Wednesday, 31 March 2021

*சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*

*சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*

1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
 
2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.

3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.

4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.

5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.

6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.

7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.

8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.

9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.

10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.

11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.

12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.

13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.

14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது. 

15.பழனி அருகே தென்னந்தோப்பு.

16.ஊட்டியில் எஸ்டேட் தொழில். 

இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை. 

ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.

கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...

வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?

இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...

இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?

இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!

*சீமானின் அரசியல்*

1982- 1985 திமுக
1986- 1988 அதிமுக
1988 - 1991 காங்கிரஸ்
1992 - 1996 கம்யூனிஸ்ட்
1996 - 2004 திமுக
2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
2007 - 2009 மதிமுக ஆதரவு
2009 - 2011 அதிமுக ஆதரவு
2012 -  நாம் தமிழர் (பெரியார் வழி)
2014 -நாம் தமிழர்  (பிரபாகரன் வழி)
2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
2016 முதல்  முப்பாட்டன் முருகன் வழி

இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
விழிப்புணர்வு பதிவு...

அன்பு நண்பர்களே அருமை காவலர்களே

நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர்  அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
இரவல் இல் கட்சி நடத்திய
இவ்வளவு சொத்து சீமானுக்கு

இந்த பதிவினை அனைவரும் பகிருங்கள் காவலர்களே

Tuesday, 30 March 2021

 

Wednesday, 17 March 2021

https://www.google.co.in/url?q=https://www.dailythanthi.com/&sa=U&ved=2ahUKEwianbfFjrjvAhUPOisKHYPBC1QQFjAAegQIAxAB&usg=AOvVaw0gmiEYHlj92OQHjA28CjIb 

நாம் பாதுகாக்க மறந்த சொடக்கு தக்காளியின் சொக்க வைக்கும் மகிமைகள் | 90’ஸ் கிட்ஸ் ஃபேவரைட்

நமக்கு அருகில் இருக்கும்போது சில பொருட்களின் அருமையும் பெருமையும் தெரியாது. அப்படி நாம் கவனிக்கத்தவறிய ஒரு அரிய மூலிகை தாவரம் தான் இந்த சொடக்குத் தக்காளி. முன்பெல்லாம், கிராமப்புறங்களின் சாலையோரங்களிலோ அல்லது வீடுகளின் அருகாமையிலோ வயல்வெளிகளிலோ அதிகம் காய்த்து குலுங்கி கொண்டிருக்கும் இந்த  சொடக்குத்  தக்காளி. ஆனால், இன்றோ இதை காண்பதே அரிதாகிவிட்டது. 

நம் கிராமங்களில் இருந்த இந்த அரிய மூலிகையை நாம் பாதுகாக்க தவறவிட்டாலும் பல வெளிநாடுகளில் இந்த சொடக்குத் தக்காளியை ஆயிரங்களில் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அப்படி வெளிநாடுகள் வரை பிரபலம் ஆகும் அளவுக்கு இந்த சொடக்குத் தக்காளியில் என்னதான் நன்மைகள் இருக்கு என்று தானே கேட்கிறீர்கள்? அதைப் பற்றி தான் இந்த காணொளியில் பார்க்கப் போகிறோம். 

நம்மில் பல பேருக்கு சொடக்கு தக்காளி என்ற ஒன்று இருக்கிறதா என்பதே தெரியாது. இதில் அதனுடைய பயன்கள் அறிந்திருப்பதை பற்றி கேட்கவா வேண்டும். கிராமப்புறங்களில் அதிகம் வளர்ந்த 90’ஸ் கிட்ஸ் இந்த தக்காளிப்பழத்தை செடியில் இருந்து பறித்து, நெற்றியில் வைத்து உடைத்து விளையாடுவர். அதுவும் உடையும் போது கேட்கும் சொடக்கு சத்தம் கேட்கையில் தோன்றும் 90’ஸ் குழந்தைகளின் புன்னகைக்கு ஈடே இல்லை. இதனால்தான் இந்த மூலிகை பழத்திற்கு ‘சொடக்கு தக்காளி’ என்ற பெயரே வந்தது.

எந்தவிதமான பக்க விளைவுகளையும் உண்டாக்காத இந்த சொடக்கு தக்காளியில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. இந்த சொடக்கு தக்காளி இலைகளையும், கனிகளையும் மஞ்சள் சேர்த்து அரைத்து சரும கட்டியின் மேல் பத்து போட்டு வந்தால், கட்டிகள் சுலபமாக கரையும். கட்டியினால் ஏற்படும் வலியும் சுலபமாக நீங்கிவிடும்.

இந்தச் சொடக்குத் தக்காளி செடியின் இலைகளையும், காய்களையும் நசுக்கி, ஒரு டம்ளர் அளவு நல்ல தண்ணீரில் போட்டு, நன்றாக கொதிக்க விட்டு அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மூட்டுவலியால் அவதிப்படும் வயதானவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக அமையும். இந்த மருந்தை புற்றுநோய் உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வரலாம். புற்று நோயினால் ஏற்படக்கூடிய பெரிய அளவிலான பாதிப்புகளை குறைக்க வல்லது என்றும் சில மருத்துவ குறிப்புகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். நாம் சாப்பிடும் அதிக உணவுகள் கூட ஜீரணம் ஆகவேண்டுமென்றால் இந்தப் பழத்தைச் சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்தானது செரிமானத்தை எளிதாக்குகிறது. 

இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த சொடக்குத் தக்காளியின் மகிமைகளை எல்லாம் நாம் தெரிந்துக்கொள்ள தவறவிட்டாலும், இதை தெரிந்துக்கொண்ட வெளிநாட்டினர் இதை பாக்கெட் செய்து 3,000 ரூபாய் வரை ஒரு கிலோவை விற்பனை செய்து வருகிறார்களாம். இனிமேலாவது, சொடக்குத் தக்காளியின் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை அறிந்துக்கொண்டு  எங்காவது கிடைத்தால் நாமும் வீட்டில் வளர்க்கலாம். இதை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம்.  அக்கறையுடன்

Tuesday, 16 March 2021

மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள்

நாம் சர்வ சாதாரணமாக சாலையோரங்களில் காணும் சில செடிகள், மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை அவற்றின் அளப்பரிய நற்பலன்களின் மூலம், அறிந்திருப்போம். அந்த வகையில் களைச் செடி என விவசாயிகள் ஒதுக்கும் ஒரு செடிதான், மனிதர்களுக்கு, அரிய மூலிகையாக, அவர்களின் ஆயுளை காக்கும், காயகற்ப மூலிகையாக விளங்குகிறது என்பதை, அவர்களில் பலர் கூட அறிந்திருக்க மாட்டார்கள். இன்றைக்கு நகரங்களில் மூலிகைகளின் மேல் உள்ள ஈர்ப்பு, கிராமங்களில் இன்னும் பரவலாகவில்லை, என்பது ஆச்சரியம் என்றால், அதை விட மற்றுமொரு ஆச்சர்யம், பெரும்பாலான கிராம மக்கள் சில மூலிகைகளின் பெயர் மற்றும் அவற்றின் பயன்கள் கூட அறியாமல் இருப்பது தான்.

எதன் மீதும் பற்றிப் படராமல், நிலத்தில் படர்ந்து, தன் தனித் தன்மையை நிரூபித்து வளரும் ஒரு செடிதான், மூக்கிரட்டை. அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை செடிகளின் இலைகள் பசுமை வண்ணத்தில், தண்டுகளில் தனித்தனியே காணப்படும். சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும் மூக்கிரட்டை, அரிய தன்மைகள் உடைய ஒரு நற்செடியாகும். உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்க இதன் இலைகளில், பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்துள்ளன.

மருத்துவ குணங்கள்
மூக்கிரட்டை செடி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் வல்லமை பெற்றதாகத் திகழ்கிறது.
மூக்கிரட்டை உடலில் இறங்கும்போது, அங்கே, வாத வியாதிகள் எல்லாம், அடங்கி, வாதம் உடலில் சீராகும். இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்க, கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைந்து நச்சு நீர் வெளியேற, மூக்கிரட்டை உதவி செய்யும்.
புற்று நோய்கள் புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும், தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையை தக்க வைக்கும்.
மூளைக்கு ஆற்றலை அளித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், மனதிற்கு உற்சாகத்தையும் உண்டாக்கும்.
மூக்கிரட்டை இலைகள், பொன்னாங்கன்னி இலைகள் மற்றும் கீழாநெல்லி இலைகள் ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்துக் கொண்டு, அவற்றை நன்கு அரைத்து, சிறிதளவு மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, கலங்கலான பார்வை மற்றும் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் விலகி, கண் பார்வை, தெளிவாகும்.
மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சமமாக எடுத்துக் கொண்டு, தூளாக்கி, தினமும் இரு வேளை தேனில் கலந்து உண்டு வர, உடல் எடை குறைந்து, உடல் வனப்பு மிகுந்து காணப்படும்.
மூக்கிரட்டை சமூலம் எனும் முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, தினமும் இரு வேளை, சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வாகி, இளமைப்பொலிவுடன் காணப்படும்.
மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் சரியாகும்.
மூக்கிரட்டை வேர்கள் சற்று நீளமாக, சிறிய மரவள்ளிக் கிழங்கு போல காணப்படும். இரத்தச் சோகை, இதய பாதிப்புகள் போன்ற வியாதிகளுக்கு, சிறந்த மருந்தாகிறது. மூக்கிரட்டை வேரை நீரில் இட்டு ஆற வைத்து பருகி வர, இரத்த சோகை, சளித் தொல்லை நீங்கும்.
மூக்கிரட்டை வேரை சற்று இடித்து, விளக்கெண்ணையில் இட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும். இதன் மூலம், உடலில் சேர்ந்து இருந்த நச்சு நீர், நச்சுக்கிருமிகள் யாவும் மலத்துடன் வெளியேறி விடும். இதுநாள் வரை இந்த நச்சுக்களால், உடலில் ஏற்பட்டிருந்த சரும வியாதிகள், அரிப்பு மற்றும் வாதம் சார்ந்த வியாதிகள் அனைத்தும் சரியாகி விடும்.
உணவாலோ வேறு பாதிப்பின் காரணமாகவோ, உடலில் ஒவ்வாமை ஏற்படும்போது, அதனால், உடலில் நமைச்சல் எனும் அரிப்பு உண்டாகும். இதனால், எப்போதும், கைகளால் அரிப்புள்ள பகுதியை சொரிய வேண்டிய நிலை ஏற்பட்டு, அதுவே, முக்கியமான அலுவல்களில் இருக்கும் போதும் நம்மை அறியாமல் சொரிய வைத்து, மற்றவர்கள் என்ன என்று கேட்கும் அளவுக்கு, மிக்க ஒரு மன வேதனையை அளிக்கும் செயலாக மாறிவிடும். இந்த பாதிப்பைப் போக்க, உலர்த்திய மூக்கிரட்டை வேரை சற்று, இடித்து, ஒரு தம்ளர் நீரில் காய்ச்சி, ஆற வைத்து, அந்த நீரில் சற்று விளக்கெண்ணை கலந்து தினமும் இரு வேளை பருகி வர, ஒவ்வாமையால் ஏற்பட்ட உடல் அரிப்பு விலகி, சருமத்தில் புதுப் பொலிவு ஏற்படும்.
உடலில் வியாதிகளால் ஏற்பட்ட நச்சு நீரால், சளியும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, அவை தினசரி இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். இதை சரி செய்ய, முன் சொன்ன முறையில் காய்ச்சிய மூக்கிரட்டை வேர் நீரில், சிறிது மிளகுத்தூள் கலந்து பருக, மூச்சுத் திணறல் பாதிப்புகள் சரியாகி விடும்.
சிறுநீரக பாதிப்புகளின் கடுமையான விளைவுகளால் இரத்தத்தில் நச்சுக்கள் அதிகரிப்பால், சிறுநீரகங்களின் இயக்கம் செயல் இழக்கும் அபாய நிலை ஏற்படும். அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர, மூக்கிரட்டை வேரை சிறிது எடுத்து ஒரு தம்ளர் நீரில் இட்டு, அதில் சிறிது சோம்பு சேர்த்து, காய்ச்சி, ஆற வைத்து, தினமும் பருகி வர, பக்க விளைவுகள் ஏதுமின்றி, பாதிப்புகள் மெல்ல விலகும், சிறுநீர் அடைப்பை நீக்கி, சிறுநீரகத்தைக் காத்து, சிறுநீரகக் கற்களையும் கரைத்து வெளியேற்றும் தன்மை மிக்கது.
இந்த மருந்தை எடுக்கும் போது, மலக்குடலை சுத்தம் செய்யும் மூக்கிரட்டை வேரின் தன்மையால் மலம் இளகி, வயிற்றுப்போக்கு ஏற்படும், இதனால் பாதிப்பில்லை, உடலுக்கு நன்மைதான் உண்டாகும்.
மூக்கிரட்டை வேரைத் தூளாக்கி, அதை தினமும் இருவேளை தேனில் கலந்து சிறிதளவு சாப்பிட்டு வர, மங்கலாகத் தெரியும் கண் பார்வைக் குறைபாடு மற்றும் மாலைக்கண் பாதிப்புகள் போன்ற கண் வியாதிகள் யாவும் விலகி விடும்.

Thursday, 11 March 2021

🔱ஓம் சிவ சிவ ஓம் 🔱

சிவன் சொத்து குலநாசம் என்பார்கள் அதற்காக விளக்கம்.

இந்து சமயத்தில் பெருமாள்,சிவன்,என இரு பெரும்தெய்வங்கள் உண்டு . இதில் பெருமாள் பார்ப்பதற்கு பொன்பொருள் ஆடைஆபரணங்கள்,
நைவேத்தியங்கள் என கண்களை கவரும் வகையில் இருப்பார்.

ஆனால் ஈசன் ஜடாமுடியுடன் இடுப்பில் புலித்தோல் தறித்து.உடலில்சுடுகாட்டுச்சாம்பல் பூசிக்கொண்டு கையில் திருவோடு ஏந்தி பார்ப்பதற்குபரதேசிக்கோ
லத்தில் இருப்பார்.

பெருமாளிடம் உலகியலுக்கு தேவையான அனைத்தும் இருப்பதால் அவர்மீது பக்திகொண்டு மக்கள் வழிபட்டுஅவரிடம்கோரிக்கை வைப்பது இயல்பான விசயம்.

ஆனால் ஈசன் அப்படி அல்ல.. அவர்மீது பக்தியை காட்டிலும் பயம் வருவது தான் நிதர்சனம்.அவருடைய அலங்காரம்அப்படி.பெருமாளை யார் வேண்டுமானாலும் வணங்கலாம்.ஆனால் ஈசனை வணங்க ஈசனே
தேர்தெடுத்தால் மட்டுமே அவர்மீதுபக்திகொள்ள
முடியும்.

பெருமாளை வணங்குவது தகப்பனின் கையை மகன் பிடித்துச்செல்வதுபோலாகும்
தகப்பனின் கையை பிடித்துச்செல்லும் குழந்தை வழியில் ஏதாவது பள்ளம் வந்தால்.கிழே விழுவதற்கு வாய்ப்பு அதிகம்.

ஈசனை வணங்குவது தகப்பன் குழந்தையின் கையை பிடிப்பதுபோலாகும்.
தகப்பனால் கரம்பற்றி அழைத்துச்செல்லப்படும் குழந்தை கீழேவிழுவதற்கோ.
வழி

Tuesday, 9 March 2021

ஏலக்காய் மருத்துவ பயன்கள்

ஏலக்காய் வாசனை பொருளாக பார்க்கப்படும் நிலையில், அதில் பல இயற்கை நன்மைகள் உள்ளன.  நன்மைகளை பற்றி இங்கு காண்போம்...

1 ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.
2 வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
3 ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
4 சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌ட் என எதையாவது வா‌யி‌ல் போ‌ட்டு அசை போடுவதா‌ல் எ‌ந்த‌ப் பலனு‌ம் இ‌ல்லை. அத‌ற்கு‌‌ப் ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடுவது நல்லது.
5 ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும்.
6 ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்.
7 அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
8 ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.
9 நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.