரும்.
ஆண்டறிக்கை ANNUAL REPORT

1929 ம் ஆண்டு அமெரிக்க பங்குசந்தை பெரும் சரிவை அடைந்தது. அப்போது ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதில் அனைத்து நிறுவனங்களும் தங்களின் நிதி நிலை பற்றிய அறிக்கையை ஆண்டுகொருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்றது.
அதன் படி அந்த ஆண்டறிக்கையில் கீழ்கண்ட அம்சங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. அவைகள் பின்வருமாறு,
நிதி நிலை பற்றிய முக்கிய அம்சங்கள் பங்குதாரர்களுக்கு அனுப்பபட்ட கடிதங்கள் அனைத்து விவரங்கள், வரைவுகள், புகைப்படங்கள் நிர்வாகத்தின் விவாதங்கள், மற்றும் ஆராய்ச்சிகள் நிதி நிலை அறிக்கைகள் பற்றிய குறிப்புகள் தணிக்கையாளர் அறிக்கை நிதி பற்றிய அடிப்படை விவரங்கள் நிறுவன நிர்வாகிகள், இயக்குனர்கள் மற்றும் நிறுவனம் பற்றிய செய்திகள்/ தகவல்கள். 

 An Introduction

In a country's economy, the major role of the state to income taxes Taxes are called. 
There's reference point is one of the country's income. If these lines just to serve as a state for his people, work receives the necessary funds. So the people in their areas of jurisdiction and the vitikiratu taxes on corporations. Products manufactured over the place, and the essential things we use on a daily basis, export, import things, and other indirect taxes are imposed. The taxes collected by the state's best manages and provides the best possible services to the people. 
Thus we see here about the tinikkapatum some taxes. 
Income taxes INCOME TAX According to the legal provisions of the country, every citizen, who claimed that the company must pay income tax. This applies to all countries. One of the top-earning, high taxes, low income, who pay minimal taxes. Very low, income limits will not touch, do not have to pay income tax. When the respective income tax percentage varies, depending on its income limits ... this kind of income tax, in 1812, was held in the US during the war. Because the war was the US $ 100 million loan. This tax, was offset by the way.But after the war was practically intact. This is, today, all countries have followed. CORPORATE TAX Corporate tax is charged on the profits of a company. Variccatavikitam of the company's profit margin in the quantity will vary depending. Besides the central government of the country, even in its state and district administration to impose taxes on companies.EXCISE TAX Excise tax is an indirect tax which is levied on goods. They might not directly imposed on goods that is carried on by the manufacturer and merchants. Property Tax PROPERTY TAX local, municipal, etc. On top of its territorial assets, depending on the value of the tax is levied. With broad collection of taxes, a municipality of its road, and school facilities, drinking water and seek. SALES TAX Sales taxis a tax for this tax to the government and commercial vendors. Selling items, even though the location of the selling is carried reacted. Depending on the value of goods sold, the tax percentage varies depending on the size. In fact, this tax, indirect tax levied on consumers. About the tax on to consumers buying material terivatar potentiality. Then, the item is sold the seller, the sale proceeds from the amount of the tax money the state pays.Service tax SERVICE TAX state of institutions and services rendered on the basis of consumer charged on the. Export tax EXPORT TAX domestically produced product exports when its value changes depending charged is the line. If the tax proposal celuttp is exporting companies. IMPORT TAX import tax in the country of origin of the imported product, while our country is being carried out, according to its value is the line. Import tax proposal is paid by the institutions. This will probably be the customs duty or excise tax. Value kuttapatta tax VALUE ADDED TAX - VAT is charged on the consumer. During each stage of production, its value will be taxed in favor. Convene the broad lines of the object, when it comes to sales, it is carried on to the consumer. Such a tax was previously only in Western countries. India is currently implemented. The property value tax AD VALOREM TAX Ad valorem is the word (Latin) language evolved from Latin. According to Value, meaning that they will be in English.We managed property value tax Probably not.One thing that holds the property value porutto or imported value of goods porutto destined to be tax - the property value tax is called. Such a tax is a municipal or country better returns fetches. Income disproportionate tax ACCUMULATED EARNINGS TAX A company's income Let's highest revenue earners. The company itself is trying to keep the income tax imposed by the State. The income tax was concentrated. So companies in this line of distribution of dividends kotukkamalirukka (Divident) provides. Thus, it provides companies, government pays less tax. Tax DUTY state some things, enough of business transactions, the tax is not imposed with respect to service, the Call of Duty (Duty) of the load line. On top of this, no individuals cumattappatuvatillai. Instead supermarkets during transactions, financial transactions and only when imposed. Indirect tax HIDDEN TAXES knowing the knowledge of the indirect consumer taxes, imposed on them. That's the reward line. This line will give the reward to the issuer. In addition, rather than a certain percentage of the prize winner will have to pay tax. This line, sometimes while the exclusion of Achievement award is given to the Indians. 1.Tendulkar was the Ferrari (Ferrari) car on the 2. Ravi Shastri got avti (Audi) on the car tax was presented. Penalty LEVY government to pay tax late tying the charged fee's is a fine. For example, water line, power line, telephone line late payment of taxes that will be imposed a fine of a certain amount matakattana coming to us can be found on the seat had been mentioned. The fine (Levy) Levy called. Label solution STAMP DUTY a location or apartment when buying it (Document) to safely change the local matippirkerrar, as we purchase stamp paper pay just the label solution. The calendar year CALENDER YEAR January 1 to December up to 31 in the period of the calendar year. tax year tAX yEAR individuals and companies, in their annual accounts submitted terntutet something for 12 months, covering the year the tax year is called. example: April 1 to March 31.Physical year FISCAL yEAR a company's annual accounts for the use of the year some 12 months. The calendar year may be either the tax year may be. End Year TERMINAL YEARIncome tax payments the death of the year will mark the close of the year the year the.Deduction DEDUCTION paying income tax when it is displayed on income Net income Total costs minus the remaining amount, the income will be displayed. Net income was deducted from the total cost of capture occurs.The income tax is paid less. WRITE OFF provision of a financial institution, for those who run a small business loan will be provided.Vankiyar, a reason not bankrupt, if he must repay the loan can not provide. Then the financial institution, the return of bad debts, in his account of expenditure showing the allocation ceykiratuitanai's reservation call.Investment Non CAPITAL GAIN , we have purchased a product or location, its investment than price the higher the value, or at a higher price if it was profitable investment. These profits, not the object or the space only by selling niche. Investment loss CAPITAL LOSS , we have purchased a product or location, its investment than low-value or low price if it is not an investment loss exists. Withdrawal of financial REFUND one state at a higher level of income tax and , the state of his account, check the excess tax paid, the fair tax is taken only with the balance a check refund offers. and to return the amount, the redemption fund (refund) call. surplus fee sURCHARGE an essential object or vehicle when purchasing in addition to a surplus amount or surplus would have been added to the line. This surplus payment exists. Tax evasion TAX EVASION Tax evasion is the biggest criminal offense. One or the company's build-to-tax defaulting or packing avoided if it is tax evasion considered, Government upon them to take tougher actions, the biggest fines levied. Tax Holiday TAX HOLIDAY intended to encourage industrial growth in the state will pay a concession.Sometimes government. As tax rebates or tax concessions do without. The good companies benefiting not promote growth. The government took these steps, to lure foreign investors. REPORT Annual Report 1929 the year the US stock market suffered a sharp decline. Then a law was enacted. In which all companies report on their financial position to be submitted antukorumurai said. According to its annual report that stated that the following aspects should be mandatory. They are as follows, the financial position of all the details of the main features of the letters sent to shareholders, drafts, photos, management's discussion and research notes auditor's report on the financial statements are based on financial information from corporate executives and directors of the company to News / Information. 

Monday, 25 April 2016

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.
இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!
ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!
அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.
பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.
எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.
தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.
இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.
பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.
இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.
ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.
இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.
“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர். —

உலகத்திலேயே பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் ஒரே நோய் நீரிழிவு தான்.


உலகத்திலேயே பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் ஒரே நோய் நீரிழிவு தான். இதற்குப் பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அவை நல்ல ரிசல்ட்டுகளைக் கொடுத்து வந்தாலும், கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளும் அவசியமாகிறது
இயற்கையாக நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள் நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இருக்கின்றன. இவற்றைச் சாப்பிட்டு வந்தால், ஏற்கனவே நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மற்றவர்கள் இதைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு நோயையே நெருங்க விடாமல் தடுக்க முடியும்.
நீரிழிவு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள்!!
ப்ராக்கோலி :-
உலகிலேயே மிகவும் சத்தான காய்கறிகளில் ப்ராக்கோலிக்குத் தான் முதலிடம். இதிலுள்ள சல்ஃபோரபேன் என்ற கூட்டு வேதிப் பொருள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளும், அவ்வியாதியைத் தடுக்க நினைப்பவர்களும் தங்கள் உணவில் கண்டிப்பாக ப்ராக்கோலியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பசலைக் கீரை :-
பசுமையான கீரை வகைகள் அனைத்துமே நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் வல்லவை. குறிப்பாக, பசலைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயே நமக்கு வராமல் தடுத்து விடலாம் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பீட்ரூட் :-
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பீட்ரூட் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இது பெரிதும் உதவுகிறது. எனவே நாம் எல்லோரும் கண்டிப்பாக பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு :-
இந்தக் கிழங்கில் உள்ள ஆந்தோசையனின் என்ற பொருளுக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. எரிச்சல் மற்றும் வைரஸுக்கு எதிரான பண்புகளும் இக்கிழங்கில் நிறைந்திருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அருமையான உணவாகும்.
கேல் :-
கோஸ் வகையைச் சேர்ந்த இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களான பி-6 மற்றும் கே ஆகியவை மிகுந்து காணப்படுகின்றன. இவை எல்லாம் நீரிழிவின் முக்கிய எதிரிகள் ஆகும்.
முட்டைக்கோஸ்:-
நீரிழிவு நோயைத் தடுப்பதில் முட்டைக்கோஸுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. இரத்தத்தில் உள்ல சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கணையங்களின் முறையான இயக்கத்திற்கும் அது உதவுகிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இன்சுலினை சுரப்பதே இந்தக் கணையங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்பாரகஸ் :-
கணையம் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் இயக்கங்கள் சிறப்பாக இருப்பதற்கு இது ஒரு முக்கியமான உணவாகும். இன்சுலின் அளவை அதிகரித்து, அதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இது நன்றாகக் கட்டுப்படுத்துகிறது.
பீன்ஸ் :-
நமக்கு மிகவும் எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் பீன்சும் ஒன்றாகும். நீரிழிவுக்கு எதிரான பண்புகள் பீன்ஸில் நிறைய உள்ளன.
கேரட் :-
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டினுக்கும் ஒரு முக்கியப் பங்கு உள்ளது. மேலும், கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
பூண்டு :-
பூண்டில் உள்ள மருத்துவக் குணங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நீரிழிவைத் தடுப்பதிலும் பூண்டு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால்களைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் பூண்டு குறைக்கிறது.