Friday, 22 November 2024

பாய் வீட்டு பிரியாணியின் ரகசியம் இதோ உங்களுக்காக

பாய் வீட்டு பிரியாணியின் ரகசியம் இதோ உங்களுக்காக .......

இனி பிரியாணிக்கு இந்த மசாலாவை அரைத்து பயன்படுத்துங்கள்….......

பிரியாணி மசாலா செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் அடுப்பில் வைத்துக் கொள்ளவும். 

முதலில் 100 கிராம் அளவு தனியாவை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். 

தனியா (முழு மல்லி) வறுபட்டதும் அதனை தனியாக வைத்துவிட்டு 25 கிராம் மிளகு சேர்த்து வறுக்கவும். 

பிறகு 25 கிராம் சோம்பு, மற்றும் 25 கிராம் சாய் ஜீரோ சேர்த்து இரண்டையும் மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். 

சாய்ஜீரா பிரியாணிக்கு சுவை கூட்டக்கூடிய ஒரு மசாலா பொருள். இவை இரண்டையும் வறுத்த பிறகு தனியாக வைத்து விடலாம்.

இப்பொழுது 15 கிராம் கிராம்பு, 25 கிராம் அளவிற்கு சுருள் பட்டை, 25 கிராம் நட்சத்திர பூ, 15 கிராம் ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும். 

சுருள்பட்டை இல்லை என்றால் சாதாரண பட்டை உபயோகிக்கலாம் ஆனால் சுருள்பட்டை கூடுதல் வாசனை கொடுக்கும். 

இவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்த பிறகு 25 கிராம் மராத்தி மொக்கு சேர்த்து வறுக்க வேண்டும்.

ஜாதிப் பத்திரி 5 கிராம் அளவு சேர்த்து அதையும் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். ஜாதி பத்திரி உணவிற்கு அதிக காட்டம் கொடுத்து விடும். எனவே 5 கிராம் மட்டும் சேர்த்தால் போதுமானது. 15 கிராம் அளவிற்கு பிரியாணி இலை சேர்த்து அதையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். 10 கிராம் அளவிற்கு பெரிய ஏலக்காயை சேர்த்து அதையும் நன்றாக வறுத்து வைத்து விடவும். 10 கிராம் கல்பாசி, 25 கிராம் காய்ந்த ரோஜா இதழ் ஆகியவற்றையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். மூன்று ஜாதி காய்களை இடித்து அதையும் கடாயில் சேர்த்து வறுத்து எடுக்கவும். மொத்தத்தில் ஒவ்வொரு மசாலா பொருளையும் தனித்தனியாக இரண்டு நிமிடங்கள் வரை வறுத்தால் போதுமானது. அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும்.

இப்பொழுது நாம் வறுத்து எடுத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். மராத்தி மொக்கு மற்றும் பெரிய ஏலக்காய் இரண்டும் மிக்ஸியில் அரைபடாது எனவே இவற்றை தனியாக இடித்து மிக்ஸியில் சேர்க்கலாம். இப்பொழுது அனைத்து பொருட்களையும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் பொடியாக அரை பட்ட பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலிலோ அல்லது காற்று புகாத கொள்கலனிலோ வைத்து இறுக்க மூடி வைத்து விடவும். இந்த மசாலா ஒரு வருடம் ஆனாலும் கெடாது. அனைத்து வகையான பிரியாணிக்கும் இந்த மசாலாவை நீங்கள் உபயோகப்படுத்தலாம்.........

#திண்டுக்கல்சமையல்

Tuesday, 6 February 2024

லஞ்சம்


 லஞ்சம் வாங்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் டெல்லியிலிருந்து ஆப்பு வந்தாச்சு . உடனே டிஸ்மிஸ்தானாம். பார்க்கலாம் வாங்க

அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி..

அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!

அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாடா என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் கலங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

எனக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,
அத்தி பூக்கும் தருணமாய்..!

என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!
என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

தொலைபேசியில்...
உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..!

கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்
என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்...! Pls read and share